Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே நாடாளுமன்றம் முன்பாக 32 மணிநேரமாக நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Featured Replies

நோர்வே நாடாளுமன்றம் முன்பாக 32 மணிநேரமாக நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

[புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 10:22 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்]

வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலக உதவி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து நோர்வேயில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு தொடங்கப்பட்ட அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நிறைவுபெற்றது.

தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கரிசனை பேச்சளவில் மட்டும் நின்றுவிடுவதைத் தவிர்த்து, செயலளவில் அக்கரிசனையை வெளிப்படுத்த வேண்டிய காலம் இதுவெனவும், அவ்வாறு செயல்வடிவப்படுத்துவதைத் தவறவிடும் பட்சத்தில் அவர்களின் நடுநிலைமையும் நீதித்தன்மையும் கேள்விக்குரியானதாகவே தமிழ் மக்களால் நோக்கப்படும் என நோர்வே தமிழ் அமைப்புக்களின் சார்பில் இக்கவனயீர்ப்பு மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

32 மணித்தியாலங்கள் நீடித்த மேற்படி கவனயீர்ப்பு நிகழ்வு நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்றது.

இளையோர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என 21 தமிழீழத்தவர் அடையாள உண்ணாநிலையினை மேற்கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவாக நேற்றும் முன்நாளும் நேற்றும் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் நாடாளுமன்ற முன்றலில் திரண்டிருந்தனர்.

நேற்று முற்பகல் 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையான நேரப்பகுதியில் 1,500 வரையானவர்கள் கவனயீர்ப்பு நிகழ்வில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதரகங்களுக்கும், நோர்வேயில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு நேரில் சென்று கையளிக்கப்பட்டது.

தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இத்தூதரகங்களுக்கு நேரில் சென்று கோரிக்கை மனுவினை கையளித்தனர்.

அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கத்திற்கான இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்

பௌத்த சிங்கள பேரினவாதத்தின், தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினை உடனடியாக நிறுத்துவதற்குரிய அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களில், குறிப்பாக வன்னிப்பெரு நிலப்பரப்பில், ஐ.நா மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற உதவி நிறுவனங்களை உடனடியாக அனுமதிப்பதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் போன்ற கோரிக்கைகள் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இம்மனு நோர்வே நாடாளுமன்ற வெளியுறவு செயற்குழு தலைவர் ஊலாவ் அக்ஸல்ஸன் ஊடாக நோர்வே நாடாளுமன்றத்திற்கும், சிறிலங்காவிற்கான சிறப்பு சமாதானத்தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் ஊடாக நோர்வே வெளியுறவு அமைச்சகத்திற்கும் கையளிக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 12:30 நிமிடத்துக்கு நாடாளுமன்றத்திலிருந்து பேரணியாக வெளியுறவு அமைச்சகத்தை நோக்கிச் சென்ற மக்கள் அணி, அங்கு ஜோன் ஹன்சன் பௌவரிடம் மனு கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் நாடாளுமன்றத்தைச் சென்றடைந்து பிற்பகல் 3:00 மணி வரை கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவு பெறுவதற்கு முன்னதாக நோர்வேஜிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

நாடாளுமன்ற வெளியுறவு செயற்குழு தலைவர் ஊலாவ் அக்ஸல்ஸன்

தொழிற்கட்சியின் ஒஸ்லோ பிரதேச தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜான் போலர்

சோசலிச இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்தார் சவுத்ரி

ஒஸ்லோ நகரசபை உறுப்பினர்களான தொழிற்கட்சியைச் சேர்ந்த துறொண்ட் ஜென்ஸ்றூட், செங்கட்சியைச் சேர்ந்த அர்லிங் பொள்க்கவோர்ட்

பெண்கள் உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான நோர்வேஜிய அமைப்பின் பிரதிநிதியான சிஸ்ஸல் தூர்ஸ்டாலன்

ஒஸ்லோவின் குறூறூட் உள்ளூராட்சி சபைத் தலைவர் அண்டர்ஸ் லார்ஸன்

ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அனைத்துலக மனிதாபிமானப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டமையை தமதுரையில் கண்டித்த இவர்கள், தமிழ் மக்களின் இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தமதுரைகளில் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களும் ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் நோர்வேஜிய மக்களுக்கு வழங்கப்பட்டு, தமிழீழ மக்களின் நிலைமைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டன.

அருட்தந்தை இன்பநாதன் அவர்களால் அடையாள உண்ணாநிலை மேற்கொண்ட தமிழீழ உணர்வாளர்களுக்கு பழச்சாறு வழங்கப்பட்டு, உண்ணாநிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.