Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் ஆதரவு - இந்து அமைப்புக்கள் இரு அணி நிலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு மட்டும் ஒரு நியாயமா?-பால் தாக்கரே

மும்பை: தமிழர்களின் நலன் காக்க தமிழக அரசியல் கட்சிகள் உணர்வோடு செயல்படுவதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாங்கள் மராத்தியர் நலன் காக்க தீவிரம் காட்டினால் எங்கள் மீது குறிவைத்து குற்றம் சாட்டுகின்றனர் என்று சிவசேனை தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார்.

சிவசேனை கட்சி பத்திரிகையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில்,

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலனை காக்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் உணர்வோடு நடந்து கொள்கின்றன.

இலங்கை தமிழர் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று விடுவோம் என்று திமுக அரசு மிரட்டல் விடுத்துள்ளது.

தமிழக கட்சிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாங்கள், மராத்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினால் எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

பிராந்திய உணர்வோடு நடந்து கொள்வதாக முத்திரை குத்தி விமர்சனம் செய்கின்றனர். மத்தியில் ஆட்சி அமைக்கும் அரசுகள் எப்போதுமே மராத்தியர் நலனில் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன.

இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. மராத்தியர்களின் நலன் காக்க ஆதரவாக இருப்பதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

--------------------

தனித் தமிழ்நாடா?-மதிமுகவுக்கு ராம.கோபாலன் கண்டனம்

சென்னை: தனித் தமிழ்நாடு உருவாகும் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் ஈழம் மட்டுமல்ல தனித் தமிழ்நாடும் மலரும் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசியுள்ளார். இந்த கருத்தரங்கில் விடுதலைப் புலிகள் ஆதரவு வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாம்.

மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான் என்று பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்கள் அப்பட்டமான தேச விரோத பேச்சுக்களாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும் தூண்டும் விதத்தில் பேசியுள்ளனர்.

இதையும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

இந்த பேச்சுக்களுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

இலங்கை தமிழர்களுக்காக ரத்தம் கொதிக்க பேசிய ஈழ ஆதரவு தலைவர்கள் மலேசிய நாட்டின் கொடுஞ்சிறையின் அடைக்கப்பட்டு உள்ள ஹின்ட்ராப் தலைவர்களை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி, பேரணி, பொதுக் கூட்டம் நடத்தாதது ஏன்?.

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுபவர்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதி விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் பா எழுதியவர்.

சில மாதங்களுக்கு முன் புலிகளுக்கு ஆதரவாக பேசிய மதிமுகவைச் சேர்ந்த வேளச்சேரி மணிமாறனை போலீசார் கைது செய்தனர். ஆனால், திமுக அரசு அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக கூறி விடுதலை செய்துவிட்டது.

தமிழ், தமிழர் என்று கூறி தனி நாடு கோரும் இந்த தேசிய விரோதிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசி வரும் தலைவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தை புலி ஆதரவு தேச விரோதிகளிடமிருந்து காத்திட தேசபக்த தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியுள்ளார்.

-------------------------------------------------------------------------------

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் எப்போதும தேசியத்தின் பக்கம் என்பதில் நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன். மொகலாயர் காலத்திலும் சரி, ஆங்கிலேயர் காலத்திலும் சரி, தமிழகம் தனது பங்கை செய்துள்ளது. அகிம்சை முறையானாலும், ஆயுதம் ஏந்திய போராட்டமாக இருந்தாலும் தமிழகத்தின் பங்கு அளப்பரியது.

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தோன்றி, அதிலிருந்து வேறு சில கட்சிகளும் தோன்றிய பிறகு தமிழகத்தில் பிரிவினை கோஷம் எழுந்தது. நாத்திகம், பிரிவினைவாதம் என்னும் இரண்டு தூண்களின் ஆதாரத்தில் எழுந்தது திமுக.

ஆனால் 1967ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இந்த இரு விஷயங்களையும் எழுப்பவேயில்லை. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த திமுக பிரிவினைவாதத்தை பகிரங்கமாக கைவிட்டது.

ஆனால், தமிழக மக்கள் மத்தியில் தோற்றுப்போன பிரிவினைவாதத்தை இப்போது மீண்டும் கிளப்ப சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி பெறப்போவதில்லை.

தமிழகத்தில் உள்ள பெருவாரியான மக்கள் இலங்கையில் இன்னலுறும் தமிழருக்காக இரக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அதைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் ஆதரவு கோஷம் எழுப்புபவர்களும், தனித் தமிழ்நாடு கோரிக்கை வைப்பவர்களும் லாபம் பெற முயற்சி செய்வதை அறிந்து தமிழக மக்கள் இந்த பிரச்சனையிலிருந்து பின் விலகுவார்கள்.

இதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்கள் நலனே. எனவே பிரிவினைவாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள். தமிழக அரசு இத்தகைய பேச்சுக்களை அலட்சியம் செய்யாமல், மெத்தனமாக இல்லாமல் உறுதியுடன் செயல்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தட்ஸ்தமிழ்.கொம்

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.