Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரவு செலவு திட்டத்தில் மஹிந்த நிறுவனத்தின் மிஹின் லங்கா மீண்டும் 2000 மில்லியன் ரூபாவை கோருகிறது

Featured Replies

கஸ்டத்தை எதிர்நோக்கி உள்ள மிஹின் லங்கா விமான சேவையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் இம்முறை வரவுசெலவு திட்டத்தில் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவை கோரியுள்ளதாக விமான சேவை அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

அதேவேளை மிஹின் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக ஹேமலால் தல்கஸ்வத்த, இலங்கை பூமிபுத்ர அபிவிருத்தி வங்கியின் தலைவர் சரத் சில்வா, விமானப்படைத் தளபதி ரொஸான் குணதிலக்க, ஸந்தன லியபட்டபெந்தி, நிதியமைச்சின் சார்பில் கலாநிதி சமரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மிஹின் லங்கா விமான சேவையில் பணியாற்றிய 200 ஊழியர்களில் 40 பேர் விலகிச் சென்றுள்ளதாகவும் எஞ்சியுள்ள ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் விமான சேவை அமைச்சின் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விமான நிறுவனம் பல்வேறு துறைசார்ந்த நிறுவனங்களுக்கு 700 மில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளதாகவும் கடந்த முறை வரவுசெலவு திட்டத்தின் போது 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டபோதும் அந்த நிதி உரிய முறையில் மிஹின் லங்கா நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

மிஹின் லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சஜீத் வாஸ் டி குணவர்தன நிர்வாகத்தின் போது, ஒரு வருடத்தில் 2 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாகவும் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை அமைச்சுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் விமான சேவைகள் அமைச்சின் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108

Edited by தராக்கி

வணக்கம் தராக்கி,

சுறுசுறுப்பாக இங்கு செய்திகளை இணைத்து வருகின்றீர்கள். நன்றி! நீங்கள் செய்திகளை எங்கிருந்து வெட்டி ஒட்டுகின்றீர்கள் என்று அவற்றின் மூலத்தையும் குறிப்பிட்டால் நாமும் தூக்கம் வராத மற்றும் பொழுதுபோகாதநேரங்களில் அந்தந்த இணையத்தளங்களிற்கு நேரடியாக சென்று செய்திகளை வாசிக்க கொஞ்சம் உதவியாக இருக்கும்.

நான் கூகிழிள் தேடல் செய்து பார்த்தபோது நீங்கள் உங்கள் தளத்தில் இணைத்த.. மன்னிக்கவும் ஒட்டிய பல செய்திகள் இன்னொரு தளத்தில் ஏற்கனவே இருக்கின்றது.

=> http://globaltamilnews.com/index.php :icon_idea:

பி/கு: நீங்கள் மறைந்த மாமனிதர் சிவாராமின் ஆவியாக இருந்தால் என்னை மன்னித்துகொள்ளவும்.

உங்கள் தளம் பயனுள்ளதாக இருக்கிறது. அனதை;துசெய்திகளையும் ஓரிடத்தில் படிக்கக்கூடியதாக உள்ளது. நீங்கள் வெட்டி ஒட்டுகிறீர்களா அல்லது சொந்தமாகப்போய் சேகரிக்கிறீர்களா என்பது பற்றிய பெரிதாக அக்கறை எமக்கு இல்லை.

  • தொடங்கியவர்

மன்னிக்கவும் இது என்னுடைய தளமல்ல ஆனால் இங்கு செய்திகளை பார்பேன் பிடித்தால் யாழில் இடுகையிடுவேன் அவ்வளவுதான் இது ஒரு கனேடிய இணையம் இதில் பல இடத்து செய்திகள் கிடைக்கும் தமிழ் கனேடியன் தமிழ் வின் மாதிரி ஆனால் விரைவாக வரும் அதனால் எனக்கு இத்தளம் பிடிக்கும்

பதில் கொடுத்ததற்கு நன்றி.தொடரட்டும் உங்கள் பணி.கருத்துக்களை உள்வாங்குவது தான் உங்களை போன்றவர்களின் வெற்றி தங்கி உள்ளது.

உங்கள் தளம் பயனுள்ளதாக இருக்கிறது. அனதை;துசெய்திகளையும் ஓரிடத்தில் படிக்கக்கூடியதாக உள்ளது. நீங்கள் வெட்டி ஒட்டுகிறீர்களா அல்லது சொந்தமாகப்போய் சேகரிக்கிறீர்களா என்பது பற்றிய பெரிதாக அக்கறை எமக்கு இல்லை.

மன்னிக்கவும் இது என்னுடைய தளமல்ல ஆனால் இங்கு செய்திகளை பார்பேன் பிடித்தால் யாழில் இடுகையிடுவேன் அவ்வளவுதான் இது ஒரு கனேடிய இணையம் இதில் பல இடத்து செய்திகள் கிடைக்கும் தமிழ் கனேடியன் தமிழ் வின் மாதிரி ஆனால் விரைவாக வரும் அதனால் எனக்கு இத்தளம் பிடிக்கும்

பதில் கொடுத்ததற்கு நன்றி.தொடரட்டும் உங்கள் பணி.கருத்துக்களை உள்வாங்குவது தான் உங்களை போன்றவர்களின் வெற்றி தங்கி உள்ளது.

இது நன்னா இருக்கிது. யாரோ ஒருத்தன் இரவு பகலா வேலை செய்து, நித்திரை முழிச்சு, தகவல் சேகரிச்சு, மொழிபெயர்த்து போடுற செய்திகள நீங்கள் உங்கட தளத்தில உங்கட செய்திகள் மாதிரி போடுறதுக்கு பெயர் சேவை இல்ல, திருட்டு. இது சுத்த அபத்தம். உங்கட இந்த சேவையை (திருட்டை) ஆமோதிக்க கூட்டம் வேற. கொடுமை. எங்க திருட்டு கும்பல்கள் இருக்கிற இடத்தில அபிப்பிராயம் சொன்னது எனது தவறுதான்.

வணக்கம் முரளி கன காலத்துக்கு பிறகு நலமா?

அப்பிடியே மொத்தமாக வெட்டிப் போட்டா மொழிபெயர்த்து போட்டா திருட்டுத்தனம் என்றம்.

ஒரு குறித்த செய்தியை சொல்லுவதற்கு ஆதாரங்களாக 4 இடத்தில் பொறுக்கி கோர்த்துப் போட்டா அதை ஆய்வு எங்கிறம்.

அதையும் நம்மவர்கள் செய்தா திருட்டுத்தனம் என்றம் வேறையாரும் செய்தாத்தான் ஆய்வு எண்ணுவம்.

உதாரணத்துக்கு சி இதயச்சந்திரன் சீனாவின் இந்து சமுத்திரத்திர முத்து மணி திட்டம் பற்றி பி இராமனின் ஆய்வில இருந்து திருடிப்போட்டது என்றம். இராமன் எங்கிருந்து எடுத்தார் எண்டு கேள்வி கேக்கவில்லை. அதுவும் எமது முன்னணித்தளம் ஒன்றிலேயே மூலம் இருந்தும்.

http://www.tamilnation.org/intframe/indian...g_of_pearls.pdf

உந்த விவகாரங்களில் நாங்கள் பயணிக்க அதிக தூரம் இருக்கு. :icon_idea: சில வேளை அடுத்த சந்ததி உங்கடை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யலாம்.

புதினம். தமிழ் நெற். தமிழ் வின் பதிவு கூட செய்கின்றது சிரமத்துக்கு மத்தியில் தான் செய்தியை சேகரிக்கின்றார்கள் இவற்றை இங்கு இணைக்கும் போது தராக்கியை மட்டும் குற்றம் சொல்கின்றீர்கள்.இவர் தான் தன்னுடைய தளம் இல்லை என்று சொல்கின்றாரே.பிரச்சனையை உருவாக்குவதற்கு என்று ஒரு கூட்டம் இங்கு

புதினம். தமிழ் நெற். தமிழ் வின் பதிவு கூட செய்கின்றது சிரமத்துக்கு மத்தியில் தான் செய்தியை சேகரிக்கின்றார்கள் இவற்றை இங்கு இணைக்கும் போது தராக்கியை மட்டும் குற்றம் சொல்கின்றீர்கள்.இவர் தான் தன்னுடைய தளம் இல்லை என்று சொல்கின்றாரே. பிரச்சனையை உருவாக்குவதற்கு என்று ஒரு கூட்டம் இங்கு

திருட்டு பிடிபடுறது பிரச்சனையாத்தான் இருக்கும். முன்பு ஐசூர்யா என்பவர் திருட்டுத்தனமான முறையில் செய்திகளை இணைத்து வந்தார். பின்பு இப்போது யாழுக்கு வருவது இல்லை.

தராக்கி அவர்கள் கடந்தவருடம் யாழில் இணைந்து உள்ளார். ஆரம்பத்தில் பல்வேறு தளங்களில் இருந்து பெறப்படும் செய்திகளை செய்தி மூலத்துடன் குறிப்பிட்டு வந்துள்ளார். பின் சிறிது காலத்தில் ஐசூர்யா என்பவரின் புளக் செய்திகளை இணைத்து வந்துள்ளார். அதன்பின்னர் இப்போது தமிழ் ஸ்கை நியூஸ் எனப்படும் இணையட்தள செய்திகளை மாத்திரம் இணைத்து வருகின்றார்.

இந்த தமிழ் ஸ்கை நியூஸ் எனப்படும் Domain கடந்தமாதம் 21ம் திகதியே பதிவு செய்யப்பட்டு உள்ளது. அங்கு பதியப்பட்ட ஆரம்ப செய்தியை அதாவது கடந்தமாதம் 25ம் திகதி செய்தியை அவர் இங்கு ஒட்டியுள்ளார். அங்கு செய்தியை பதிபவரின் பெயரும் தராக்கி என்று உள்ளது.

குறிப்பிட்ட இந்த ஸ்கை நியூஸ் இணையதளம் மற்றைய தளங்களில் இருந்து பெறப்படும் செய்தியை அதை அப்படியே சொற்களை கூட மாற்றம் செய்யாது தனது செய்திபோல் பிரசுரம் செய்து வருகின்றது.

ஏதோ இஞ்ச செய்தி வாசிக்கிறவன் எல்லாம் வெங்காயங்கள் எண்டுற நினைப்பில உண்மையான செய்தி மூலத்தையும் குறிப்பிடாமல் அப்படியே திருட்டுத்தனமாக செய்திகளை வெட்டி ஒட்டுகின்றார்.

வணக்கம் முரளி கன காலத்துக்கு பிறகு நலமா?

அப்பிடியே மொத்தமாக வெட்டிப் போட்டா மொழிபெயர்த்து போட்டா திருட்டுத்தனம் என்றம்.

ஒரு குறித்த செய்தியை சொல்லுவதற்கு ஆதாரங்களாக 4 இடத்தில் பொறுக்கி கோர்த்துப் போட்டா அதை ஆய்வு எங்கிறம்.

அதையும் நம்மவர்கள் செய்தா திருட்டுத்தனம் என்றம் வேறையாரும் செய்தாத்தான் ஆய்வு எண்ணுவம்.

உதாரணத்துக்கு சி இதயச்சந்திரன் சீனாவின் இந்து சமுத்திரத்திர முத்து மணி திட்டம் பற்றி பி இராமனின் ஆய்வில இருந்து திருடிப்போட்டது என்றம். இராமன் எங்கிருந்து எடுத்தார் எண்டு கேள்வி கேக்கவில்லை. அதுவும் எமது முன்னணித்தளம் ஒன்றிலேயே மூலம் இருந்தும்.

http://www.tamilnation.org/intframe/indian...g_of_pearls.pdf

உந்த விவகாரங்களில் நாங்கள் பயணிக்க அதிக தூரம் இருக்கு. :icon_idea: சில வேளை அடுத்த சந்ததி உங்கடை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யலாம்.

ஓமோம் பேசாமல் இருங்கோ. இப்பிடியே பச்சைத்தனமா வெட்டி ஒட்டிப்போட்டு கொஞ்ச நாளில தாங்கள்தான் விடுதலைப்புலிகளிண்ட உத்தியோக பூர்வ இணையத்தளம் எண்டும் சொல்லுவீனம். அப்ப பாருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.