Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்மோகன்சிங் பிரதமரானது இந்திய நாட்டின் துரதிர்ஷ்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. தா. பாண்டியன்

Featured Replies

மன்மோகன்சிங் பிரதமரானது இந்திய நாட்டின் துரதிர்ஷ்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. தா. பாண்டியன்

இலங்கையில் அரை நூற்றாண்டிற்கு மேலாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் ஓக்டோபர் மாதம் இரண்டாம் திகதியன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில் இப்போரட்டத்திற்கான அவசியம் குறித்து, அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. தா. பாண்டியன், "வீரகேசரி' நாளிதழுக்காக வழங்கிய விசேட செவ்வி....

இப்பிரச்சினைக்காக சி. பி. ஐ உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, இலங்கையில் நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான ஒரு சுமூகமான தீர்வு எட்டப்படவேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றப்ட்டது. இது இன்று நேற்று தோன்றிய பிரச்சினை அல்ல, அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக அந்த தீவு அலைகழிக்கப்படுகிறது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதைவிட அந்த நாடு முன்னேற்றத்தை இழந்து நிற்கிறது. ஆட்சியாளர்களுக்கு அதனால் தொல்லை உண்டு. ஆளப்படுகிற மக்களுக்கும் அதனால் இழப்புகள் அளவிடமுடியாத அளவிற்கு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு மூன்று சந்ததிகள் இயல்பான வாழக்கையை இழந்துவிட்டார்கள். வீட்டை இழந்து, நாட்டை இழந்து, அகதிகளாக வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்வதும், அங்கே அவர்கள் பல்வேறு அலைகழிப்பிற்கு ஆளாவதும் எல்லோரும் அறிந்த செய்தி. இதற்கிடையில் அங்கே எஞ்சி நின்ற தமிழ் மொழி பேசுகிற மக்கள், தங்களுக்கென ஒரு தனி மாநிலம் வேண்டும். உரிமைகள் வேண்டும். சமமாக மதிக்கப்படவேண்டும் என்று பொதுவான, மனிதாபிமான அடிப்படையிலான கோரிக்கைகளை முன்வைத்து, தந்தை செல்வா காலத்திலிருந்து போராடி வருகிறார்கள். காந்தி வழியில் போராடினார்கள். அமைதி வழியில் போராடினார்கள். தேர்தலில் நின்று வெற்றிப் பெற்றார்கள். ஆனால் எதிலும் தீர்வு மட்டும் வரவில்லை. இதனால் பொறுமையிழந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினார்கள். ஆயுதம் ஏந்தி போராடுவதை நாம் அங்கீகரிக்கிறோமா, இல்லையா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டிதல்ல, அந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள் என்பது தான் நமது மதிப்பீடு. வேறுவழியேயில்லை. அமிர்தலிங்கம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வென்றார்கள். வெற்றிப்பெற்றதை அங்கீகரித்து, அவர்களின் கோரிக்கைகளை, அமைதி வழியில் தீர்வு காணப்பட்டிருந்தால் இன்று இப்பிரச்சினை எழுந்திருக்காது.

தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை யார் முன்வைக்கவேண்டும்? இலங்கை அரசு தான் முன்வைக்கவேண்டும்.

எங்கள் தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்படுகிறார்களே என்று கொதித்தெழுந்து தமிழக மக்கள் போராடியதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விரும்பினாரோ விரும்பவில்லையோ அவரை நாங்கள் நிர்பந்தித்து, அரசியல் தீர்வு காண அனுப்பிவைத்தோம். அவரும் முயற்சி எடுத்து, அந்த நாட்டு தலைவர்களுடன் பேசி, ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார். அதில் இருசாராருக்கும் முழு திருப்தியில்லை, ஆனால் ஏற்றுக்கொண்டதை, இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தியதா! என்பது இன்றைக்கு வரலாற்றில் ஒரு பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது. அதன் பிறகு ஏற்பட்ட துயர நிகழ்ச்சிகளையெல்லாம் நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. ஏனென்றால் அது மேலும் புண்ணை ஆழப்படுத்தும். இரு பக்கங்களிலும் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் உரிமைக்காகப் போராடுகிற மக்கள், கோரிக்கைகளை வைப்பதோ, போராடும் முறைகளோ வேறு. ஆனால் ஒரு நாட்டின் மக்களை ஆளுகின்ற அரசாங்கம் கடைபிடிக்கும் கொள்கை மற்றும் நடைமுறை என்பது வேறு. இவ்விடயத்தில் ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு அதிகம். அதுவும் இந்த நாகரீக உலகில், சனநாயத்தில் நம்பிக்கையுள்ள அரசு, மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்ன வழி என்று பார்க்கவேண்டும். அங்கு நூற்றுக்கு நூறு தமிழர்களும் ஆயுதம் ஏற்தி நிற்கவில்லை. அவர்கள் சார்பில் சிலர் போராடுகிறார்கள். அரசு ஆயுதம் ஏந்திய இராணுவத்தை அனுப்புவது, விமானம் மூலம் குடிமக்கள் மீது குண்டு போடுவது என்பது கண்டும் கேட்டிராத போர்முறை. அதுவும் ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, இரண்டாண்டு காலமாக தொடர்ந்து விமானங்கள் மூலம் குண்டு வீச்சு நடைபெற்றிருக்கிறது. விமானத் தாக்குதல் நடத்துகிறபோது தங்களுக்கெதிராக துப்பாக்கி ஏந்தி போராடுகிறவர்களை மட்டும் குறி பார்த்து குண்டு வீச இயலுமா? இயலாது. அதனை ஒட்டி வாழ்கிற நிரபராதிகளின் தலைகளிலும் குண்டு விழும். இவ்வகையில் இங்கு நாள்தோறும் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். தப்பியவர்கள் நாள்தோறும் அகதிகளாக தமிழகம் நோக்கி வருகிறார்கள். இந்த கொடுமைகள் அனைத்தையும் பார்த்துககொண்டு அமைதியாக கட்சியில் இருக்க இயலாது. கொல்லப்படுவது தடுக்கப்படவேண்டும்,. நிறுத்தப்படவேண்டும். அமைதி வழியில் தீர்வு காண விரும்புகிறது என்றால் அந்த அரசு, இந்தந்த அடிப்படையில் அரசியல் தீர்வு காண விரும்புகிறேன். இதனை ஏற்க மறுத்து, அவர்கள் துப்பாக்கியை எடுத்திருக்கிறார்கள் இது நியாயமா? என்று கேட்டால், அது நியாயமான தீர்வாக இருக்குமேயானால், நாங்களும் அரசோடு சேர்ந்து, துப்பாக்கியை கீழே போடு என்று அந்த தமிழனோடு வாதாடுவோம். அவன் போட மறுத்தால், அவனை எதிர்த்து இவர்களுடன் சேர்ந்து போராடவும் தயங்கமாட்டோம். செய்தார்களா! இந்திய அரசு கேட்டும் கூட , அவர்கள் எந்தவிதமான தீர்வுத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை.இப்போதும் காலம் தாழ்ந்துவிடவில்லை. இப்போதாவது இலங்கை அரசு ஒரு திட்டத்தை பகிரங்கமாக உலகறிய அறிவிக்கட்டும். ""இந்த வகையில் நாங்கள் ஒரு மாநிலத்தை அமைக்க இருக்கிறோம். அதற்கு இந்தந்த அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. உரிமைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு மேல் அதிகாரங்களை வழங்க இயலாது என்று அவர்கள் என்ன எண்ணுகிறோர்களோ, அதை உலகத்திற்கு அறிவிக்கட்டும்''. விடுதலை புலிகளுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ அறிவிக்கவேண்டாம். உலக மக்களுக்காக அறிவிக்கட்டும். அதன் பிறகு உலக மக்கள் தீர்ப்பளிக்கட்டும். குறிப்பாக இந்தியா, அண்மையில் இருக்கும் தமிழகத்து மக்கள். ஏனெனில் இதனால் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் அதனுடன் தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர்கள். எனவே முதலில் திட்டத்தை அறிவிக்கவேண்டும். அதைவிடுத்து விமானம் மூலம் தொடர்ந்து குண்டு வீசி, அனைவரையும் அழித்தப்பிறகு தான் அமைதிப் பேச்சுவார்த்தை என்றால், அழிப்பதில் ஈடுபட்டிருக்கிறயா அல்லது பிரச்சினையை தீர்ப்பதில் ஈடுபட்டிருக்கிறயா என்ற வினா இயல்பாகவே எழுகிறது. எங்கள் சொந்த சகோதரர்கள், இருபது கீலோ மீற்றருக்கு அப்பால் அநியாயமாகக் கொல்லப்படுவதைக் கண்டு நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதற்காக நாங்கள் இங்கே துப்பாக்கியை ஏந்தவும் இயலாது. அதனால் அமைதி வழியில், காந்தியடிகள் பிறந்த நாளில், தமிழ் மக்கள் அனைவரையும் திரட்டி, கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, திரட்டுவது மட்டும் தான் கம்யூனிஸ்ட் கட்சி, ஆனால் அனைத்து கட்சியின் ஆதரவும் குவிந்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் இருபது வருடங்களுக்கு முன்னால், இலங்கைத் தமிழர்கள் மீது எந்தளவிற்கு அனுதாபத்தை காட்டினார்களோ, அதே அளவிற்கான அனுதாபத்தை நாங்கள் மீண்டும் புதுபித்திருக்கிறோம். இன்று தமிழகத்தையே தட்டி எழுப்பியிருக்கிறோம். இது அரசியல் பிரச்சினையல்ல. சகோதரருடைய உயிரை காப்பாற்ற வேண்டிய பிரச்சினை. கட்சி பேதங்களை தேர்தல் காலங்களில் பார்த்துக் கொள்ளலாம். இது வாக்கு கோருவதற்கான காலமல்ல. வாழ்க்கையை காப்பாற்றுவதற்கான காலம். இதனால் சென்னையில் நானும் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுக்கபோகிறோம். தோழமை கட்சியினரும் பங்கேற்க இருக்கிறார்கள். கலை உலகத்தினரும் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என நாங்கள் எதிர்பாத்ததை விட அணிஅணியாக ஆதரவு பெருகிக் கொண்டேச்செல்கிறது. எங்கள் ஆதரவு தமிழர்களுக்கு மற்றும்மனித குல உயிர்களை பாதுகாப்பதற்கே தவிர சில குழுக்களுக்காக அல்ல. இப்போராட்டத்தின் மூலம், இப்பிரச்சினையில் தீர்வுக்கான திட்டத்தை இலங்கை அரசிடம் இருந்து கோரி பெறுகிறாயா? அல்லது தமிழகத்து மக்கள் போராடித்தான் பெறவேண்டுமா? என்று மத்திய அரசை நாங்கள் வற்புறுத்த உள்ளோம். இவ்விடயத்தில் மத்திய அரசு எங்களுக்கு துணையாக இல்லை. ஆயுதங்களை மட்டுமல்ல இலங்கை அரசிற்கு மருந்து கூட கொடுக்கக்கூட கூடாது. ஏனெனில் அது மக்களை கொல்லுகிற அரசாக இருக்கிறது. அவதிபட்டு, அகதிகளாக இருக்கிற மக்களுக்கு மட்டும், அது சிங்கள அகதிகளாக இருந்தாலும் சரி உணவு, மருந்து , உடையினை இந்திய அரசு அனுப்பவேண்டும். அது நூறு கோடி மக்களுடைய தார்மீக கடமை.இதனையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இதற்காகத்தான் ஓக்டோபர் 2 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இப்பிரச்சினையில் தமிழகத்தை ஆளும் மாநில கட்சியும், இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளும் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றன என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது இது குறித்து தங்களின் பதில் என்ன?

அவர்கள் ஆளுகின்ற கட்சியாக இருப்பதால் மத்திய அரசிற்கு தர்மசங்கடம் ஏற்படுத்தக்கூடாது என்று எண்ணுகிறார்கள். ஆனால் எனக்கு தெரியும் அவர்களது ரத்தமும் துடிக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் மனம் முழுவதும் இங்கே தான் இருக்கிறது. அதில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை. அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் குரல் எழுப்புகிறோம்.

அரசியல் ரீதியான தீர்வை வலியுறுத்துகிற இந்திய அரசு அரசியல்வாதிகளை அனுப்பாமல் ஜெ. என். தீட்சித், ஜி. பார்த்தசாரதி, ரொமேஷ் பண்டாரி, எம். கே. நாராயணன் போன்ற அரசு அதிகாரிகள் அனுப்புவதன் நோக்கம் என்ன?

ராணுவ வீரார்களையும் அனுப்பியிருக்கிறார்கள். ராடார் கருவிகளையும் அனுப்பியிருக்கிறார்கள்.அதில

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.