Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிட்லர் ரஷ்யப் படையெடுப்பின் போது முதலில் வெற்றி பெற்றார் - ரஸ்யப் படைகள் பின்னர் வெற்றிபெற்றன: வைக்கோ - தமிழகப் பார்வை:

Featured Replies

ஹிட்லர் ரஷ்யப் படையெடுப்பின் போது முதலில் வெற்றி பெற்றார் - ரஸ்யப் படைகள் பின்னர் வெற்றிபெற்றன: வைக்கோ - தமிழகப் பார்வை:

http://www.globaltamilnews.net/tamil_news....=2294&cat=2

விடுதலைப்புலிகளை எவரும் அழிக்க முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார். ஹிட்லர் ரஷ்யா மீது படையெடுத்தபோது முதலில் வெற்றி பெற்றார். பனிக் காலம் வந்ததும், ரஷ்யப் படைகள், ஹிட்லரது படைகளைத் தோற்கடித்தன.

அதேபோல் இலங்கையில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும் இதனால் தமிழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் மழைக்காலம் முடிந்ததும் சிங்களப் படையினருக்கு விடுதலைப்புலிகள் கல்லறை கட்டுவர் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கைப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கம் தமிழக மக்களுக்கு மாத்திரமின்றி, இந்தியாவின் 100 கோடி மக்களுக்கும் துரோகம் செய்கிறது எனவும் வைகோ குற்றம்சுமத்தியுள்ளார்.

கடலூரில் நேற்று இடம்பெற்ற திருமண விழாவில் வைகோ உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளாhர்.

இலங்கை ராணுவத்துக்கு உதவ மாட்டோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார் எனினும் இந்தியா பொறியிலாhளர்களை அனுப்பி, இலங்கையில் சிதைந்து கிடந்த விமான தளத்தை பழுதுபார்த்து பராமரித்து, தமிழர்கள் மீது குண்டுவீச வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ டெல்லியில், திமிராக பேசியதாகவும் அணு ஆயுத வல்லரசு என நிரூபிக்கப்பட்ட நாடு இந்தியாவிற்கு வரும் எந்த நாட்டு தலைவர்களும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்வர். மகிந்த ராஜபக்ஷ அவ்வாறு நடந்து கொள்ளவில்லை எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர், இலங்கைப் பிரச்சினையில் உண்மை உணர்வை பிரதிபலிக்கத் தவறிவிட்டார். மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது. தமிழ் ஈழம் அமைந்தால் அது இந்தியாவுக்கே பாதுகாப்பு அரணாக இருக்கும் எனவும் வைகோ கூறியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் முழு அடைப்புப் போராட்டம் மறுபரிசீலனை செய்ய வேண்டும:; ஜி.கே. மணி

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி எதிர்வரும் 25-ம் திகதி முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என்ற அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கோரியுள்ளார். நேற்று நடைபெற்ற கம்யூனிஸ்;ட் கட்சி ஏற்பாடு செய்த அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், மீண்டும் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு சார்பில் முதல்வர் கூட்ட வேண்டும்.

முதல்வர் கூட்டும் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளும் வாய்ப்புள்ளது. அவ்வாறான கூட்டத்தில் முழு கதடைப்புப் போராட்டம் பற்றி தீர்மானம் எடுக்கப்படுமானால், அது மிக வலுவானதாக அமையும் எனவும் ஜி.கே மணி சுட்டிக்காட்டியுள்ளார்;.

முதல்வர் கருணாநிதி கடந்த ஞாயிற்றுக் கிழமை கோவையில் தெரிவித்துள்ள கருத்துக்கு அமைய அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தயாராக இருப்பதாக தெரிகிறது. எனவே 25-ம் திகதி முழு அடைப்புப் போராட்டம் பற்றி மேற்கொள்ளப்பட்டு தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மணி கேட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.