Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்: கனிமொழி

Featured Replies

சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்: கனிமொழி

[வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 09:22 மு.ப ஈழம்] [க.நித்தியா]

போர் நிறுத்தம் செய்வதற்கு சிறிலங்கா அரசை இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் என்று தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வற்புறுத்தி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.

இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை வாழ்த்தி கனிமொழி உரையாற்றிய போது மேலும் தெரிவித்ததாவது:

சிங்கள மொழி என்று இலங்கையின் ஆட்சி மொழியாக மாற்றப்பட்டதோ, புத்த மதம்தான் அந்த நாட்டின் மதமாக சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதோ அன்றே தமிழர்களின் போராட்டமும் தொடங்கியது.

1957 ஆம் ஆண்டு செல்வாவுக்கும், இலங்கையை ஆட்சி செய்துகொண்டிருந்த பண்டாரநாயக்காவுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி தமிழர்களுக்கு உரிமைகள் திருப்பி தரப்படும் என்றும் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக அந்த நாட்டில் சமக்குடிகளாக கருதப்படுவார்கள் என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் முதல் சிறிலங்கா அரசு இதுவரை இயற்றிய எந்த ஒப்பந்தத்திற்கும் ஒரு காகிதத்தின் மதிப்பை கூட கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

உலகத்தில் எந்த இடத்தில் போர் நடந்தாலும் உலக சமாதான நிறுவனங்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படும். செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக அங்கு உள்ள மக்களுக்கு உதவிகள் அளிக்கப்படும். ஆனால் இலங்கையில் மட்டும் செஞ்சிலுவைச் சங்கத்தை தூரத்திவிட்டார்கள்.

ஐ.நா. சபையைச் சேர்ந்த அமைப்புக்கள் எல்லாம் விரட்டப்பட்டுவிட்டது. சிறிலங்கா அரசு அங்குள்ள தமிழர்களை எப்படி நடத்துகிறது என்ற உண்மை நிலை நமக்கு தெரிவது இல்லை.

முகாமில் இருக்கும் தமிழர்களை விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்களா என்று கேட்டு சித்திரவதை செய்கிறார்கள். முகாமில் இருக்கும் தமிழர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரிவது இல்லை. இவ்வாறு மனித உரிமைகள் மீறப்படுகிறது.

சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச இந்த போர் முடிந்த பிறகு தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க செய்துவிடுவேன் என்று கூறுகிறார். சிறிலங்கா அரசு இந்தியாவிடம் ஒன்று சொல்லுகிறது. உலக நாடுகளிடம் பேசும் போது வேறுவிதமாக பேசுகிறார்கள். ஆகவே எது உண்மை என்பதை நாம் கேட்க வேண்டாமா? இலங்கை தமிழர்களுக்கு தீர்வு காண போர் நிறுத்தம் மட்டும்தான் வழி.

இப்படி தன்னிடம் ஆயிரம் குறைபாடுகளை வைத்துக்கொண்டு இருக்கும் சிறிலங்கா அரசு போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்போதுதான் இந்த போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் நமது கடமை.

இந்திய அரசு தன்னால் முடிந்த அத்தனை வழிகளிலும் போர் நிறுத்தத்தை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். முடிந்தால் உலக நாடுகளோடு பேச வேண்டும் என்றார் அவர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.