Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரந்து பெறும் பிச்சை வேறு இணக்கப் பேச்சுத் தீர்வு வேறு

Featured Replies

இரந்து பெறும் பிச்சை வேறு இணக்கப் பேச்சுத் தீர்வு வேறு

இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சாத்தியம் என்று மீண்டும் வெளியுலகுக்குப் பம்மாத்துக் காட்டுவது போல அறிவிப்பு விடுத்திருக்கின்றர் மஹிந்த.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வெழுச்சி தமிழகத்தில் மீண்டும் பீறிட்டுக் கிளம்பியுள்ள பின்னணியில் அதன் காரணமாகப் புதுடில்லி அரசிடமிருந்து வந்திருக்கும் புதிய அழுத்தத்தைச் சமாளிக்கும் நோக்கில் இதுவரை காலமும் செயற்றிறன் இன்றித் தூங்கிக் கிடந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை, மீண்டும் தட்டி எழுப்பி, சர்வதேசத்துக்குக் கண்கட்டு வித்தை நாடகம் ஒன்றை திரும்பவும் நடத்திக் காட்டுவதற்காக ஒரு தடவை கூட்டி முடித்திருக்கிறாh அவர்.

அந்தக் கூட்டத்திலே இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசில் தீர்வே சாத்தியம் என்று - 'சாத்தான் வேதம் ஓதுவது போல' நியாயம் பிளந்திருக்கிறர்ர் அவர். அதற்காகவே சர்வகட்சிப் பிதிநிதிகள் கூட்டம் நடைபெறுகின்றது என்று விளக்கம் வேறு அவர் அளித்திருக்கிறார்.

தமிழரின் உரிமைக்காகப் புலிகள் நடத்தும் போராட்டத்தை, வழமையான ஏனைய சிங்களத் தலைவர்களைப் போல 'பயங்கரவாதம்' என்றும் சித்தரித்துள்ள அவர், அதனை இராணுவ நடவடிக்கை மூலம் அடக்கி பேச்சு மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப் போகிறார் எனவும் சூளுரைத்திருக்கின்றார்.

வேறு வழியின்றி மஹிந்தவின் தயவிலும், தாட்சண்யத்திலும் அவரது அரசில் ஒட்டிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்றவற்றைக் கூட்டி வைத்துக் கொண்டு பேச்சு நடத்துவாரம் மஹிந்த. அவர்களின் இணக்கத்துடன் ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் அரசியல் தீர்வை அவர் பெற்றுத்தருவாரம். அதை ஈழத் தமிழ் மக்களும், புலம் பெயர் வாழ் தமிழர்களும், சர்வதேசமும் நம்ப வேண்டுமாம்.

இவைதான் மஹித இப்போது வெளியிட்டு வரும் கருத்துகளில் தொக்கி நிற்கும் அர்த்தங்களாகும்.

நாடாளுமன்றில் ஈழத்தமிழர்களைப் பெருமளவில் ஏன் 95 சத வீதம் என்று கூறலாம் பிரதிநிதித்துவப்படுத்தும் த.தே.கூட்டமைப்புக்கு இந்த சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பே இல்லை.

கலந்த கொண்ட ஈ.பி.டி.க்கோ, கருணாவின் கட்சிக்கோ அரசின் தயவில் தங்கி நிற்பதைத் தவிர வேறு மாற்று மார்க்கமே இல்லை. அரசுத் தரப்பு எடுக்கும் தீர்மானங்களுக்கு ';ஜல்ரா' போடுவதை விட, அதற்கு அப்பால் ஈழத்தமிழருக்கு நியாயம் வேண்டிப் பேரம் பேசும் ஆற்றரல் எதுவுமே அவற்றுக்கு இல்லை என்பது வெளிப்படையான அம்சம்.

ஆயுதப் பலம் கொண்ட வகையிலும், மக்கள் ஆதரவுப் பலம் மிக்க வகையிலும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிப் பேரம் பேசும் வலு விடுதலைப் பலிகளிடம் தான் உள்ளது.

அத்தகைய புலிகளை அழித்து, ஒழித்து, அடக்கி விட்டுத் தான் மறு வேலை என்று கர்ச்சித்து, போர் வெறி கொண்டு தீவிரம பிடித்து அலைகின்றன இலங்கைப் படைகள்.

மறுபக்கத்தில், ஈழத்தமிழ் மக்களின் பேராதரவு பெற்ற நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கொண்ட த.கூட்டமைப்பைப் புறக்கணித்து விட்டு சமாதானத் தீர்வு நாடகம் ஆடுகிறது கொழும்பு.

ஆக, புலிகளை ஒழித்து, த.தே.கூட்டமைப்பை ஒதுக்கி, தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவை சிதைத்து விட்டு.

அரசின் காலடியில் விழுந்து கிடக்கும் ஈ.பி.டி.பி., கருணாகுழு, சங்கரி அணி, சித்தர் கட்சி போன்றவற்றோடு பேசி, இலங்கை இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காணப் போகின்றதாம் மஹிந்த அரசுத் தலைமை.

ஈழத் தமிழருக்காகப் பேச வேண்டிய உண்மையான அதிகாரபூர்வமான மக்கள் ஆதரவு பெற்ற தரப்புகளையும், கட்சிகளையும் ஒழித்து அல்லது ஒதுக்கித் தள்ளிவிட்டு.

- வேறு மார்க்கம் ஏதுமின்றித் தன் காலில் சரணாகதி அடைந்து விழுந்து கிடக்கும் ஒட்டுக் குழுக்கள், கூட்டுக் கட்சிகளை முன்னிறுத்தி -

அமைதிப் பேச்சு' 'சமாதானத் தீர்வு' என்றெல்லாம் கபட வேடம் போடுகிறார் மஹிந்த. காலில் விழுந்து கிடப்போருடன் பேசுவது இணக்கத்துக்கான கலந்துரையாடல் அல்ல. அது அதிகார பீடம் போடும் பிச்சையை யாசகமாகப் பெறும் இரந்துண்ணும் நிலைதான்.

அதைத்தான் அமைதித் தீர்வுக்கான சமாதான முயற்சி என்று காட்டப் பார்க்கிறார் மஹிந்த.

சிங்கள அதிகார வர்க்கத்திடம் வெறும் நாடாளுமன்றக் கதிரைகளின் பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு சுமார் மூன்றரை தசாப்பத காலம் பேச்சு நடததி, நம்பி ஏமாந்து, மோசம் போன பின்னர்தானே, பேச்சுகான பேரம் பேசும் வலுவையும் பெற்றுக் கொண்டு மேல் நடவடிக்ககை எடுக்கத் தீர்மானித்து, ஆயுதம் தூக்கினார்கள் தமிழர்கள்...!

அதை மறந்து மறைத்து இப்போது கதை விடுகிறது சிங்களத் தலைமை. அதற்குத் துணை போய் வழமை போல துரோகமிழைக்கினறன சில தமிழர் தரப்புகள்.

நன்றி உதயன்

(ஆசிரியர் தலையங்கம்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.