Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்: ஜெயலலிதா

Featured Replies

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை மூலம் விளக்கியுள்ளார்.

இதுக் குறித்து இன்று அவர் வெள்யிட்டுள்ள அறிக்கை.

இலங்கையில் மற்ற குடிமக்களைப் போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடிமக்கள்.

சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வி, வேலைவாய்ப்பில் சமத்துவம் பெறவும் இலங்கைத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்.

சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை அங்கீகரிக்கிறோம்.

இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை புரிந்து ஏற்றுக் கொள்கிறோம்.

திசைமாறிப் போன ஆயுதப் போராட்டத்தினால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை கண்டு வேதனை அடைகிறோம். அதற்கு காரணமான ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கிறோம்.

ஆயுதப் போரின் விளைவாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதையும், தமிழர் விடுதலைக்காக போராடிய தலைவர்கள் கொன்று குவிக்கப்பட்டதையும் ஏற்க இயலாது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சுய நிர்ணய உரிமைக்கென்ற தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஆயுதமேந்தியவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்.

ஆயுத மோதல்களால் இந்தியாவின் சட்டம் ஒழுங்கும், அமைதியும் இறையாண்மையும் சீர்குலைவதை ஏற்க முடியாது.

தற்போது இலங்கையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உண்ண உணவு, தங்க இடம், மருந்து ஆகியவை இல்லாமல் வாழ்க்கையோடு அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை திரட்டித்தர மத்திய அரசு முன் வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்: ஜெயலலிதா

[வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 05:28 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

சுயநிர்ணய உரிமை வேண்டி ஈழத் தமிழர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கிறோம் என்று தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கை தமிழர் விவகாரத்தில் கருணாநிதியின் கேள்வி-பதில் விளக்கமும், செயல்பாடும் வேடிக்கையாக உள்ளன.

தன்னுடைய மைனாரிட்டி அரசின் செயல்படாத தன்மையையும், கடமை தவறிய முறைகளையும், குறைகளையும் யாராவது சுட்டிக்காட்டினால், அதற்காக மற்றவர்கள் மீது சேற்றை அள்ளி வீசி பிரச்சினையில் இருந்து நழுவி தப்பித்துக்கொள்ளும் தந்திரத்தில் இறங்கிவிடுகிறார் கருணாநிதி.

இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்; உள்நாட்டு சண்டை என்ற பெயரில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நிவாரண பொருட்களை அனுப்பவேண்டும்-ஜெயலலிதா வலியுறுத்தல்

சென்னை: இலங்கையில், பசி, பட்டினியால் வாடும் தமிழ் மக்களை காப்பாற்ற நிவாரண பொருட்களை அனுப்ப வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில், அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பசி, பட்டினியால் அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும், அவர்கள் தங்களது வீடுகளை இழந்து, அகதிகளாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமத்துவம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குவதை தமது கட்சி ஆதரிப்பதாகவும், ஆனால், அங்கு நடைபெறும் பயங்கரவாத செயல்களை எதிர்ப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னையில், பிரதமர் மன்மோகன்சிங், அதிபர் ராஜபக்ஷேவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.