Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூழ்கிப் போன கடற்கலங்களும் மூழ்கடிக்கப்பட்ட செய்தியும்!

Featured Replies

வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைக்கும் - கடற்புலி களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது அண்மையில் வடக்கு கடற்பரப்பில் நிகழ்ந்த மோதல்களில் குறிப்பிடத்தக்கதும் சில விசேடித்த முக்கியத்துவம் கொண்டதுமாகும். இம் மோதலில் சிறிலங்காக் கடற்படையின் சில புதிய விசேட படையணி கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாகச் சிறிலங்காக் கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த விசேட படகு அணி, விரைவுத் தாக்குதல் அணி என்பன பயன்படுத்தப்பட்டிருந்தன.

இக்கடற்படையணிகள் கரையோரப் பாதுகாப்பிற்கெனவும் ஆழம் குறைந்த கடற்பரப்புக்களில் அதாவது கரையோரத்திற்கு அண்மித்த பகுதிகளில் மோதல்களில் ஈடுபடுவதற்கெனவும் உரு வாக்கப்பட்டவையாகும். இப்படையணியில் சிறிலங்காக் கடற்படைத்தரப்பு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது. இப்படையணிகள் கொமாண்டோ பயிற்சி பெற்றதான படையி னரைக் கொண்டுள்ளது.பெரும்பாலும் உள்@ரில் - சிறிலங்காவில் வடிவமைக்கப் பட்டதான படகுகளைக் கொண்ட தான இக்கடற்படைப் படகுகள் - டோறாப் பீரங்கிப் படகுகளின் வேகத்தைவிட அதிக வேகம் கொண்டவையாகவும் , குறைந் தளவு துருப்பினருடன் அதிவேக மான தாக்குதல்களையும் நகர்வு களையும் மேற்கொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டவையாகும்.

சில வாரங்களுக்கு முன்பாக - இவ்வகைப் படகுகளில் 100 ஆவது கட்டிமுடிக்கப்பட்ட நிகழ்வில் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கலந்துகொண்டமையும் சுட்டிக்காட்டத் தக்கது.இவ்வகையில் படகுகளைத் தவிர ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள வோட்டர் ஜெட் படகுகளும் டோறாப் பீரங்கிப் படகுகளும் இம்மோதலில் பங்கேற்றிருந்தன. சுருக்கமாகக் கூறப்போனால் சிறிலங்காக் கடற்படையின் கரையோரப் பாதுகாப்பு கடற்கலங்கள் அனைத்தும் அடங்கியதான 20 படகுகளுக்கு மேற்பட்டதான பெரியதொரு கடற்படை அணி இம்மோதலில் பங்கேற்றிருந்தது. அடுத்ததாக இக் கடற்படையணியானது - கடற்புலிகள் மீதான தாக்குதலுக்கான வியூகம் ஒன்றையும் அமைத்திருந்தது. அதாவது முதலில் அதிகாலை 4.00 மணியளவில் சுமார் 15-20 நிமிடங்கள் வரையில் நடந்த மோதலை அடுத்து, விலகிச் சென்ற சிறிலங்காக் கடற்படையணியானது பின்னர் கடற்புலிகளின் அணியை எதிர்கொள்ளவெனத் தயார் நிலையில், வியூகம் அமைத்துக் காத்திருந்தன.

இத்தகையதொரு நிலையில் கடற்புலி களின் அணிகள் - இவ்வியூகத்தை உடைத்து சிறிலங்காக் கடற்படைப் படகுகளை மூழ்கடித்த தோடு இழப்புக்களையும் ஏற்படுத்தினர். கரையோர விசேட படையணியின் படகுகளில் ஒன்றாகக் கூகர் படகு ஒன்றையும் டோறாப் பீரங்கிப் படகு ஒன்றையும் மூழ்கடித்தனர். வோட்டர் ஜெட் படகு ஒன்றைக் கடும் சேதத்திற்கு உள்ளாக்கியிருந்தனர். இதனைத் தவிர மோதலில் ஈடுபட்ட கடற்படையினரின் பல படகுகளும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டன.

இந்தவகையில் சிறிலங்காக் கடற்படைக்கு ஏற்பட்ட சேதமானது, சிறிலங்காக் கடற்படை அண்மையில் வெளிப்படுத்தி வந்த- கொண்டிருந்த அதன் நம்பிக்கையைச் சிதைவடையச் செய்திருக்கும் என்றே நம்பலாம். அதாவது கடற்படையின் வலைப் பின்னல் போன்றதான பாதுகாப்பு ஏற்பாடுகளை இனிக் கடற்புலிகளால் எதிர்கொள்ள முடியாது என்பது இதில் முக்கியமானது.இரண்டாவதாக சிறிலங்காவின் புதிய படையணிகளை - விசேட படையணி விரைவுத் தாக்குதல் அணி கடற்புலிகளின் நடமாட் டத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட வையாக இருக்கப்போவதில்லை என்பது.

இதேசமயம் கடற்புலிகள் கடந்த 22 ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது போல், நாகர்கோவிலில் கடற்சமரில் புதிய தாக்குதல் யுக்திகளைப் பயன்படுத்தி சிறிலங்காக் கடற்படையின் புதிய அணிகளின் தாக்குதல் வியூகத்தை உடைத்தெறிந்து சேதத்தை விளைவித்துள்ளனர் எனக் கூறுவது தவறாகமாட்டாது. சுருக்கமாகச் சொல்லப்போனால் கொழும்பு -களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மீதான சிறிலங்கா வான்பரப்பின் பாதுகாப்பு எவ்வாறு கேள்விக்குள்ளாகியுள்ளதோ அதேபோன்று கடற்பரப்பின் பாதுகாப்பும் கேள்விக்குரியதொன்றாகவே உள்ளதெனலாம்.

சிறிலங்காப் படைத்தரப்பு வான்புலிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பைத் தேடிக் கொள்வதற்கென செய்த பெரும் எடுப்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதற்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கவில்லை. மீண்டும் நவீன போர்க் கருவிகளையும், தொழில்நுட்ப சாதனங்களையும் தேடுவதிலேயே சிறிலங்காப் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது. இதற்கெனப் புதிய நாடுகளையும் அணுகியுள்ளது. அதேபோன்றே கடற்பரப்பின் பாதுகாப்பு என்ற ரீதியில் சிறிலங்காப் படைத்தரப்பு புதிய புதிய தேடல்களை மேலும் செய்யவேண்டிய தான நிர்ப்பந்தங்களையே கடற்புலிகளின் தாக்குதல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

ஆனால், அவற்றிற்கான மார்க்கத்தை அவற்றால் தேடிக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குரியதாகவே இருக்கும்.ஏனெனில், புதிய புதிய தாக்குதல் கலங் களை சிறிலங்காப் படைத்தரப்பு அறிமுகம் செய்யும்போது விடுதலைப்புலிகளும் தமது தாக்குதல் வலுவையும், யுக்திகளையும் மாற்றிக்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக இதுவரை சிறிலங்கா அறிமுகம் செய்த தாக்குதல் கலங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்தானும் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியே உள்ளன. மூழ்கடிக்கப்பட்டும் உள்ளன.

இது ஒருபுறம் இருக்க - நாகர்கோவில் கடற்பரப்பில் கடந்த மோதல்களில் கடற்படைத் தரப்பு சந்தித்த இழப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் வழமைபோல் மூடிமறைத்துவிட்டது. ஆனால், இதனை மகிந்த அரசின் கொள்கையின் பாற்பட்ட விடயம் என்று கூடக் கூறலாம்.ஏனெனில், மகிந்த அரசாங்கம் தற்பொழுது களமுனையில் ஆயுதப் படைத்தரப்பிற்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லை என்ற உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இத்தகையதொரு நிலையில், கடலில் ஏற்பட்ட இழப்பை வெளியிடாமை அதன் கொள்கை சார்ந்த விடயமாக இருத்தல் கூடும்.

23171724jn3.jpg

ஆனால், மோதல்களில் தமது தரப்பிற்கு இழப்புக்கள் ஏற்படவில்லை. சேதங்கள் ஏற்படவில்லை என மறுக்கும் போது, அரசாங்கம் சில நெருக்கடிகளை எதிர்பாராது சந்திக்க வேண்டியதாகிவிடுகிறது. எடுத்துக்காட்டாக காணாமல் போனோர் பட்டியலில் அரசாங்கம் சேர்த்;துக் கொண்ட படையினரின் சடலங்களை விடுதலைப் புலிகள் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக ஒப்படைக்கும் போது தவிர்க்கமுடியாது சில நெருக்கடிகள் ஏற்படுகின்றன. கடந்த காலத்தில் இதற்காகச் சடலங்கள் பொறுப்பேற்கப்படாமலும் உரியவரி டம் ஒப்படைக்கப்படாமலும் எரியூட்டப்பட்டதும் உண்டு.

ஆனால், கடலில் படகுகளும், கப்பல் களும் மூழ்கிப்போகும்போது அவற்றை மறுத்து விடுதல் சற்றுச் சுலபமாகும். ஏனெனில் அவை சமுத்திரத்தினுள் அமிழ்ந்துபோய் விடக் கூடியவை. ஆனால், படகுகளிலும், கப்பல் களிலும் உள்ளவர்கள் - அதாவது சிப்பாய் களும், மாலுமிகளும் அமிழ்ந்துபோய் விட மாட்டார்கள். நீரில் அமிழ்ந்து உயிர் போனாலும் அவர்களின் சடலங்கள் மிதக்கவே செய்யும்.ஆகையினால், சிறிலங்கா அரசாங்கம் இதனை முற்றிலுமாகக் கடலில் அமிழ்த்திவிட முடியாது. மிதக்கும் சடலங்கள் உண்மையைக் காட்டிக்கொடுத்துவிடும். இந்தவகையிலேயே வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் கரை யொதிங்கிய கடற்படையினரின் சடலங்கள் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதையும், கடற்படையினர் பலர் கொல்லப்பட்டதையும் ஊர்ஜிதம் செய்துள்ளன.

அத்தோடு படைத்தரப்பின் இழப்பை வெளிப்படுத்துவதில்லை என்ற மகிந்த அரசின் தீர்மானமானது, அடிப்படையில் மகிந்த அரசாங்கம் யுத்தம் தொடர்பாகச் செய்துவரும் பிரச்சாரத்திற்கு முற்றிலும் முரண்பாடானதொரு அம்சமாகும். அதாவது யுத்தத்தில் பெரும் வெற்றியை ஈட்டிவருவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்யும் நிலையில் படைத்தரப்பின் இழப்பை அது வெளியிடுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். இராணுவம் ஈட்டிவரும் வெற்றிகளுக்காக அது கொடுத்துவரும் விலை அதிகம் என்பதினாலா? அன்றி விடுதலைப் புலிகள் இன்னமும் ஆயுதப் படையினருக்கு பெரும் சேதம் விளைவிக்கும் நிலையில் உள்ளனர் என்பதினாலா? அன்றி ஆயுதப் படைத்தரப்பிற்கான ஆளணி சேர்ப்;பிற்கு இது இடையூறு விளைவிக்கும் என்பதினாலா? உண்மையில் இவை அனைத்தும் ஒன்றிணைந்தே படைத்தரப்பின் இழப்புக்களை வெளியிடுவதில் அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது.

அதாவது யுத்தத்தில் இராணுவத் தரப்பு கூறிக்கொள்ளத்தக்கதான சில முன்னேற் றம் கண்டுள்ளதாயினும் கூறிக்கொள்ள முடியாத அளவிற்கு அது இழப்புக்களையும் சந்தித்துவருகின்றது என்பதே நிதர்சனமான தாகும். இதனை ஓரளவு வெளிக்காட்டும் வகையில் தவிர்க்க முடியாது வெளியிடப்படும் தகவல்கள் சில வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன. குறிப்பாக மாதாந்தம் அவசரகால நீடிப்பு விவாதத்தின் போது வெளியிடும் தகவல்களும், சில வைத்தியசாலைத் தகவல்களும் வெளிப்படுத்தி விடுகின்றன. எடுத்துக்காட்டாக கடந்த மாதத்தில் 171 படையினர் பலியானதாகவும் 1122 படையினர் காயமடைந்ததாகவும் அவசரகாலச் சட்ட விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

98782429gw0.jpg

இத்தகவல் முற்றிலும் உண்மைத்தன்மை பொருந்தியதாக இல்லாதுவிடினும் இழப்பு உயர்ந்தளவில் உள்ளதையே இது உறுதிசெய்வதாகவுள்ளது. இதேசமயம் இரு தினங்களுக்கு முன் வெளியாகிய தகவல் ஒன்று அநுராதபுரம் வைத்தியசாலையில் மட்டும் படுகாயம் அடைந்த 300 படையினர் உள்ளதாகத் தெரிவிக்கின்றது. இந்தவகையில் கடலிலும் சரி, தரையிலும் சரி, வானிலும் சரி, சிறிலங்கா அரசாங்கம் தமது மேலாண்மை குறித்து எத்தகைய பிரச்சாரத்தை முன்னெடுப்பினும், விடுதலைப்புலிகள் சிறிலங்காப் படைத்தரப்பின் மேலாண்மைக்குத் தொடர்ந்தும் சவால் விடுபவர்களாகவே உள்ளனர். ஒருபுறத்தில் சிறிலங்கா தனது மேலாண்மை பெற்றுவிட்டதாகக் கருதப்படும் இடங்களில் விடுதலைப் புலிகள் புதிய யுக்திகள் மூலம் தாக்குதலை மேற்கொண்டு அவர்களின் மேலாண்மைக்கு வழிவகுத்துள்ளதாகக் கருதும் பொறிமுறையைக் கேள்விக்குள்ளாக்கி விடுகின்றனர்.

இன்னொருபுறத்தில் மேலாண்மையை நிலைநாட்ட மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைபோட்டு அவற்றிற்குச் சேதங் களையும் இழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இது சிறிலங்காவின் நோக்கங் களுக்கு முட்டுக்கட்டை ஆகியவிடுகின்றது. சர்வதேச ரீதியில் கிடைக்கப்பெறும் இராணுவ, பொருளாதார, தொழில்நுட்ப உதவிகள் சிறிலங்கா அரசிற்கு யுத்தத்தில் சில அனுகூலங்களைப் பெற்றுக் கொடுத்துள்ள தாயினும், விடுதலைப்புலிகள் சிறிலங்காவின் மேலாண்மைக்கும் சவால்விடும் சக்தி கொண்டவர்களாகவே உள்ளனர் என்பதையே அவர்களின் அண்மைய கடல் மற்றும் வான் தாக்குதல்கள் உணர்த்துபவையாகவுள்ளன.

நன்றி சங்கதி இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.