Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாநிதியை சந்திக்க பிரணாப் சென்னை வருகை

Featured Replies

புதுடெல்லி \ சென்னை (ஏஜென்சி)

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்தியா வந்துள்ள அந்நாட்டு தூதுவருடன் நடத்திய பேச்சு விவரங்களை கருணாநிதியிடம் எடுத்துரைப்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை சென்னை வருகிறார்.

நேற்றிரவு டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஆலோசகரும், அவரது சகோதரருமான பாசில் ராஜபக்சே, இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தமிழர்கள் நலனைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது அவர் விளக்கியதாக தெரிகிறது.

மேலும் தற்போதையப் போரினால் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கியதாக கூறப்படுகிறது.

அத்துடன் தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என அவர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம் இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு வழங்கும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை ஏற்றுக் கொள்ள பிரணாப் வலியுறுத்தியதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள பாசில் ஒப்புக் கொண்டதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை தூதர் தன்னுடன் நடத்திய பேச்சுக்களின் விவரங்களை கருணாநிதியிடம் எடுத்துக் கூறுவதற்காக பிரணாப் முகர்ஜி இன்று மாலை சென்னைக்கு வருகிறார்.தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலும் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பிரணாப் முகர்ஜி யுடன் நடத்திய பேச்சுக்களுக்கு பிறகு டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாசில் ராஜபக்சேஇ இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும், இது தொடர்பாக கூட்டு அறிக்கை ஒன்று இன்று மாலை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

நன்றி : யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா)

வவுனியா, அநுராதபுரம் வைத்திய சாலைகளில் காயப்பட்டு வரும் ஆக்கிரமிப்பாளனுக்கு வைத்தியம் பார்க்க மருந்து வசதிகள் தட்டுப்பாடு என்று கேள்வி. தமிழருக்கு என்று சொல்லியாவது அனுப்பி வைக்கட்டும்.

எதுவுமே நடக்காமல் அமரப்போகும் தமிழ் நாட்டு எழுச்சி.முடிவு புலிகளின் கைகளில் தான் தங்கியுள்ளது.வேறு எதுவும் சொல்லகூடியளவு நடைபெறாது.பசில் இந்தியாவில் இருக்கும் போதே கிளிநொச்சி மருத்துவமனை தாக்குதலுக்குள்ளானதே இதற்கான உதாரணம்

காங்கிரஸை கழட்டி விட்டு தி.மு.க, கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க, பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் சேர்ந்து கூட்டணி அமைத்தால் எப்படியும் தமிழகத்தின் (+ பாண்டிச்சேரி) 40 பாராளுமன்ற ஆசனங்களில் குறைந்தபட்சம் 30 ஐ அள்ளலாம்.

இன்று இருக்கும் ஈழ ஆதரவு உணர்வை தமிழகத்தில் மேலும் தீவிரமாக்கினால் 35 ஆசனங்களை கூட அள்ளலாம். இந்த கூட்டணிக்கு திரு.விஜயகாந்தை அழைத்து வர முடியுமென்றால் 40 ஆசனங்களையும் கூட வெல்லலாம்

எப்படியோ டெல்லியில் அடுத்த தேர்தலிலும் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. அப்போது தமிழகத்தின் மேற்சொன்ன வெற்றிக்கூட்டணிக்கு தமிழர் நலன் தொடர்பாக, அமையப்போகும் மத்திய அரசுடன் சிறப்பாக பேரம் பேசும் வலு இருக்கும்.

செய்வாரா கலைஞர்???

காங்கிரசின் ஆணவத்திற்கும் தமிழர் படுகொலைக்கு துணை போகும் இழி செயலுக்கும் வரும் தேர்தலில் ஒரு ஆசனம் கூட கிடைக்காதவாறு செய்வதே சரி!

எனக்குத் தெரிந்தவரையில் தொடர்ந்தும் காங்கிரஸ் தமிழக தேர்தல்களில் ஆசனங்களை வெல்லும் நிலை இருக்குமானால்,

அந்தக் கட்சி ஒரு நாளும் தன் தமிழர் விரோத போக்கை கைவிடப்போவதில்லை.

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.