Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரந்தன் வான் தாக்குதலுக்கும் அதனை மூடிமறைத்த சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்கும் நா.உ. கஜேந்திரன் கண்டனம்

Featured Replies

பரந்தன் வான் தாக்குதலுக்கும் அதனை மூடிமறைத்த சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்கும் நா.உ. கஜேந்திரன் கண்டனம்

[புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 08:15 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் சிறிலங்கா வான்படை நேற்று நடத்திய தாக்குதலுக்கும், அதனை மூடிமறைத்த சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிளிநொச்சியின் பரந்தன் சந்தியை அண்டிய குமரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று செவ்வாய்கிழமை (28.10.08) அன்று நடத்திய குண்டுத்தாக்குதலில் வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த மூன்று பொதுமக்கள் தாக்குதல் நடைபெற்ற இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.

குமரபுரம் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஆறு அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

வான் தாக்குதல் கரணமாக 10 வீடுகள் முற்றாக தரைமட்டமாக அழிவடைந்துளதுடன் மேலும் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தாக்குதல் வானூர்திகள் வானத்தில் வட்டமிட்டபோது வீடுகளில் தங்கியிருந்த பொதுமக்கள் தமது வீடுகளில் அமைத்து வைத்திருந்த பதுங்கு குழிகளுக்குள் சென்று பதுங்கிக்கொண்டமையினால் பெரும் உயிரழிவில் இருந்து மக்கள் தப்பிக்கொண்டனர்.

தாக்குதல் நடைபெற்றபொழுது நாடாளுமன்ற உறுப்பினராகிய நான் சம்பவம் நடைபெற்றதையறிந்து அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடினேன்.

தாக்குதல் நடைபெற்ற பொழுது பொதுமக்கள் தமது வீடுகளில் இருந்த பதுங்கு குழிகளுக்குள் சென்று பாதுகாப்புத் தேடியிருக்கா விட்டிருந்தால் ஆகக்குறைந்தது 16 பொதுமக்களாவது கொல்லப்பட்டிருப்பார்கள். மக்களது தற்காப்பு நடவடிக்கையினால் பெரும் மனித அழிவு தவிர்க்கப்பட்டுள்ளது.

பரந்தன் இந்து மகா வித்தியாலயம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 250 மீற்றர் தூரத்தில் குண்டுத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தாக்குதல் நடைபெற்ற சமயம் சுமார் 1,300 மாணவர்கள் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக பாடசாலையின் பதில் அதிபர் தெரிவித்தார்.

தாக்குதல் நடைபெற்ற பொழுது மாணவர்கள் சிதறி ஓடியபோது வான் குண்டுத்தாக்குதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர் வகுப்பறைகளும் சேதமடைந்துள்ளன.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களது பெயர் விபரங்கள் வருமாறு:

சங்கரலிங்கம் சிவநாதன் (வயது 36)

சிவநாதன் சிவமணி (வயது 24)

தங்கநாதன் சிவநேசன் (வயது 29)

காயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:

மாணவன் கிறிஸ்ரி (வயது 16)

மாணவன் கனிஸ்ரன் (வயது 15)

மாணவன் தனுசன் (வயது 15)

சுகுமார் ரதி (வயது 41)

வி.காண்டீபன் (வயது 29)

அ.பத்மசீலன் (வயது 37)

தாக்குதல் நடைபெற்ற இடத்தில் பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து வந்து தற்காலிக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்திருந்தனர். தாக்குதலில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களது வீடுகள் பல அழிவடைந்துள்ளன.

தாக்குதல் நடைபெற்ற இடத்தினை பார்க்கும் பொழுது இத்தாக்குதலானது பொதுமக்களை இலக்குவைத்து பொதுமக்கள் செறிவாக வாழும் குடியிருப்பு பகுதி மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவே உணர முடிகின்றது.

நேற்றய நாள் நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்றய நாள் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்த, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அப்படியானதொரு தாக்குதலை தாம் நடாத்தவில்லை எனவும் அது வெறும் கட்டுக்கதை என்றும் கூறி உண்மையை மூடிமறைத்துள்ளார்.

இராணுவப் பேச்சாளரின் இக்கருத்தினை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். தாக்குதல் நடைபெற்ற இடத்தினை நான் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு சம்பவத்தினை உறுதிப்படுத்தியுள்ளேன்.

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையை மூடிமறைக்க இராணுவப் பேச்சாளர் முயற்சித்துள்ளார் என்பதனையே அவரது கூற்றில் இருந்து உணர முடிகின்றது.

சிறிலங்கா அரசின் தூதுவராக பசில் ராஐபக்ச அவர்கள் இந்தியாவுக்கு சென்று அங்கு தமிழ் மக்களது பாதுகாப்பு தொடர்பாக உறுதிமொழி வழங்கி இரண்டு நாட்கள் கழிவதற்குள் இவ்வாறான படுகொலையை சிங்கள வான்படை நிகழ்த்தியுள்ளது.

இந்திய மத்திய அரசிற்கு தமிழ் மக்களது பாதுகாப்புத் தொடர்பாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் கூட தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் இன்றி சிறிலங்கா அரச படைகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் எறிகணைத் தாக்குதல்கள் கிளைமோர்த் தாக்குதல்கள் வான் தாக்குதல்கள் என்பன தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.