Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது அறிக்கையால்தான் வைகோ கைது- திருமா, பாரதிராஜா- சீமானையும் கைது செய்க: ஜெயலலிதா

Featured Replies

(3ம் இணைப்பு)எனது அறிக்கையால்தான் வைகோ கைது- திருமா, பாரதிராஜா- சீமானையும் கைது செய்க: ஜெயலலிதா

[வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 09:39 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

தான் வெளியிட்ட அறிக்கையால்தான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப்பன் உள்ளிட்டோரை கைது செய்த தமிழக முதல்வர் கருணாநிதி, புலிகளை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாளவன், இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர் உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

எந்தப் பிரச்சினையானாலும் அதை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதில் கருணாநிதி கைதேர்ந்தவர் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற திரைப்படத்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான பல ஆட்சேபகரமான தேசவிரோத கருத்துகளைத் தெரிவித்த திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நான் ஆட்சியில் இருந்திருந்தால் இது போன்ற தேசவிரோதச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கைது செய்திருப்பேன் என்றும் நேற்றைய தினம் நான் வெளியிட்ட அறிக்கை மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை வெகுவாக தாக்கியிருக்கிறது.

அதனால் தான் திடீரென்று இன்று அரைகுறையாக நடவடிக்கை எடுத்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனை கைது செய்திருக்கின்றனர். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் பாராபட்சம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வைகோ மற்றும் திரு. கண்ணப்பன் ஆகியோர் பேசுவதற்கு முன்பே, இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த சீமான், அமீர், பாரதிராஜா மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த இராம. நாராயணன் போன்றோரின் மீது கருணாநிதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவர்களை ஏன் கைது செய்யவில்லை?

அதேபோன்று, 25-01-2008 அன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான கருத்துகளை பகிரங்கமாகத் தெரிவித்த திருமாவளவன் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

விடுதலைப் புலிகளுக்கான ஆயுதப் பொருட்களை கடத்திய வன்னியரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவர்களை ஏன் கைது செய்யவில்லை?

இதற்கெல்லாம் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்தே தீரவேண்டும். தமிழர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள். தம்மை அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களுக்கு ஒரு சட்டமும், ஆதரிப்பவர்களுக்கு வேறு ஒரு சட்டமும் இருக்க முடியாது.

தற்போது கருணாநிதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, தேசப்பற்றின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்பது தற்போதைய கருணாநிதியின் செயல்பாடுகளில் இருந்து தெளிவாகிறது.

இவர்களை எல்லாம் கைது செய்யும் தார்மீக உரிமை கருணாநிதிக்கு இருக்கிறதா? என்ற கேள்வி தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனென்றால், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மறைவிற்கு இரங்கற்பா எழுதி அதனை அதிகாரபூர்வமாக தமிழக அரசின் செய்தித்துறை மூலமாகவே வெளியிட்டவர் கருணாநிதி.

எனவே முதலில் கைது செய்யப்பட வேண்டிவர் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி தான். ஆனால், அதிகாரம் கருணாநிதியின் கையில் இருப்பதால், அவரை கைது செய்ய தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநர் நடவடிக்கை எடுக்க மாட்டார்.

எனவே, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்கள் மறைவிற்கு இரங்கற்பா எழுதி வெளியிட்டு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை விடுதலைப் புலிகளுக்கு

ஆதரவாக மாற்றி அமைத்த மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை சட்ட

விரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்படி உடனடியாகக் கைது செய்து தி.மு.க. ஆட்சியை கலைக்க மத்திய அரசு இனி தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

தமிழகத்திலை நியாயம் கருத்து சுதந்திரம் காந்தியோடு செத்து போய் விட்டது என்பதுக்கு இந்த அறிக்கை நல்ல உதாரணம்....

சட்டம் எல்லாம் புறம்பாக செயற்படுபவர்களை தான் தண்டிக்க வேண்டும் எண்று இல்லை... பேசினாலும் பிரச்சாரம் செய்தாலும் தவறாம்...

சொல்வார் பேச்சு கேட்கும் தமிழக மக்களை சித்தரித்து முட்டாள் என்கிறது இவரின் அறிக்கை... தமிழகத்தில் எவருக்கும் சொந்தமாக அறிவு இல்லை என்கிறார் இவர்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பிரச்சினையானாலும் அதை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதில் கருணாநிதி கைதேர்ந்தவர் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

ஜெயலலிதா - உங்களை விடவா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.