Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகளை உருவாக்கிய எழுத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"புரட்சிகளை உருவாக்கிய எழுத்துக்கள்"

முனைவர் கோமதி நாயகம் எடுத்துக்காட்டு

மொழிச் செழுமையில் எழுத்தாளர் பங்கு என்னும் கருத்தரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்துக்கள் என்ற தலைப்பில் முனைவர் பழ.கோமதிநாயகம் ஆற்றிய உரை.

உலக வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தியவை எழுததுக்கள்தான். எழுத்துகள் சரித்திரத்தை மாற்றி உள்ளன. அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் பங்கு பெரிதும் போற்றத் தக்கது. வாளை விட பேனா தான் சிறந்தது என்பதை உலகில் பல்வேறு நாடுகளில் பல காலகட்டங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

“எழுத்துக்கள் முதலில் அதிர்வுளை ஏற்படுத்தும். பின்னர் அதிர்ச்சியை ஏற்படுத்தும். கலிலியோ சூரியனைச் சுற்றி உலகம் சுற்றுகிறது என்று சொன்னார். 17ம் நூற்றாண்டில். கத்தோலிக்க கிறித்துவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு அதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் நீரியல் புத்தகத்தையும் கணித புத்தகங்களையும் எழுதியுள்ளார். எதைப் பற்றி எழுதி னாலும் போப் ஆண்டவர் அனுமதியுடன் தான் எழுத வேண்டும். 1633இல் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பின்பு இறந்து போனார். 1992இல் பண்பாட்டு குழு ஒன்று பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னார்கள். அதுவும் அறிவியல் குழு அல்ல. 1992இல் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை இரத்து செய்கிறோம் என்று சொன்னார்கள். ஆதிக்க உணர்வும், அடக்குமுறையும் யாரையும் அடக்குவதற்கு கடும் தண்டனையை அளிக்கின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

மொழிக்குடும்பம் என்ற கருத்தாக்கத்தில் ஆரிய இன மேன்மை என்ற நச்சு பரப்பப்பட்டது எனவும் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் ஐரோப்பிய வரலாற்று ஆய்வாளர்களும் மாக்சுமுல்லர் கூட சமசுகிருதத்தில் இருந்து தான் எல்லா மொழிகளும் வந் தன என்று குறிப்பிட இந்த கால கட்டத்தில் சென்னையில் - ஆங்கில அர சாங்கம் ஏற்றுக்கொண்ட கருத்தை - ஆங்கில அதிகாரியாக இருந்த எல்லிஸ் மறுத்து திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழில் இருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

அதன் பிறகு 1823லிருந்து 1876 வரை உள்ள காலகட்டத்தில் வள்ளலார் சுத்த சிவ சன்மார்க்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார் அவருடைய சீவகாருண்யம் - வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய அவரது உயர்ந்த உள்ளம் - உருவ வழிபாடு - சடங்குகள் என்று எதையெல்லாம் சமயம் போற்றியதோ அதைஎல்லாம் பிள்ளை விளையாட்டு என்று கூறி கண்மூடிப் பழக்கம் மண்மூடிப் போக வேண்டும் என்று மூடப்பழக்கங்களைச் சாடி அவர் ஏற்படுத்திய அதிர்வலைகள் கடல் கடந்து சென்று யாழ்ப்பாணம் சென்று அங்கு எப்படி இந்த அதிர்வலை தமிழறிஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அருட்பாவா மருட்பாவா என்று குரல் வந்தது. ஆறுமுக நாவலர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலவர். வள்ளலார் எழுதிய நூலில் ஒற்றுப்பிழை-எழுத்துப்பிழை-மொழிப்பிழை இருப்பதாக எல்லாப் பிழைகளையும் குறிப்பிட்டு இவர் எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டலாம் எனக் கேட்டார். அவரைத் தொடர்ந்தும் பண்டிதர் கதிர்வேல் பிள்ளை இந்த அருட்பா மருட்பா சர்ச்சையை எழுப்பிக்கொண்டிருந்தார்.. பிறகு மறைமலையடிகள் ஒரு மறுப்புக் கட்டுரை எழுதி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பின்னர் பாரதியார். இந்தியா பத்திரிகையில் வெளிவந்த எட்டு கட்டுரைகள் குறித்து வழக்கு - இராசதுவேஷத்தைத் தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டதாகவும் அப்படி பரபரப்பை ஏற்படுத்திய பாடல் எது என்றால் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம் என்பது தான். நடுவராக இருந்து தீர்ப்பு கூறியவர் இந்த பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

அதன் பின்னர் உலகம் போற்றும் புதுமை இலக்கியங்களைத் தமிழில் தந்தவர் புதுமைப்பித்தன் "ஐரோப்பிய இலக்கியங்களைத் தழுவி எழுதும் வழக்கத்தை அவர் சாடி எழுதும் பழக்கம் உள்ளவர். தழுவி எழுதுவதும் திருடி எழுதுவதும் ஒன்று தான் என்ற கருத்து கொண்டவர், மொழிபெயர்ப்பு செய்யலாமே தவிர தழுவி எழுதுவது தவறு என்று கூறியவர் தழுவி எழுதுவதையும் திருடி எழுதுவதையும் கடுமையாகச் சாடி எழுதியவர் என்று கூறி அப்படி அவர் இரசமட்டம் என்ற புனைப்பெயரில் தினமணியில் நூல் மதிப்புரைகள் எழுதி எழுத்தாளர்களுக்கு எல்லாம் அவர் சிம்ம சொப்பனமாக இருந்த காலகட்டத்தில் மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற - அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட -கல்கியின் கதைகள் பெரும்பாலானவை ஐரோப்பிய ஆங்கில மொழிக் கதைத் தழுவல்கள் எனக் கட்டுரை எழுதிய கார ணத்தால் அது ஏற்படுத்திய அதிர்வலை களின் காரணமாக அவர் பத்திரிகையிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்றார்.

சுதந்திரம் அடைந்த பிறகு கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்ற நூல் ஏற்படுத்திய அதிர்வலைகளைக் கூறவேண்டும். எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அல்ல இந்த நூல் எப்படி வாழக்கூடாது என்பதற்கு இது ஒரு வழிகாட்டியாக இருந்ததாகவும் எந்தத் தலைவர்கள் பின்னால் அந்தக் காலத்தில் இளைஞர்கள் கண்மூடித் தனமாகப் போனார்களோ அந்தத் தலைவர்களின் முகத்திரையை வனவாசம் கிழித்தது. அவர்களுடைய பணத்தாசை, இரட்டை வேடம் அம்பலமானதும் எண்ணற்ற இளைஞர்கள் அந்த மாயையில் இருந்து விடுபட்டு வெளிவந்தார்கள் என வனவாசம் ஏற்படுத்திய அதிர்வலைகளை வெளியிட்டார். அதே போன்று கண்ணதாசன் முதன் முதலாக முழுப்படத்திற்கும் - இல்லற சோதி என்ற படம் - திரைக்கதை வசனம் எழுதியது அவர் தான். படம் வெளிவந்த காலத்தில் அவர் சிறையில் இருந்தார். வெளிவந்த பிறகு பார்த்த போது அந்தப் படத்தின் பல பகுதிகளில் கலைஞர் கருணாநிதி வசனம் என்று திரைப்படத்தில் போட்டிருந்தார்கள். அதோடு அவர்களுடைய உறவு முடிந்தது. படித்த இளைஞர்களுக்குப் புரிந்தது. கருணாநிதி கண்ணதாசனின் எழுத்தைத் திருடினார் என்ற உண்மை இளைஞர்களுக்குப் புரிந்தது. இப்படி ஏற்பட்ட அதிர்வலைகளுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக உடனே கண்ணதாசன் மீது வசை பாடினார்கள்.

தோழர் பி. இராமமூர்த்தி எழுதிய விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் என்ற நூல் திராவிட இயக்கத் தலைவர்கள் எப்படி பெரும் முதலாளிகளை ஆதரித்துச் செயல்பட்டார்கள் என்பதை வெளிப்படுத்தியது. அதற்கும் அவர்கள் வசை தான் பாடினார்கள். ஆனால் அதற்குப் பின்னால் கழகத்தின் செயல்பாடு எப்படி தமிழர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடி வருகிறது என்பதை வெளிப்படுத்தியது. அதற்கும் வசை தான் பதிலாகக் கிடைத்தது. மறுப்பு வெளியிடப்படவில்லை. காவிரி, பெரியாறு, பாலாறு, பரம்பிக்குளம்-ஆழியாறு நீரில்லா ஆறுகளாக மாறுகின்றன. மணலை கொள்ளை அடிக்கிறார்கள். மணலையும் இழக்கிறோம். திராவிடத்தால் இப்படி எல்லா வகையிலும் வீழ்ந்ததை நம் கண் முன்னால் பார்க்கிறோம்.

கடைசியாக உலகத் தமிழர்களின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் ஈழமக்கள் படும் துயரங்களை நேரில் பார்த்து அதன்பின் எழுதிய கட்டுரைகள் மூலம் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியதாகத் தெரிவித்து ஈழ மக்களின் போராட்டம் - அதன் தலைவர்கள் ஆகியவற்றைப் பற்றி அவர் எழுதிய நூல்களைப் படித்த தமிழர்களிடையே தமிழகத் தலைவர்களைப் பற்றிய மறுசிந்தனை ஏற்படக் காரணமாயிற்று. இந்த உண்மைகள் எல்லாம் தமிழகத் தலைவர்களைச் சுட்டதால் வழக்கம்போல் தடா, பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்களின்படி சிறையில் அடைக்கப்பட்டார். அப்படி சிறையில் இருந்த காலகட்டத்தில் கூட அவர் நூல்களை எழுதினார். 17 மாதங்கள் சிறையில் இருந்தார். வெளியே வந்தாலும் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது, எழுதக்கூடாது, பேசக்கூடாது, என்றெல்லாம் தண்டனை கொடுத்து தடை செய்யப்பட்ட இயக்கத்தைப் பற்றி அவர் எழுதினார் என்று பொய் கூறினாலும். இந்த அதிர்வலைகளின் காரணமாக 25.6.2008 தினமணியில் எழுதப்பட்ட ‘மாற்று அணி காலத்தின் கட்டாயம்’ என்ற கட்டுரை தமிழக மக்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது இந்தக் கட்டுரை தமிழகத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டிய இயக்கங்களைப் பற்றிய கட்டுரை என்று விளக்கி சுனாமி என்னும் ஆழிப்பேரலை கடலுக்குள் இருக்கும் போது அதன் வேகம் புரியாது. கடலில் இருந்து கரைநோக்கி வரும் போது தான் அதன் வேகம் கூடும், உயரமாக அலை எழும்பும், தாக்குதல் வேகம் மிக மிக அதிகமாக இருக்கும். அது போல இந்த கட்டுரை சுனாமியாக மாறி தமிழகத்தைத் தாக்கும் பொழுது தமிழகத்தில் உள்ள நிலை மாறும் என்றார்.

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.