Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க ஒக். 14 இல் அனைத்து கட்சிக்கூட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Featured Replies

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க ஒக். 14 இல் அனைத்து கட்சிக்கூட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

[வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 10:20 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழ்நாட்டின் அனைத்து கட்சிக்கூட்டத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14.10.08) தமிழ்நாடு அரசு கூட்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்து அரசியல் இயக்கங்களும் அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதின் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைவுபடுத்திடவும்- நிலையான அமைதி அங்கே உருவாகிடத் தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்- அங்கே இனப்படுகொலையும்- போரும் அல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்ள தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் ஒக்ரோபர் 14 ஆம் நாள் மாலை 4:30 நிமிடத்துக்கு தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க வேண்டிய முயற்சி.. ஆனால்..

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அவர்களின் போராட்ட சக்திகளான விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தாத வகைக்கு கூடி ஆராயுங்கள்.

ஐக்கிய இலங்கைக்குள் இருந்து கொண்டு.. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை.. தாயகம் என்பதை நிலை நிறுத்த உள்ள வழிகளை ஜெயலலிதா போன்றவர்கள் முன் வைக்க வேண்டிக் கோருங்கள்.

கடந்த கால இராணுவ வரலாற்றுத் தவறுகளை.. விடுதலைப்புலிகள் மீது மட்டும் சுமத்தி.. விடுதலைப் போராட்டத்தினையும் அதன் தாங்கு சக்தியாக இருக்கும் ஆயுதப் போராட்டத்தையும் பயங்கரவாதமாக இனங்காட்டுவதில் உள்ள தவறை விளங்கிக் கொள்ள முனையுங்கள்.

ஈழ விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதப் போராட்டத்தை மட்டும் தெரிந்தெடுத்திருக்கவில்லை. அது சாத்வீக வழியிலும் போராடி.. களைத்துதான் ஆயுதப் போராட்ட வழிக்கு வந்தது. அதுமட்டுமன்றி ஆயுதப் போராட்டத்தை வளர்த்தவர்களே அதை நசுக்க நயவஞ்சகமாக செயற்பட்ட தன்மைகளை வெளிக்கொணர்ந்து நீதி நியாயத்துடன் நேர்மையாக ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் சுதந்திர வாழ்வுக்காக உழைக்க முன் வாருங்கள்.

விடுதலைப்புலிகளையோ.. ஈழத்தமிழ் மக்களின் தேசிய தலைமையையோ புறந்தள்ளி வைத்துக் கொண்டு.. ஈழத்தமிழ் மக்களுக்கு விடிவு பெறப்படலாம் என்ற கனவினை விட்டு.. வெளியே வர கலந்தாலோசியுங்கள்.

ஈழத்தமிழர்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறு என்று சொல்லி ஈழத்தமிழர்களை ஒற்றுமைப்படுத்துகிறோம் என்று பிளவுபடுத்தும் காரியத்தை மத்திய அரசின் நலனுக்காக முன்னெடுக்காமல்.. உண்மையான இதய சுத்தியுடன்.. ஈழத்தமிழ் மக்களினதும்.. அவர்களின் போராட்ட வடிவமான விடுதலைப்புலிகளினதும்.. யதார்த்த தளத்தை ஏற்றுக் கொண்டு.. திட்டங்களை.. முன் வையுங்கள். கொள்கைகளை வகுக்க முனையுங்கள்.

விடுதலைப்புலிகள்.. ஈழத்தமிழர்கள் இரு வேறு சக்திகள் என்பது மிகப் பழமையான இந்திய மத்திய அரசின் அணுகுமுறை. அது 1987 இலேயே தோல்வி கண்டுவிட்டது. இருந்தும்.. அதை மீண்டும் பயங்கரவாத முலாம் பூசி.. புகுத்த முனைவது மிகப் பெரிய வரலாற்றுத் தவறு மீள புதிப்பிக்கப்படுவதாகிறது..!

இவற்றையெல்லாம் தெளிவாக உணர்ந்து கொண்டு.. கொள்கைகள்.. பிரகடனங்கள்.. அறிக்கைகள் ஆகியவற்றை தயாரிக்க முன் வாருங்கள். சொல்லிக் கொண்டிருப்பதால் காலத்தை வீணடிக்காது ஈழத்தமிழரின் விடிவுக்காக கள மிறங்கி செயற்பட துரிதமாக முன் வாருங்கள்.

அரசியல் சலசலப்புகளூடு.. ஈழத்தமிழர் வேறு விடுதலைப்புலிகள் வேறு என்ற புராணம் பாடிக் கொண்டு தமிழ் மக்களிடையே பிரிவினையை ஆழப்படுத்தும்.. விதமாக இந்திய மத்திய அரசின்.. புலி விரோத சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதை தமிழக அரசியல் கட்சிகள் தெளிவாக மறுதலித்துச் செயற்பட வேண்டும்.

ஈழத்தமிழரின் போராட்டமும் சரி.. விடுதலையும் சரி.. ஆயுதப் போராட்டம் இன்றியோ.. விடுதலைப்புலிகள் இன்றியோ ஒருபோதும் வெற்றி பெறாது என்ற யதார்த்ததை உணர்ந்து செயற்பட முன் வாருங்கள்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாக உச்சரிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.