Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் படைத்துறை செலவீனம் 21 ஆயிரம் கோடி: திறைசேரி மதிப்பீடு

Featured Replies

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பபுச் செலவுக்கு 17ஆயிரத்து 710 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவிருக்கிறது.

இது தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முப்படையினருக்காவும் அரசு 2009ம் ஆண்டில் 177.1 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவுள்ளது.

நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலமாக இது தெரியவந்துள்ளது. இராணுவத்திற்கான 8 ஆயிரத்து 390 கோடி ரூபா ஒதுக்கபட்டுள்ளது. இதே வேளை, கடற்படையினரின் தேவைகளுக்காக 2 ஆயிரத்து 750 கோடி ரூபாவும் விமானப் படையினருக்கு 2 ஆயிரத்து 50 கோடி ரூபாவும் அரசு ஒதுக்கியுள்ளது.

இலங்கைப் பொலிஸாருக்கும் துணைப் படையினருக்கும் மூவாயிரத்து 516 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் முதலாவது வாசிப்புக்காக எதிர்வரும் 9ம் திகதி நாடாளுன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வருடம் (2008) பாதுகாப்பு அமைச்சிற்கு அரசு 16 ஆயிரத்து 644 கோடி ரூபா ஒதுக்கியிருந்தது.

நன்றி : சுடர் ஒளி

சிறிலங்காவின் படைத்துறை செலவீனம் 21 ஆயிரம் கோடி: திறைசேரி மதிப்பீடு

[வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 09:21 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் 2009 ஆம் ஆண்டுக்கான படைத்துறை செலவீனம் 21 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேவை ஏற்படும்போது இதன் தொகை மேலும் 2 ஆயிரம் கோடியால் அதிகரிக்கலாம் என்றும் சிறிலங்கா திறைசேரியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டிற்குரிய வரவு-செலவு திட்டத்திற்கான குறை நிரப்பு பிரேரனை எதிர்வரும் புதன்கிழமை 8 ஆம் நாள் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கான முன்னோடி ஆய்வறிக்கைகள் சிறிலங்கா நிதியமைச்சின அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையிலேயே 2009 ஆம் ஆண்டுக்குரிய படைத்துறை செலவீனம் 21 ஆயிரம் கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்குரிய வரவு-செலவுத் திட்டத்தில் படைத்துறைகளுக்கான செலவீனம் 16 ஆயிரம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அடுத்த 2009 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 5 ஆயிரம் கோடியால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையே இதற்கு பிரதான காரணம் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக நவீன போர்த் தளபாடங்கள் மற்றும் படைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் போன்றவற்றுக்கே அதிகளவு நிதி செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, புலிகளின் வானூர்திகளை தாக்கியழிக்கக்கூடிய மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்வதாக இருந்தால் படைத்துறை செலவீனம் தற்போது மதிப்பிடப்பீடு செய்யப்பட்டதை விட அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் திறைசேரி அதிகாரிகளை மேற்கோள் காட்டி கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவே நிதியமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.