Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னையில் மறியற் போராட்டம் நடத்திய ம.தி.மு.க பொது செயலாளர் திரு. வை.கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

Featured Replies

வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பிரச்சினையில் இந்திய அரசு, அந்நாட்டு அரசிற்கு உதவி வருவதை கண்டித்தும் ம. தி. மு. க சார்பில் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியில் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் மறியலுக்கு முன் சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி அருகேயிருந்து ஊர்வலம் புறப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.

இதனால் காலையில் இருந்தே இன உணர்வாளர்களும், கட்சியினரும் ஏராளமானோர் திரண்டனர். இந்த மறியல் போராட்டத்திற்கு கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு.பழ. நெடுமாறன் கூட்டத்திற்கு வந்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திரு. முத்துசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய திரு. வை. கோ இப்பிரச்சினையில் தமிழக அரசும், இந்திய அரசும் துரோகம் இழைத்து வருவதாக குற்றஞ்சாட்டினார். தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்து வரும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசு இராணுவ உதவி வழங்கிட கூடாது என்றும், சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அங்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க மறுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எனது நிலை தொடரும் என்றும், அவர்களது சுதந்திர போராட்டத்தை ம.தி.மு.க தொடர்ந்து ஆதரிக்கும் என்று தெரிவித்தார். பின் பேரணியாக புறப்பட்டு, மத்திய அரசு அலுவலகம் முன்பாக மறியல் ஆர்பாட்டம் செய்ய முயன்ற போது, பொலீஸார் அவரையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவரது கட்சி தொண்டர்களையும் கைது செய்தனர்.

நன்றி வீரகேசரி

http://img235.imageshack.us/my.php?image=03fo4.jpg

மேலதிக படங்களுக்கு : www.virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழருக்காக ஆர்ப்பாட்டத்தில் கைதாகி சென்ற வைகோ உட்பட அனைத்து எம் தமிழ்நாட்டு உறவுகளுக்கும் நன்றிகள்

[விரைவில் விடுதலையாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்]

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழருக்காக ஆர்ப்பாட்டத்தில் கைதாகி சென்ற வைகோ உட்பட அனைத்து எம் தமிழ்நாட்டு உறவுகளுக்கும் நன்றிகள்

[விரைவில் விடுதலையாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்]

விரைவில் விடுதலையாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்...........?????????????

இது ஏன்???

அவர்களை ஏன் அவமதிக்கின்றீர்கள்?

ஏனெனில் அவர்களில் பெரும்பான்மையோர் இதில் உடன்பாடு அற்றவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் விடுதலையாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்...........?????????????

இது ஏன்???

அவர்களை ஏன் அவமதிக்கின்றீர்கள்?

ஏனெனில் அவர்களில் பெரும்பான்மையோர் இதில் உடன்பாடு அற்றவர்கள்

எதை சொல்கிறீர்கள் குகதாசன் அவமதிப்பு என்று??

  • கருத்துக்கள உறவுகள்

எதை சொல்கிறீர்கள் குகதாசன் அவமதிப்பு என்று??

எல்லாம் வல்ல இறைவன் என்பதில்

அவர்களில் பெரும்பான்மையோர் இதில் உடன்பாடு அற்றவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வல்ல இறைவன் என்பதில்

அவர்களில் பெரும்பான்மையோர் இதில் உடன்பாடு அற்றவர்கள்

கடவுளை வேண்டிக்கொள்வது நமது கடமை அதில் உடன் பட்டுக்கொள்வதென்பதும் உடன் பட மறுப்பவர்கள் என்பதும் அவரவர் விருப்பம்

நான் சொல்ல வாரது அவர்கள் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று அதற்க்காக தான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

ம.தி.மு.க ,தி.மு.க, அ.தி.மு.க ,ஆகிய கட்சிகளில் பல தொண்டர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தான்.

தி.க தொண்டர்கள் தான் கடவுள் மறுப்பாளர்கள்...

அப்படியே கடவுள் மறுப்பாளர்களாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை கொண்ட முனிவர் அவர்களுக்காக வேண்டிக்கொள்வதால் ஒன்றும் அவமதிக்கப்பட்டதாக எண்ண மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

மேலும் முனிவர் அவர்களே இப்படி போராட்டம் செய்யும் போது கைதாகும் (வன்முறையில் ஈடுபடுவோர் தவிர) நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அன்று மாலையே விடுவிக்கப்படுவர்..எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

எல்லாம் வல்ல இறைவன் என்பதில்

அவர்களில் பெரும்பான்மையோர் இதில் உடன்பாடு அற்றவர்கள்

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறவுகள்

ம.தி.மு.க ,தி.மு.க, அ.தி.மு.க ,ஆகிய கட்சிகளில் பல தொண்டர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தான்.

தி.க தொண்டர்கள் தான் கடவுள் மறுப்பாளர்கள்...

அப்படியே கடவுள் மறுப்பாளர்களாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை கொண்ட முனிவர் அவர்களுக்காக வேண்டிக்கொள்வதால் ஒன்றும் அவமதிக்கப்பட்டதாக எண்ண மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

மேலும் முனிவர் அவர்களே இப்படி போராட்டம் செய்யும் போது கைதாகும் (வன்முறையில் ஈடுபடுவோர் தவிர) நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அன்று மாலையே விடுவிக்கப்படுவர்..எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

இல்லையண்ணா

நான் குறிப்பிட்டது வை.கோ. அவர்களை

ஏன் அவரது பல தொண்டர்கள் அவரது வழியைப்பின்பற்றுகின்றனர்

அதைவிட

உங்களுக்கு சில விடயங்கள் புரியவில்லையென்று நினைக்கிறேன்

இங்கு எழுதும் சிலர் தேவையற்று

தேவையற்ற இடங்களில் கடவுள்மீதான விவாதங்களை புகுத்தி திசைதிருப்புகிறார்கள்????

ஏனென்று புரியவில்லை?????

இப்படி போராட்டம் செய்யும் போது கைதாகும் (வன்முறையில் ஈடுபடுவோர் தவிர) நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அன்று மாலையே விடுவிக்கப்படுவர்..

எனவே கடவுளைக்கூப்பிடும் அளவுக்கு விபரீதமான விடயமல்ல............

ஆனால் ஏன்...............???? கடவுளை அழைக்கிறார்????

அதன் பின் என் கடவுள் உன்கடவுள் அவன் கடவுள்............................?????

என்று விவாதம் செய்து அவர்களது தியாகத்தை நாறடித்துவிடுவார்கள்

இதுதான் இங்கு நடக்கிறது

அதைத்தான் எதிர்பார்க்கின்றார்கள்.............???

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையண்ணா

நான் குறிப்பிட்டது வை.கோ. அவர்களை

ஏன் அவரது பல தொண்டர்கள் அவரது வழியைப்பின்பற்றுகின்றனர்

அதைவிட

உங்களுக்கு சில விடயங்கள் புரியவில்லையென்று நினைக்கிறேன்

இங்கு எழுதும் சிலர் தேவையற்று

தேவையற்ற இடங்களில் கடவுள்மீதான விவாதங்களை புகுத்தி திசைதிருப்புகிறார்கள்????

ஏனென்று புரியவில்லை?????

இப்படி போராட்டம் செய்யும் போது கைதாகும் (வன்முறையில் ஈடுபடுவோர் தவிர) நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அன்று மாலையே விடுவிக்கப்படுவர்..

எனவே கடவுளைக்கூப்பிடும் அளவுக்கு விபரீதமான விடயமல்ல............

ஆனால் ஏன்...............???? கடவுளை அழைக்கிறார்????

அதன் பின் என் கடவுள் உன்கடவுள் அவன் கடவுள்............................?????

என்று விவாதம் செய்து அவர்களது தியாகத்தை நாறடித்துவிடுவார்கள்

இதுதான் இங்கு நடக்கிறது

அதைத்தான் எதிர்பார்க்கின்றார்கள்.............???

அண்ணே குகதாசன் எல்லாம் வல்ல இறைவன் என்பதை கொஞ்சம் நல்லபடியாக வாசித்து பாருங்கள்

அதாவது எந்த கடவுள் என்று நான் குறிப்பிடவில்லையே அப்போ நீங்கள் தான் இதை திசை திருப்ப பார்க்கிறியள் கடவுளைப் பற்றி பேசி களத்தை நாறடிக்க நான் விரும்பவில்லை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்

நன்றி வேலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.