Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்று இரு வருடங்கள் நிறைவு...............

Featured Replies

இன்று இரு வருடங்கள் நிறைவு...............

5copyyt6.jpg

வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களான இவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கிளைமோர் குண்டுவெடிப்பின் பின்னர் நுழைந்த அரச பயங்கரவாதப்படையினர் அருகில் வைத்து சுட்டுக்கொன்றனர்.

அரச பயங்கரவாதப்பேச்சாளரான கெகிலிய ரம்புக்வல்ல புலிகள் வவுனியா வந்து பிடித்த சண்டையில் இடையில் அகப்பட்டவர்கள் என ஒரு புதுப்புழுகு மூட்டை ஒன்றை அவிழ்த்து விட்டார். ஆனால் அனைத்தும் வெளியில் தெரிந்து விட வழக்கின் அடுத்த பயங்கரவாத அணுகுமுறையான (அ)நீதி மன்றங்களின் ஊடாக அது அணுகப்பட்டதாகத் தெரிந்தது. பின்னர் அரச பயங்கரவாதிகளின் நேரடி மறைமுக மிரட்டல் காரணமாக விவசாயக் கல்லூரி முதல்வர் உட்பட பலர் வெளிநாடு செல்ல முற்பட்டபோது நீதவான் அவர்களின் கடவுச்சீட்டினை தடுத்ததாகவும் பத்திரிகைகளில் அறிய வந்தது.

யாழ் கள உறவுகளே பின்வருவன குறித்து அறிந்தவர்கள் தகவல்கள் தாருங்கள்

1) மேற்கூறப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை என்ன? அரச பயங்கரவாதிகள் வழக்கை அனுராதபுரத்திற்கு இடம்மாற்றி இழுத்தடிக்கின்றனரா?

2) மிருசுவிலில் அரச பயங்கரவாதப் படையினரால் கொல்லப்பட்டு மலசலக்குழியினுள் போடப்பட்டவேளை ஒருவன் தப்பி வந்தமையால் அப்படுகொலை வெளியானது. அதில் 10 வயதுப் பாலகனும் உள்ளடக்கம். அது குறித்த வழக்கின் தற்போதைய நிலை என்ன?

3) இனந்தெரியாதோர் செய்யும் கொலை என யாரந்த கொலைஞர்கள் cell phone அழைப்பொன்று சாட்சியாக எடுக்கப்பட்டதன் மூலம் தெரியவந்த தவசிகுளப் படுகொலை (வவுனியாவில் ) இன் தற்போதைய நிலை என்ன?

4) மூதூர் படுகொலை திருக்கோணமலை மாணவர் படுகொலை என்பன அரச பயங்கரவாத இன்னொரு அணுமுறையான ஆணைக்குழு அமைத்து இழுத்தடிக்கும் பாணியில் தொடர்கிறது. எனினும் அதன் மூக்கு முதலில் இந்திய முன்னாள் தலைமை நீதிபதி பகவதியால் உடைக்கப்பட்டது. பின்னர் காணொளி சாட்சி பதிவுகள்; அரச பயங்கரவாதத் தலைவனான நவீன கிட்லரால் அவன் செயலகத்தால் நிறுத்தப்பட்டது. தற்போது சிவில் சட்டத்தரணிப் பிரதிநிதிகளும் விலகிக் கொண்டதாக அறியவருகிறது.

இதன் தற்போதைய நிலை என்ன?

இப்படியான முகமூடியிட்ட அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு என்ன பதிலடி அதே பாணியில் வழங்கலாம்?

ஏராளமான படுகொலைகள் அரச பயங்கரவாதப்படையினரால் அரங்கேற்றப்பட்டு இருந்தாலும் சாட்சியங்கள் இல்லாது செய்யப்பட்டுவிட்டன. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றில் அப்பயங்கரவாதிகள் அகப்பட்டு விட்டனர். ஆனாலும் அரச பயங்கரவாதத் தலைமை அவர்களை தப்புவித்துவிட முயல்கிறது.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமான கருத்துப் பகிர்வுகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த வேண்டுகோள் ஓளவையாரின் வேண்டுகோள் என எண்ணாமல் படுகொலை செய்யப்பட்ட மேலுள்ள 5 மாணவர்களில் வேண்டுகோளாகக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.....

  • தொடங்கியவர்

changingcourtjv1.jpg

ஆதாரம் வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.