Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தின் ஏகோபித்த கருத்தை கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் ஏகோபித்த கருத்தை கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு?

[14 நவம்பர் 2008, வெள்ளிக்கிழமை 8:50 மு.ப இலங்கை]

தருணம் பார்த்து ஏகமனதாகக் காய் நகர்த்தியிருக்கின்றது தமிழக சட்டசபை.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியே முன்னின்று இந்தக் காய் நகர்த்தலை மேற்கொண்டு ஒரு கல்லில் இரு மாங்காய்கள் அடித்திருக்கின்றார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக - ஈழத் தமிழர் தாயகத்தின் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கும் கொடூரப் போருக்கு எதிராக - தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வெழுச்சியை, உடனே ஆரவாரமாக சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, உச்சத்துக்குக் கொண்டு வந்த கலைஞர், பின்னர் அதையொட்டி எழுப்பப்பட்ட நிபந்தனைகளை ஒருதலைப்பட்சமாகக் கைவிட்டு, அவ்விடயத்தைப் போட்டடித்து விட்டார், குத்துக்கரணம் அடித்து விட்டார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தமிழகத்தில் தனது அரசைக் காபந்து பண்ணுவதற்காக, ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் அழுத்தத்துக்கு அவர் அடிபணிந்து விட்டுக்கொடுத்துவிட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்கு எல்லாம் தருணம் பார்த்து பதிலடி கொடுக்கும் விதத்தில் இப்போது காரியமாற்றியிருக்கின்றார் அவர்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்து, ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான விவகாரம் குறித்து இந்தியத் தலைவர்களுடன் பேச இருக்கையில் - சந்தர்ப்பம் பார்த்து - இவ்விடயத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கருத்து இதுதான் என்பதை ‘சிலையில் எழுத்துப் போல’ ஆணித்தரமாக எடுத்துரைக்கும் வழியை அவர் முன்னெடுத்திருக்கின்றார்.

இந்திய மத்திய அரசு, இலங்கை விவகாரத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அங்கு போரை நிறுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே தமிழகத்தின் ஒட்டுமொத்த - ஏகோபித்த - கோரிக்கை என்பதை தமிழக சட்டசபையில் ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்ற வைத்துப் புதுடில்லிக்கு இடித்துரைக்கப் பண்ணியிருக்கின்றார் அவர்.

அதுவும் அந்தப் பிரேரணைக்கான முன்மொழிவைத் தமிழக முதல்வர் என்ற ரீதியில் அவரே பிரேரிக்க - தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளுமே ஒன்று சேர்ந்து அதை ஆதரித்து ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே நிலைப்பாடு இதுவே என்று உறுதிப்படுத்தியிருக்கின்றன.

ஆக, இந்தத் தீர்மானத்தை அதிரடியாக நிறைவேற்றச் செய்ததன் மூலம் -

ஈழத் தமிழர் விவகாரத்தில் தனது செயலின்மை தொடர்பாக அண்மைக்காலத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைப் புறமொதுக்கி அதிலிருந்து தம்மைத் தப்பவைக்கவும் -

ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டி ஒட்டுமொத்த தமிழகத்தின் கருத்து இதுதான் என்பதை வெளிப்படுத்தி அம்பலப்படுத்தவும் - வழி செய்திருக்கின்றார் கலைஞர் கருணாநிதி.

இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சில விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்பதையும் தமிழகம் தனது பிந்திய செயல்போக்கு மூலம் காட்டியிருக்கின்றது. அதை நோக்குவதும் முக்கியமானதாகும். இதில் இரண்டு முக்கிய விடயங்கள் உள்ளன.

முதலாவது - போர்நிறுத்தம் செய்வதற்கு வலியுறுத்தும் வகையில் தமிழக சட்டசபை நேற்றுமுன்தினம் நிறைவேற்றிய தீர்மானம் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கருத்து மட்டுமல்ல. அதுவே உலகத் தமிழர்களின் ஏகோபித்த கருத்தும் கூட என்பதைத் தமிழக சட்டசபைத் தீர்மானம் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்தது - இலங்கை அரசும் உடனடியாகப் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிடுவது மாத்திரமல்ல, படைகளையும் உடனே தமது பழைய நிலைகளுக்கு விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் வற்புறுத்தப்பட்டிருக்கின்ற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.