Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களைக் கொல்ல ரசாயன ஆயுதமா? -ஜூனியர் விகடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களைக் கொல்ல ரசாயன ஆயுதமா?

p38ta9.jpg

ஈழத் தமிழர் பிரச்னை மீண்டும் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அரசியல் கட்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் அதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையை ஆளும் ராஜபக்ஷே அரசாங்கம் அப்பட்டமான இனஅழித்தொழிப்பு போரை நடத்தி வருவது எல்லோரும் அறிந்ததுதான். அதை சிங்களவர்களுக்கான அரசாங்கம் என்று குறிப்பிடுவதே பொருத்தம். அண்மையில் 'நேஷனல் போஸ்ட்' என்ற பத்திரிகைக்கு இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அளித்திருந்த பேட்டியில், ''இலங்கையில் சிங்களவர் களாகிய நாங்கள் எழுபத்தைந்து சதவிகிதம் இருக்கிறோம். இந்த நாட்டை ஆள்வதற்கு எங்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. மற்றவர்கள் இங்கே வாழலாம். ஆனால், சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் எந்தச் சலுகையையும் கேட்கக் கூடாது'' என்று கூறியிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், ''மற்றவர்களைவிட தமிழர்கள் வசதியாக இருக்கிறார்கள்'' என்றும் அவர் கேலியாகக் கூறியிருக்கிறார்.

இலங்கையின் இனஅழித்தொழிப்பு போர் இப்போது முக்கிய மான கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு, இலங்கை ராணுவம் தொடர்ந்து தமிழர் பகுதிகளைத் தாக்கி வருகிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் அது தன்னு டைய பிடியை வலுவாக்கிக் கொண்டுள்ளது. அங்கிருக்கும் இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களான கருணா மற்றும் பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுக்களைப் பயன் படுத்தி அந்தப்பகுதியில் புலிகளின் செல்வாக்கை இலங்கை ராணுவம் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் புலிகள் இப்போது இலங்கையின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே நிலைகொண் டிருக்கிறார்கள். அங்கும்கூட அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தம்முடைய பிரதேசங்களை ராணுவத்திடம் இழந்து வருகிறார்கள். இதை யுத்த தந்திரத்தின் அடிப்படையிலான பின் வாங்கல் என்று சிலர் வர்ணித்தபோதிலும், கிரமமான யுத்தத்தில் (Conventional Warfare) ஈடுபடும் அளவுக்குப் புலிகள் இப்போது வலுவாக இல்லை என்ற கருத்தே பலமாக நிலவுகிறது. இலங்கையின் சிங்கள அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வரமறுத்து யுத்தத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு இதுவே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இலங்கையின் வடக்கே உள்ள வவுனியா, முல்லைத்தீவு, கிளி நொச்சி ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் இப்போதும் புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இதோ ஒருசில நாட்களில் கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம் என்று கொக்கரித்த சிங்கள ராணுவம் அங்குலம் அங்குலமாகத்தான் நகர முடிகிறது. அதற்கும்கூட பெரிய அளவில் அது இழப்பைச் சந்திக்கவேண்டிய நிலை. இதுவரை நடந்துவரும் யுத்தத்தில் புலிகள் தம்முடைய ராணுவ வலிமையை முழுவதுமாகப் பயன்படுத்தவில்லை. யுத்த முனைகளில் அனுபவம் பெற்ற தேர்ந்த வீரர்கள் புலிகளின் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, இனிமேல்தான் போர் உக்கிரமாக இருக்கும் என்று ராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

போரில் பின்வாங்குவதும், முன்னேறுவதும் புலிகளுக்குப் புதிதல்ல. அவர்கள் பலவீன மடைந்து விட்டனர் என்று சிங்கள ராணுவம் எண்ணியபோதெல்லாம்,

திடீர் தாக்குதல் களை நடத்தி சிங்கள ராணுவத்துக்கு மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியதோடு புதிய பிரதேசங்களைப் புலிகள் கைப்பற்றியவரலாறு ஏராளமாக இருக்கிறது. அப்படி இப்போதும்கூட நிகழலாம் என்ற அச்சம் சிங்கள ஆட்சியாளர் களிடம் உள்ளது. வடக்கில் நிலை கொண்டுள்ள யுத்த முனையை மாற்றுகிற விதத்தில் சிங்கள வர்கள் பெரும்பகுதியினராக வாழும் தெற்குப் பகுதியில் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற பயம் சிங்கள மக்களிடமும் பரவ லாக இருக்கிறது.

ராஜபக்ஷே அரசு தன்னுடைய அரசியல் எதிரிகளைத் தற்காலிகமாக அமைதிப்படுத்தி வைத்திருந்த போதி லும், இலங்கையின் பொருளாதார நிலை வலுவாக இல்லை. யுத்தம் நீடிக்க நீடிக்க இலங்கைக்குள் அது மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இப்போதே அங்கு சுமார் நாற்பது சதவிகிதம் என்கிற அளவுக்கு பணவீக்கம் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. அத்தி யாவசியப் பொருட்களின் விலை வானத்தில் இறக்கைக் கட்டிப் பறக்கிறது. அடிப்படை வசதிகள் எதுவும் அங்கே சரியாக இல்லை. எல்லாவற்றுக்கும் யுத்தம் ஒன்றையே சாக்காகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் ராஜபக்ஷே. ஆனால், இதை வெகு காலத்துக்குச் செய்யமுடியாது என்பது அவருக்கும் தெரியும். போர் நீடிக்குமேயானால், இலங்கைப் பொரு ளாதாரம் படுபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுவிடும். அதைத் தொடர்ந்துவரும் அரசியல் குழப்பங்கள் நிச்சயம் இன்னும் மோசமான நிலைமையைத்தான் அங்கு ஏற்படுத்தும். அதனால்தான் சீக்கிரம் போரை முடிவுக்குக் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது.

கருணா குழுவின் பிரிவுக்குப் பிறகு கிரமமான யுத்தத்தை நடத்துவதில் புலிகளுக்குப் போதுமான வீரர்கள் இல்லையென்பது உண்மைதான். என்றாலும், அவர்கள் கெரில்லா போர் முறையில் இன்னும் வலுவாகவே இருக்கிறார்கள். எனவே, சிங்கள ராணுவம் அவ்வளவு எளிதாக கிளிநொச்சியைப் பிடித்துவிட முடியாது. அதனால்தான், அவர்கள் விமானங்களின் மூலம் தமிழர் பகுதிகளில் குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள் என தினந்தோறும் ஏராளமானவர்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கிறார்கள். போரின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாகப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள

விகடன் மிக விளக்கமாக இந்தியவின் நிலையையும், ஈழத்தமிழரின் மிக இக்கட்டான பாதுகாப்பிண்மை நிலையையும் எடுத்து விளக்கி உள்ளது...

எனவே இந்திய அரசு இனியாவது இலங்கையரசிற்கு இராணுவ உதவிகளை நிற்பாட்டி

இலங்கையை பணிய வைக்க நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமா?

தமிழ்னாட்டுமக்கள் தொடர்ந்து போரட்டங்களை மேற்கொண்டு மத்திய அரசின் நிலையை மாற்ற செயல்படவேண்டும்....ஒவ்வொரு நிமிட தாமதமும் தமிழ்மக்களின் உயிர்களின் இழப்பை கணக்கின்றி அதிகரிக்க செய்யும்...

அதாவது இந்திரா காந்தி அம்மையார் ஆட்சி செய்த போது இருந்த நிலைக்கு மத்திய அரசை கொண்டு வரவேண்டும்... முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால்தான் இனஅழித்தொழிப்புக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும். சிங்கள ராணுவம் மூர்க்கமான இறுதிகட்டப் போரை தொடங்கியிருக்கிறது. அங்கு தமிழ்ப் பெண்களெல்லாம் கெடுக்கப்பட்ட பிறகு, தமிழர்களெல்லாம் கொல்லப்பட்ட பிறகு இங்கே ஒப்பாரி வைப்பதால் பயன் எதுவுமில்லை. ''நெஞ்சங் குமுறுகிறார் - கற்பு நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே யந்தப் பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமு மில்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினிலே மிஞ்ச விடலாமோ'' என்று பிஜித் தீவை எண்ணி பாரதி பாடியது, ஈழத் தமிழருக்காகப் பாடியது போல் உள்ளது!

தாய்த் தமிழகத்தைச் சேர்ந்த நாம் இன்னும் கைகளைப் பின்புறம் இறுகக்கட்டி, யாருக்காக காத்திருக்கிறோம்?

........................................... :rolleyes:

Edited by muneevar

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரசாயன ஆயுதங்களை இந்தியாவே இலங்கைக்கு வழங்கி வருவதாகவும் ஒரு செய்தி உலவுகின்றது. மத்தியப் பிரதேசத்திலுளள ஒரு தொழிற்சாலையிலேயே இவ்விரசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு வினியோகிக்கப்படுகின்றதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.