Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ICRC ஊடாக சர்வதேச தரத்திலான நிவாரணப் பொருட்களை வழங்க இந்தியா நடவடிக்கை - சரசி விஜேரட்ன - தமிழக செய்திகள் ஒரே பார்வையில்:

Featured Replies

ICRC ஊடாக சர்வதேச தரத்திலான நிவாரணப் பொருட்களை வழங்க இந்தியா நடவடிக்கை - சரசி விஜேரட்ன - தமிழக செய்திகள் ஒரே பார்வையில்:

வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு விநியோகிக்க தேவையான சர்வதேச தரத்திலான உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்குவது என இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உயர் மட்டப் பிரநிதிகள் கடந்த வாரம் டெல்லியில் இந்திய அதிகாரிகளுடன் இந்த விநியோகம் தொடர்பில்; பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடக இணைப்பாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் ஆடைகள் அடங்கிய இந்த நிவாரணப் பொருட்களை இந்திய உயர்தானிகராலயம் ஊடாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அடுத்து சில தினங்களில் விநியோகிக்கும் என எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கம் தமிழக அதிகாரிகளுடன் இணைந்து இந்தப் பொருட்களை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு கொண்டு செல்வதற்கான அனுசணைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியா வழங்கும் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வன்னியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகிக்க உள்ளது. வன்னியில் உள்ள அரசாங்க அதிபர்களின் உதவியுடன் இந்த நிவாரணங்களை விநியோகிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எண்ணியுள்ளதாகவும் விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 65 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்:

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த நிலையில் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த 65 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை துரிதமாக இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதுவர் பீ.எம்.அம்சா தெரிவித்துள்ளார்.இவர்களைத் துரிதமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நோக்கில் இந்திய உள்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு தொடர்ந்தும் இலங்கை அகதிகள்:

இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற 10 இலங்கைத் தமிழர்கள் இந்திய கடற்படையிடம் சரண் அடைந்துள்ளனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும். ராணுவத்துக்கும் நடைபெற்று வரும் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தினமும் ஏராளமானோர் அகதிகளாக தமிழகத்திற்கு சென்ற வண்ணம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் கிளிநொச்சி பூநகரி கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆண்களும், 4 பெண்களும் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர். ராமேசுவரம் கடற்கரையை சென்றடைந்த இவர்கள் இந்திய கடற்படையினர் சரணடைந்துள்ளனர். இவர்கள் காவற்துறை மற்றும் கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர், மண்டபம் அகதிமுகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளளனர்.

இலங்கை விமானப்படையினர் விடுதலைப்புலிகளின் பகுதிகள் மீது குண்டு வீச்சு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தாம் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற விமான குண்டு வீச்சில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் நிவாரண நிதி 19 கோடி ரூபா தாண்டியது:

இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக தமிழக அரசு திரட்டி வரும் நிதி, நேற்நு வரை 19 கோடி ரூபா தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உதவும் நோக்கில், நிதி, உணவுப் பொருட்கள் போன்றவற்றை வழங்குமாறு தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு இதுவரை 19 கோடியே 23 லட்சத்து 62 ஆயிரத்து 547 ரூபா சேர்ந்துள்ளதாக நேற்று (திங்கள்கிழமை) வெளியான தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய பிரதமர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - தமிழக முதல்வர:

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய பிரதமர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் நேற்று (10) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டியது எனக் கூறியிருந்ததாகவும் இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலம்தான் அரசியல் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை அறிவித்து, பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தியே தமிழக அரசின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் கருத்துகள் அந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளன.

போர் நிறுத்தம் தொடர்பில் இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உணர்த்தி, செயல்படச் செய்வது அவசர, அவசியத் தேவையாகும் எனவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற ஆழ்ந்த நம்பிக்கையை மீண்டும் தாம் வலியுறுத்த விரும்புவதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் படுகொலை சி.ஐ.ஏ. தூண்டுதலே காரணம் திருமாவளவனின் கருத்தை இளங்கோவன் கண்டிப்பு:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தூண்டுதலே காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியமை தொடர்பில் இந்திய மத்திய அமைச்சர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்காவே காரணம் என திருமாவளவன் கூறியுள்ளார். இதுமுற்றிலும் தவறான கருத்தாகும் என இளங்கோவன் கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக் காரணம் விடுதலைப்புலிகளே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் பிரதான குற்றவாளி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே என இதுதொடர்பாக நடைபெற்ற அனைத்து விசாரணை குழுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவித்துள்ளன. மேலும், ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் விடுதலைப் புலிகளுக்கோ, தனக்கோ சம்பந்தம் இல்லை என இதுவரை பிரபாகரன் கூறவில்லை.

ஆகவே, காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில், இலங்கை அரசு பிரபாகரனை கைதுசெய்து இந்திய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறது என இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் - அனைத்துக் கட்சிக் குழுவுடன் மன்மோகனிட் செல்ல வேண்டும் - நெடுமாறன்:

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் குழுவுடன் சென்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கடலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் செய்ய முன்வந்துள்ளனர்.

எனவே இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியா வரவிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் அடிப்படையில் முதல்வர் அனைத்துக் கட்சிக் குழுவுடன் புதுடெல்லி சென்று, பிரதமரைச் சந்திக்க வேண்டும் எனவும் நெடுமாறான் கூறியுள்ளாhர்.இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி சென்னையில் நாளை (12) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் இருந்து, இந்திய அரசு தவறான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இதனால் இலங்கையில் அன்னிய நாடுகள் கால்தடம் பதித்துவிட்டன. இந்தியப் பாதுகாப்பு எதிர்காலத்தில் பேராபத்தில் உள்ளது என்பதை இந்தியா உணரவில்லை.

மோதல்கள் நடைபெற்று வரும் பகுதிகளில் இருந்து செஞ்சிலுவைச் சங்கத்தையும் ஐ.நா. அமைப்பையும் இலங்கை ராணுவம் வெளியேற்றிவிட்டது. அங்கு செய்தித் தணிக்கை உள்ளது. ராணுவ அதிகாரிகளை மீறி யாரும் செய்தி வெளியிட முடியாது. தமிழர் பகுதிகளைப் பிடித்துவிட்டோம் என இலங்கை ராணுவம் கூறுவதை ஏற்க முடியாது. சர்வதேசச் செய்தியாளர்களை அனுமதித்தால்தான் உண்மைநிலை தெரியும்.

கடந்த 2 ஆண்டுகளில் 40 ஆயிரம் வீரர்கள் இலங்கை ராணுவத்தில் இருந்து ஓடிவிட்டார்கள் எனவும் நெடுமாறன் கூறியுள்ளார். இதேவேளை இந்தியா சென்ற ராஜபக்ஷவின் சகோதரர் தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என உறுதி அளித்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் எனவும் நெடுமாறன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே ராஜீவ்காந்தி கொலையில் 17 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினிக்கு, அரசியல் காரணங்களுக்காக நீதி மறுக்கப்படுகிறது எனவும் நெடுமாறன் குற்றம்சுமத்தியுள்ளார்.

இலங்கை அரசுக்கு இந்தியா 6 மாதங்களுக்கு முன்னர் 400 கோடி ரூபாவை வழங்கியது. இந்த மாதத்தில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி மூலம் 50 ஆயிரம் கோடி ரூபா வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வந்த நிதியுதவியை நிறுத்திவிட்டது எனவும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்..

http://www.globaltamilnews.net/tamil_news....=2048&cat=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.