Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாக்குறுதி அளித்து ஏமாற்றும் கொழும்பின் இராஜதந்திரப்போக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குறுதி அளித்து ஏமாற்றும் கொழும்பின் இராஜதந்திரப்போக்கு

[11 நவம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 10:20 மு.ப இலங்கை]

இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி - ஈழத் தமி ழர் தாயகத்தின் மீது தென்னிலங்கை அரசு தொடுத் திருக்கும் கொடூர யுத்தத்தை ஒட்டி - தமிழகத்தில் கிளர்ந் தெழுந்துள்ள உணர்வெழுச்சியைக் கண்டு, வியப்புற்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, சூறாவளிப் புயலாக வீசும் அந்த எழுச்சியுடன் இயைந்து தாமும் தமது தி.மு.கவும் செயற்படாவிட்டால் அந்தப் புயல் தமது தரப் பைத் தூக்கியடித்துப் பந்தாடி சிதைத்துச் சின்னா பின்னமாக்கிவிடும் என்பதையும் நன்கு உணர்ந்து கொண்டார்.

அந்த உணர்வெழுச்சியோடு சேர்ந்து - அதற்கு ஆதரவு தந்து - செயற்படுகின்றவர் போலத் தம்மைக் காட்டிக் கொள்வதற்காக ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும் நோக்கம் என்ற பெயரில் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட் டினார்.

அதில் பங்குபற்றிய தமிழகக் கட்சிகள் ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டி, பொறி கிளப்பியமையை அடுத்து வேறு வழியின்றி அந்த மாநாட்டில் பங்குபற்றிய பெரும் பான்மைத் தமிழகக் கட்சிகளின் நிலைப்பாட் டுக்கு இசைந்து - ஒத்து - போகவேண்டியவரானார் அவர்.

அந்த மாநாட்டில் தீவிரமாக எழுந்த ஈழத் தமிழர் ஆதரவு அலையை அடுத்து, மத்திய அரசுக்கு பல நிபந்தனை களை முன்வைத்து, காலக்கெடு விதித்து, இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் தீர்மானத்தை அங்கு எடுப்பதற்கு உடன்பட வேண்டியவரானார் அவர்.

அந்த நிபந்தனைகளில் பலவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில், இரண்டை மட்டும் இந்திய மத்திய அரசு நிறைவேற்றும் என்ற வாக்குறுதியை இந்திய மத் திய அரசிடம் பெற்றுக்கொண்டு, அடங்கிப்போ னார் கலைஞர் கருணாநிதி.

அவர் உறுதிமொழி பெற்ற இரண்டு கோரிக்கைகளில் ஒன்று கூட ஒப்பேறவில்லை.இப்போது காற்றில் அடிபட்டுப் பறந்து போயிருப்பதுதான் மிச்சம்.

* ஈழத் தமிழர் தாயகத்தில் உடனடியாக யுத்த நிறுத் தத்தை இந்திய மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

* தமிழர்களுக்கு எதிராக யுத்தம் புரியும் இலங்கைப் படைகளுக்கு இந்தியா இராணுவத் தளபாட உதவிக ளையோ, தொழில்நுட்ப மற்றும் பயிற்சி வசதிகளையோ வழங்கக் கூடாது.

- இந்த இரண்டு முக்கிய கோரிக்கைகள் தொடர் பாகவும் இந்திய மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் ஏதும் பெறாமலேயே மத்திய அரசிடம் மண்டி யிட்டு, தமது வற்புறுத்தலைக் கைவிட்டார் கலைஞர்.

* ஈழத்தில் யுத்தப் பேரவலத்தில் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்படும் ஈழத் தமிழ் மக்களுக்கு உணவு, அத் தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்து வகைகள் ஆகியவற்றைப் பாரதம் விரைந்து அனுப்பவேண்டும்.

* தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் ஏதும் நடத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

- தமிழக அனைத்துக் கட்சி மாநாட்டின் முன்னைய பிரதான இரு கோரிக்கைகளுக்கும் மத்திய அரசை இணங்கவைக்க முடியாது கோட்டைவிட்ட கலைஞர், பின்னைய இந்த இரண்டு கோரிக்கைகளையும் செய லுருப்பெறச் செய்வதற்கான அங்கீகாரத்தை இந்திய அரசிடம் பெற்றுக்கொண்டார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஈழத் தமிழ் மக்களுக்கான ஒரு தொகுதி நிவாரணப் பொருள்கள் தமிழகத்திலிருந்து கொழும் புக்கு அனுப்பப்பட்டன. அவை, பாதிப்புற்ற ஈழத் தமிழ் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை இனித் தான் ஊர்ஜிதம் செய்ய முடியும்.

அதற்கிடையில் -

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இடம்பெறாது என்ற உறுதி மொழியை இலங்கைத் தரப்பிலிருந்து இந்தியா பெற்றுக்கொண்டது என்று கூறப்பட்ட போதிலும், அந்த உறுதி மொழியும் விரைந்து காற்றில் பறக்க விடப்பட்டிருக்கின்றது என்பதைத் தற்போது கட்டவிழும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

திரும்பவும் இந்திய கடற் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் இலங்கைக் கடற்படையினரின் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தனர் என்ற செய்தி வெளியாகியிருக் கின்றது.

மீனவரைத் தாக்கமாட்டோம் என வாக்குறுதி அளித்து இரண்டு வாரத்துக்குள்ளேயே அதைக் காற்றில் பறக்க விட்டு விட்டது இலங்கைத் தரப்பு.

ஈழத் தமிழர் இனப்பிரச்சினை விவகாரத்திலும் பார தத்துக்கு இவ்வாறுதான் வாக்குறுதிகளை அளிப்பதும், அதை நிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடிப்பது மான இராஜதந்திரத்தைக் கையாளும் கொழும்பு, அதே உத்தியை - சாணக்கிய தந்திரோபாயத்தை - இப்போது தமிழக மீனவர் விவகாரத்திலும் தொடர்ந்து கையாண் டிருக்கின்றது.

தமிழக முதல்வர் கலைஞரும், தமது ஆட்சியைத் தக்க வைப்பதற்கு அவரது ஆதரவில் தங்கி நிற்கும் இந்திய மத்திய அரசுத் தலைவர்களும் இத்தகைய ஏமாற்று நடவடிக்கைகளுக்கு இடம்கொடுத்து இன்னும் எவ் வளவு காலத்துக்கு ‘ஏமாளிகளாக’ இருக்கப்போகிறார் கள்? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.