Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாந்துப் பொட்டு வைத்து - காதல் வானம்

Featured Replies

அன்புக்குரிய யாழ்க்கள, தமிழ் இசை, கவிதை நண்பர்களுக்கு, அன்பு வணக்கம்.

காதல் கடிதம் (02.08.2003) - காதல் மொழி(14.05.2006) - காதல் வானம்(25.06.2008 )

வசீகரனின் வரிகளில், வி.எஸ்.உதயாவின் வசந்த இசையில் 25.06.2008 அன்று நோர்வேயில் காதல் வானம் வெளியீட்டு விழா

நிறைவாக நடைபெற்றது. காதல் வானம் இறுவட்டு ஈழத்தமிழ் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற பல பாடல்களுடன்

வெளிவந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படைப்பை இறுவட்டாக பெற்றுக் கொள்ள PAYPAL சிறந்த முறை. இறுவட்டு பாதுகாப்பாக அஞ்சலில் அனுப்பி வைப்பேன்.

காதல் வானம் இசைத் தொகுப்பின் குறுந்தககட்டுப் பிரதி வேண்டுகிறவர்கள் தொடர்புகொள்ளலாம் :

vaseeharan@hotmail.com (Paypal Account).

Vaseeharan: +47 91370728

http://www.vnmusicdreams.com ( for more infomations)

அன்புள்ள வசந்திக்கு,

நான் மலர் எழுதிறன். இந்த மின்னஞ்சல் காலத்திலயும் உனக்கு கடிதம் எழுதிறது மனதிற்கு இதமாகத்தானிருக்கு.! உனக்கு எழுத யோசிக்கேக்குள்ள பள்ளிக்கூட ஞாபகங்கள் எல்லாம் எட்டிப்பார்க்குது. ம்.... மறக்கமுடியாத நாட்கள் (டனிஸ், பிரன்ஞ், நொஸ்க்)

பல்லவி

சாந்துப் பொட்டு வைத்து நான் மகிழ்ந்து நின்று

அழகு பார்த்த முகமெங்கே?

எண்ணெய் வழியும் முகத்தில் நான் பவுடர் பூசி

அழகு பார்த்த முகமெங்கே?

வெள்ளை சட்டை இரட்டைப் பின்னல் என்

பள்ளி வாழ்க்கை எங்கே?

கனவை வீசி கவிதை வாங்கி

என்னோடு நடந்த தோழி எங்கே?

அந்தக் காலம் நினைவில் வந்ததே

புது வசந்தம் வாழ்த்து சொன்னதே(2)

(சாந்துப் பொட்டு)

சரணம் 1

எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குள்

ஓர் பொன்மாலைப் பொழுதினிலே

தாவி தாவி தும்பி பிடித்து

வாழ்க்கையை நான் ரசித்தேன்

மாரி மழையில் விரும்பி நனைந்து

காய்ச்சலை வாங்கிக் கொண்டேன்

நல்ல பொய்கள் வீட்டில் சொல்லி

பரீட்சைக்கு கட் அடித்தேன்

நான் நானா போது முதல் வந்த வெட்கம்

இன்றைக்கும் நினைத்தால் சிலிர்க்கிறதே

சிவராத்திரி நாளில் கண்ணயர்ந்து போக

மீசை வைத்துப் போன பொடியன் எங்கே

நல்ல டீச்சரும் மாஸ்டரும் இனிய பள்ளி தோழரும்

வயல் வரப்பிலும் பனைவெளியிலும்

நான்படித்த வாழ்கைப் பாடமும்

பள்ளிக்கூடம் தந்த இன்பம்- இனி

என்றும் வருமோ?

நிறைவுப் பல்லவி

தமிழ்ப் புத்தகத்தில் நான் மறைத்து வைத்த

மயில் இறகின் குட்டி எங்கே

முதல் மின்னல் பார்வையை வீசிப்போன

அந்தப் பொடியனும் எங்கே (சாந்துப் பொட்டு)

பின்னணி இசையோடு

குரல்:

ஓண்ட மறந்திட்டன் 10ம் வகுப்பு படிக்கேக்குள்ள

கிளாசில குழப்படி விட்டு தங்கராஐh மாஸ்டரிட்டை

பேச்ச வாங்கின டைட்டசை நான் லண்டனில கண்டனான்...

இப்ப ஆள் நல்ல இருக்கிறார்...

மற்றது வெள்ளிக்கிழமையில் பள்ளிக்கூடம் விட்டு

நானும் நீயும் சைக்கிள்ள போகேக்குள்ள கீரைக் கறியோட

விரதச் சாப்பாடு தாற உன்ர அம்மாவையும் மறக்காம

கேட்டதாய்ச் சொல்லு...

பாடல்: வசீகரன்

இசை: வி.எஸ்.உதயா

குரல் : ஐனனி

எண் : 01

ஏட்டில்: 06.06.2007 பாடல் பதிவு: 16.07.2007

இசைத் தொகுப்பு : காதல் வானம் (2008)

Edited by Tamizhvaanam

இந்தப் பாட்டு எழுத வசீகரன் அண்ணான்ர மனைவி ஐடியா குடுத்திருப்பா என்று நினைக்கிறன்...எனக்குப் பிடிச்ச பாடல்களில் இதுவுமொன்று.

இந்தப் பாட்டு எழுத வசீகரன் அண்ணான்ர மனைவி ஐடியா குடுத்திருப்பா என்று நினைக்கிறன்...எனக்குப் பிடிச்ச பாடல்களில் இதுவுமொன்று.

அவ சாந்துப் பொட்டு வைக்குறது உங்களுக்கெப்படி தெரியும்? இஞ்சை கனபேர் ஸ்டிக்கர் பொட்டுத்தான் வைக்கினம்.. உரிக்க வலு சுகம்..!! :o:unsure:

  • தொடங்கியவர்

சிநேகிதி, சோழியான் இருவருக்கும் நன்றிகள்.

இந்தப் பாடல் எழுதுவதற்கான சூழ்நிலையை என் மனைவி எனக்குச் சொல்லவில்லை. இந்தப் பாடலை நான் கடந்த வருடம் தமிழகத்திற்குச் சென்று வி.எஸ்.உதயா அண்ணாவின் இசைக்கூடத்தில் இருந்தவாறு எழுத்த தொடங்கினேன். ஆனால் இந்தப் பாடல் ஆரம்பமானது ஒரு சுவாரசியமான நிகழ்வு. நான் ஒரு ஈழத்துப் பெண் தன் காதலை தன் காதலனிடம் வெளிப்படுத்துவது போன்று எழுதத் தொடங்கிவிட்டேன். ஆனால் உதயா அண்ணா என்னைக் குறுக்கிட்டு, எங்களுடைய பெண்கள் புலம்பெயர் வாழ்வில் தாயகத்தில் இருந்ததைவிட எவ்வளவோ மாறிவிட்டார்கள்.

புலம்பெயர் வாழ்வில் அவர்கள் வாழ்க்கை நவீனமயப்பட்ட பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் தாயகத்தில் வாழும் போது தாங்கள் இழந்த அந்த பசுமை நினைவுகளை திரும்ப எண்ணிப் பார்த்து அவர் தோழிக்களுக்கு கடிதம் எழுதுவதாக அமைந்தால் நல்லா இருக்குமா என்று என்னிடம் கேட்டார். நான் உடனே எழுதத் தொடங்கிவிட்டேன். என்னுடைய தங்கைகளின் நிலையில் இருந்து நான் அப்பாடலை எழுத, அவர் தன்னுடைய தங்ககைளின் ஞாபகப் பதிவுகளையும் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் முதன் முதலில் அண்ணாவோடு பக்கத்தில் இருந்து எழுதிய ஒரே ஒரு பாடல் இதுதான். ஏனையவை இங்கிருந்து எழுதப்பட்டு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட பாடல்கள்.

சோழியான் சொல்வது உண்மைதான். இங்குள்ள எங்கள் பெண்களுக்கு இங்கு சாந்துப் பொட்டு வைக்கவும் நேரமில்லை, ஒட்டுப் பொட்டு வைக்கவும் நேரமில்லை. தமிழர் கலை பண்பாட்டு நிகழ்வுகள் தவிர்ந்த இடங்களுக்குப் பொட்டு வைத்துக்கொண்டு போனால் இங்குள்ளவர்களுக்கு பதில் சொல்லியே வெறுத்துப் போய், இப்ப பொட்டு வைக்காமல் போவது நவீனமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை. பொட்டு வைப்பதும், வைக்காமல் போவதும் ஒவ்வொரு தனிப்பட்ட பெண்களின் விருப்பம். அதை நாங்கள் குறைகூறவும் கூடாது, நக்கல் அடிக்கவும் கூடாது. ஆனால் தமிழ்ப் பெண்கள் பொட்டும் பூவும் வைத்துப் போனால் அழகோ அழகுதான். தமிழுக்கு "ழ" அழகுபோல:)

அன்புடன்

வசீகரன்.

Edited by Tamizhvaanam

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அன்புக்குரிய யாழ்க்கள, தமிழ் இசை, கவிதை நண்பர்களுக்கு, அன்பு வணக்கம்.

காதல் கடிதம் (02.08.2003) - காதல் மொழி(14.05.2006) - காதல் வானம்(25.06.2008 )

வசீகரனின் வரிகளில், வி.எஸ்.உதயாவின் வசந்த இசையில் 25.06.2008 அன்று நோர்வேயில் காதல் வானம் வெளியீட்டு விழா

நிறைவாக நடைபெற்றது. காதல் வானம் இறுவட்டு ஈழத்தமிழ் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற பல பாடல்களுடன்

வெளிவந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படைப்பை இறுவட்டாக பெற்றுக் கொள்ள PAYPAL சிறந்த முறை. இறுவட்டு பாதுகாப்பாக அஞ்சலில் அனுப்பி வைப்பேன்.

காதல் வானம் இசைத் தொகுப்பின் குறுந்தககட்டுப் பிரதி வேண்டுகிறவர்கள் தொடர்புகொள்ளலாம் :

vaseeharan@hotmail.com (Paypal Account).

Vaseeharan: +47 91370728

http://www.vnmusicdreams.com ( for more infomations)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.