Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழிநொச்சி சமர் போரின் முடிவா? இல்லை தொடக்கமா?-அருஷ்

Featured Replies

கடந்த மாதம் வான்புலிகள் வவுனியா படைத்தலைமையகம் மீது மேற்கொண்ட தாக்குதல் இந்திய மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் ஓர் அழுத்தமான நெருக்கடியை தென்னிந்தியாவில் ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அரசு மறைமுகமாக மேற்கொண்டு வந்த படைத்துறை உதவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை விடுதலைப்புலிகளின் இந்த தாக்குதல் ஆதாரபூர்வமாக நிரூபித்ததால் இந்திய மத்திய அரசு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதுடன்,

இலங்கையில் துன்பப்படும் தமிழ் மக்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக கட்சிகளும் உள்ளன.

இந்திய படைத்துறை பொறியியலாளர்க ளான (ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரான்ட்ற் ஆகியோர் காயமடைந்தது, ஆயுத உதவிகளுக்கு அப்பால் இந்திய மத்திய அரசு ஆளணி உதவிகளையும் வழங்கி வருகின்றதா என்பது தொடர்பில் பலத்த சந்தேகங்களை எழுப்பி யுள்ளது.

இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் ராடர்களை இயக்குவதற்கு அப்பால் பீரங்கி தாக்குதல்கள் மற்றும் வான் தாக்குதல்களை நெறிப்படுத்துதல் போன்றவற்றிலும் உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுத் துள்ள இந்திய அரசின் தாக்கம் கடந்த மாதம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா சபையின் 63 ஆவது கூட்டத்தொடரில் எதிரொலித்துள் ளது. இலங்கைத் தரப்பு பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுத்துவிட்டார்.

இருந்த போதும் வெளிப்படையாக சந்திக்க மறுப்பதும், இரகசியமாக படைத்துறை உதவிகளை வழங்குவதுமான இந்த இரட்டை நிலைப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் என கொள்ள முடியாது.

இதனிடையே வன்னி கள?னைகளில் இராணுவம் பாரிய வெற்றிகளை சந்தித்து வருவதாக அரசினால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் கூட சரிந்து வரும் இலங்கை அரசின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவவில்லை என்பது தென்னிலங்கையின் பொருளியல் நிபுணர்கள் மத்தியில் தோன்றி யுள்ள புதிய அச்சம். இந்த வருடத்தில் இலங்கையின் பங்குச்சந்தை 104.8 பில்லியன் ரூபாக்களை இழந்துள்ளது.

இந்த இழப்புடன், நடப்பு வருடத்தில் பங்குச்சந்தை 16.3 வீத இழப்பை சந்தித்துள் ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச்சந்தை 14 பில்லியன் ரூபாக்களை ஒரே நாளில் இழந்திருந்தது. இது 2000 ஆண்டில் போர் ஓர் உக்கிர நிலையை அடைந்திருந்த முதல் நான்கு மாத காலப்பகுதிகளில் ஏற்பட்ட இழப்பை விட 10 மடங்கு அதிகமாகும்.

உலகின் பொருளாதார நெருக்கடிகள் இலங் கைப் பொருளாதாரத்தில் அதிக பாதிப்புக் களை ஏற்படுத்தியிருந்த போதும், உறுதியற்ற அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளும் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு தள்ளி வருகின்றது. எனினும் இழுபட்டு செல்லும் போரில் இருந்து மீள முடியாத அரசு அதற்கு தேவைப்படும் நிதிகளை வாரி இறைத்து வருகின்றது.

எதிர்வரும் ஆண்டுக் கான பாதுகாப்பு செலவினமும் 21 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.

வன்னி களநிலைமைகளை பொறுத்த வரையில் கடந்த மாதத்தின் ஆரம்பத்தில் நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் பகுதி வரையிலும் ஆரம்பித்த உக்கிர மோதல்கள் தொடர்ந்தவாறு உள்ளன.

நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் பகுதி வரையிலுமான 25 கி.மீ தூரத்திற்கு விடுதலைப்புலிகள் அமைத்துள்ள வலுவான பாதுகாப்பு மண் அணைகளும் அதனை அண்டிய பொறிக் கிடங்குகள் மற்றும் பதுங்குகுழிகள் படை யினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

வளைவு நெளிவுகளுடன் அமைக்கப்பட் டுள்ள இந்த 12 அடி உயர மண் அணைகளில் விடுதலைப்புலிகளின் சினைப்பர் அணிகளும் நிலையெடுத்துள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

எனினும் உக்கிரம் பெற்றுவரும் மோதல்கள் படைத்தரப்பிலும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த மாதம் 2 ஆம் மற்றும் 15 ஆம் நாட் களில் ஏற்பட்ட மோதல்களில் இராணுவத்தின் 57 மற்றும் 58 ஆவது படையணிகள் கடுமை யான சேதங்களை எதிர்கொண்ட நிலையில் இராணுவம் தனது படையணிகளை மறுசீர மைக்கும் முயற்சிகளையும் மேற்கொண் டுள்ளது.

இதுவரை 3 பிரிகேட்டுக்களை கொண்டி ருந்த 57 ஆவது படையணியில் மேலும் ஒரு புதிய பிரிகேட் இணைத்துக் கொள்ளப்பட்டுள் ளது. இந்த புதிய 574 பி?கேட்டின் கட்டளை அதிகா?யாக லெப். கேணல் செனக்க வியஜசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 11 ஆவது இலங்கை இலகுகாலாட் படை பற்றலி யனின் கட்டளை அதிகாரியாக 58 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட்டில் பணியாற்றி வந்தவராவார். 571 பிரிகேட் இராணுவம் திருமுறிகண்டி அக்கராயன் வீதியை குறிவைத்து இரு முனைகளால் நகர முயன்றுவருகையில், 572 பிரிகேட் கொக்காவில் நோக்கி நகர்வை மேற்கொண்டு வருகின்றது. இந்த பிரிகேட்டின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் செனரத் பண்டார கடந்த வாரம் கேணலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸின் வழிநடத்தலில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் 57 ஆவது படையணி 1997 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வெற்றி நிச்சயம் படை நடவடிக்øயில் ஈடுபட்ட 53 ஆவது படையணியின் தரத்தில் பேணப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

எனினும் கடந்த ஆண்டு விளாத்திக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதல் அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தொடர் எதிர்த்தாக்குதல்களில் இந்த படையணி கடுமையான இழப்புக்களை சந்தித்து வருவதும் இராணுவம் மீண்டும் மீண்டும் அதனை மறுசீரமைத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த மாத ஆரம்பத்தில் வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் 571 ஆவது பிரிகேட்டை சேர்ந்த 4 ஆவது சிங்கப்படை பற்றலியன் (4குகீ) கடுமையான இழப்புக்களை சந்தித் திருந்ததுடன், லெப். கேணல் எஸ்.வெலிகல தலைமையிலான இந்த பற்றலியனின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததும் நீங்கள் அறிந்தவையே.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிடாச்சூரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஜெகத் டயஸ் மயிரிழையில் உயிர்தப்பியிருந்தார். அதன் பின்னர் அவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் மூன்று பிரிகேட்டுக்களை கொண்டிருந்த இந்த படையணியுடன் மேலதிகமான 2,500 இராணுவத்தினர் சேர்த்துக் கொள்ளப்பட்டு நான்கு பிரிகேட்டுக்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஏனைய படையணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களையும், புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் வெற்றி நிச்சயம் படை நடவடிக்கையின் முடிவுப்புள்ளியாக ஒட்டுசுட்டான் களமுனை அமைந்தது போல தற்போதைய படை நடவடிக்கையின் முடிவுப்புள்ளியாக கிளிநொச்சி களமுனை அமைவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் தென்படுகின்றன.

:icon_mrgreen: கிளிநொச்சிக்கான போர் அரசின் வீழ்ச்சியா அல்லது எழுச்சியா என்பதை விட தமிழர்க்கு அது எத்தகைய அழிவுகளை ஏற்படுத்தப் போகிறது அல்லது ஏற்கனவே எவ்வளவு அழிவுகளை அது ஏற்படுத்தியிருக்கிறது என்று பார்ப்பதுதான் சரி. கிளிநொச்சியில் போர் வெடிக்கும்போது தெற்கில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயந்தான் புலிகளின் பிரதான தாக்குதல் அணிகள் இன்னும் களம் இறங்கவில்லை என்பது. அவை எப்போது இறங்கும் என்பது இப்போதைக்கு யாராலும் ஊகிக்க முடியாது, இது அரூஸ் உற்பட.இப்போதைக்கு உள்ள வழி, புலிகள் நடவடிக்கையை ஆரம்பிக்கும் வரை பொறுமையுடன் காத்திருப்பதுதான், அப்படியில்லாமல் எமது கற்பனைக்கு செயல்வடிவம் கொடுக்கும்படி கேட்பதெல்லாம் மக்களையும் புலிகளையும் சிக்கலுக்குள் மாட்டிவிடும் வேலை !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.