Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் மீண்டும் வகை தொகையின்றிய ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் கொலைகளும் - பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணனுடன் நேர்காணல் லோசனை விடுவிப்பதற்கான முயற்சி தொடர்கிறது என்கிறார்:

Featured Replies

கொழும்பில் மீண்டும் வகை தொகையின்றிய ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் கொலைகளும் - பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணனுடன் நேர்காணல் லோசனை விடுவிப்பதற்கான முயற்சி தொடர்கிறது என்கிறார்:

விசேட செவ்வி:

http://www.globaltamilnews.net/tamil_news....=2261&cat=1

மலேசியாவிலிருந்து இலங்கை திரும்பி வெள்ளவத்தையில் உள்ள உணவு விடுதியில் வேலை செய்து வந்த யாழ். நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளவத்தை காவல் நிலையத்திலும் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனிடமும் முறையிடப்பட்டுள்ளது.

யாழ். நகரைச் சேர்ந்தவரும், வெள்ளவத்தை 37ஆவது ஒழுங்கையில் வசிப்பவரும் ஹம்டன் லேன் சிந்து கபேயில் தொழில் புரிந்துவந்தவருமான வேலுப்பிள்ளை வசீகரன் என்ற (26) இளைஞரே கடத்தப்பட்டவராவார்.

ஆயுதங்களுடன் வெள்ளை வானில் சிவில் உடையில் Nசுனு;றுவுரு;குnளு வசிகரனைக் கடத்திச் சென்றதாகவும் மலேசியாவிலிருந்து திரும்பியு இவுரு; உணவு விடுதியில் வேலை செய்து கொண்டிருந்த போதே இவர் கடத்தப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக பிரதி அமைச்சர் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 20.09.2008ஆம் திகதியிலிருந்து இன்று 17.11.2008 வரை 11 பேர் கொழும்பில் கடத்தப்பட்டதாக பிரதி அமைச்சிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பாலத்துறையில் 23.10.2008 கடத்தப்பட்ட ராஜரட்ணம் சசிகுமார், கொட்டாஞ்சேனை சிவானந்த வீதியில் 31.10.2008 இல் கடத்தப்பட்ட சுந்தரலிங்கம் சசிகரன், கதிரேசன் வீதியில் 20.10. 2008 இல் கடத்தப்பட்ட சரவணமுத்து சதிஸ்குமார், மாதம்பிட்டியில் 5.11.2008 இல் கடத்தப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுருநாதன் ஆகிய நால்வரும் விடுவிக்கப்பட்டதுடன் மிகுதியான 7 பேர் தொடர்பாக தகவல் அறிய முடியாமல் இருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இதேபோல கொட்டாஞ்சேனையில் காணாமல் போன மொகமட் சதித், மொகமட்டிலான், ராமலிங்கம் திலகேஸ், விஸ்வநாதன் பிரதிப், நாகநாதன் ரஜீவ் ஆகிய ஐந்து இளைஞர்கள் தொடர்பாகவும் எதுவிதமான தகவல்களையும் பெறமுடியவில்லை என்று பெற்றோர் பிரதி அமைச்சமுடம் நேரடியாக தெரிவித்துள்ளதுடன் காணாமல் போன இந்த ஐந்து இளைஞர்கள் தொடர்பான தகவலை பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.

ராஜகிரிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் படுகொலை:

ராஜகிரிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மோசமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜா ஆனந்த எதிரிசூரிய என்ற 65 வயது வர்த்தகரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகரின் சடலம் கடுமையான தாக்குதல் காயங்களுடன் அவரது வீட்டில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த வர்த்தகரின் வீட்டில் பணியாற்றிய ஒருவர் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதாக வெலிக்கடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலையுண்ட நபர் குறித்த பிரதேசத்தின் முக்கிய சில வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடை பிரதேசத்தில் அண்மைக்காலமாக படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.