Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் ஓயாது என்ற மஹிந்தவின் அறிவிப்புக் குறித்து சட்டசபையில் நேற்று பா.ம.க - காங்;. கடும் மோதல்

Featured Replies

யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா சென்றிருந்த மஹிந்த தெரிவித்த கருத்து தொடர்பாக நேற்று சட்டசவையில் காங்கிரசுக்கும் பா.ம.க வினருக்கும இடையே கடும் அனல் பறந்த வாக்குவாத மோதல் நடந்தது. இந்த விடயத்தில் பா.ம.க.வுக்கு ஆதரவாக ம.தி.மு.கவினர் குரல் கொடுத்தனர்.

விபரம் வருமாறு:

சட்டசபையில் ஜி.கே.மணி (பா.ம.க) பேசியவை :

மஹிந்த போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி இருக்கிறார். மன்மோகன்சிங்குடன் அவர் பேசியவை என்ன என்பதுபற்றி தலைவருக்குத்; தெரிவிக்கபட்டிருக்கும் அது என்ன என்பது பற்றி முதல்வர் அறிவிப்பாரா?

சிவபுண்ணியம் (இந்திய கம்னிஸ்ட்) பேசியவை :

மஹிந்த போர் நிறுத்தம் செய்யமாட்டேன். ஆனால் தமிழருக்கு பாதிப்பு வராது என்கிறார். அப்படி என்றால் போரை நிறுத்த வேண்டும் என்று நாம் நிறைவேற்றிய தீர்மானத்தின் வலு என்ன, பிரதமரின் நிலை என்ன? இன்னும் காலம் தாழ்த்தினால் தமிழ் நாட்டிலும் கொந்தளிப்பு உருவாகும் என்றார்.

கண்ணப்பன் (ம.தி.மு.க)

8 கோடி தமிழர்கள்; சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்று முதல்வர் கூறினார். இப்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அறிவிக் வேண்டும்.

ரவிகுமார் (விடுதலைச் சிறுத்தை)

மஹிந்த இந்தியாவுக்கு வந்திருக்கும் இதே நேரத்தில் அவரது சகோதரன் சீனா சென்று ஆயுதம் வாங்குகிறார். எனவே இந்திய அரசு போர் நிறுத்தத்தை வலுவாக்க வேண்டும்.

ஞானசேகரன் (காங்)

மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவிக்க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தமிழகம் கொந்தளிக்கும் என்று கூறியமை தவறு. இலங்கை ஒரு தனிநாடு. அதன் இறையாண்மையில நாம் தலையிட முடியாது. மாநில அரசு மத்திய அரசு மூலம்தான் உணர்வுகளைத் தெரிவிக்க முடியும். அதற்காகக் கொந்தளிப்பது என்று கூறுவது சரியாகாது.

இதற்கு பா.ம.க., இந்திய கம்னிஸ்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில பா.ம.க உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். பினனர் ஒருவருக்கொருவர் நேரடியாக வாக்குவாதம் செய்தனர். இதனால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது

ம.தி.மு.க.வினர் பா.மஇக.வுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

மகேந்திரன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்)

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?

பன்னீர்செல்வம் (அ.தி.மு.க)

பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலு இலங்கைப் போர் நிறுத்தம் பற்றி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். கச்சதீவுப் பிரச்சனையைக் கூட நான் ஆழமாகப் பேசவில்லை. தற்போது மஹிந்த மூன்று நாட்கள் டில்லியில் தங்கியிருந்து இலங்கைப் போரை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு எதுவும் செய்யவில்ல.

எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டத்;தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிiவேற்றும் தருணம் வந்து விட்டது. குறைந்த பட்சம் மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் பதவியைத் தூக்கி எறிய வேண்டும். மத்திய அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை திரும்பப் பெறவேண்டும் என்று பேசினார்.

பின்னர் ஜி.கே.மணி, இலங்கை தமிழர்கள் பிரச்சனையை சிக்கல் ஏற்படுத்தும் வகையில் ஞானசேகரன் பேசக் கூடாது என்று வலியுறுத்தினார்.

அதற்கு ஞானசேகரன், உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். பிரபாகரன் ஆயுதங்களை போட்டு விட்டு பேச்சுக்கு வந்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தயார். என்றார்.

பா.ம.கவினர் மீண்டும் எழுந்து நின்று ஞானசேகரன் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நன்றி சுடர் ஒளி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.