Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நெல்லை கருத்தரங்கில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இலங்கை எம்.பி.க்கள் பேச்சு - இந்தியா உளவுப்பிரிவு போலீசார் சி.டி.யில் பதிவு செய்து அனுப்பினர்

Featured Replies

நெல்லை கருத்தரங்கில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இலங்கை எம்.பி.க்கள் பேசிய பேச்சு சி.டி.யில் பதிவு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது.

இலங்கை போரில் ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈழத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை உள்ளது. இதனால் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவோர் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி நெல்லையில் 'ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் எம்.பி.க்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பா.ம.க. கொள்கை விளக்க அணி தலைவர் அ.வியனரசு, ம.தி.மு.க. மாநகர செயலாளர் நிஜாம், வக்கீல் சுப்புரத்தினம், மற்றும் டி.ஏ.கே.லக்குமணன், பழநெடுமாறனின் தமிழ் தேசிய இயக்கத்தை சேர்ந்த தமிழ் ஈழன், தமிழ் தனயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம், பேசுகையில், தமிழ் மக்களின் பாதுகாப்பு கேடயம் விடுதலைப்புலிகள்தான். புலிகளை பலவீனப்படுத்துவது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஆபத்தான விஷயம்.

யுத்தத்தை சாக்காய் வைத்து சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பார்க்கின்றன. தமிழ் ஈழம்தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதுணையாய் நிற்கும்.

எனவே இந்திய அரசு புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய எம்.பி.ஸ்ரீகாந்தா, "இலங்கையில் மலையக தமிழர்கள் 10 லட்சம் பேரின் குடியுரிமையை இலங்கை அரசு ரத்து செய்த போது அதை இந்திய அரசு தட்டி கேட்டது. இலங்கை பிரச்சினையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க இந்தியா தலையிட வேண்டும். இந்திய அரசு விரும்பினால் மட்டுமே இலங்கையில் போர் நிற்கும்'' என்றார்.

பா.ம.க. கொள்கை விளக்க அணி தலைவர் வியனரசு பேசுகையில், "இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று தேசிய அரசு சொல்கிறது. அப்படியானால் வங்கதேசம் எப்படி உருவானது? 1987-ம் ஆண்டு 'பூமாலை' என்று பெயரிட்டு இந்திய விமானப் படை ஈழத்தில் உணவு பொட்டலம் போட்டது எப்படி? எனவே இனி மேலும் உள்நாட்டு சிக்கல் என்று கூறி இந்தியா தப்பிக்க கூடாது' என்றார்.

இந்த கருத்தரங்கில் பேசப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீசார் டேப்பில் பதிவு செய்துள்ளனர். பின்பு அதை சி.டி.யில் பதிவு செய்து அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

நன்றி : தமிழ் வின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.