Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜீவ் கொலைக்கு தடை - 600 மீனவர்களின் கொலைக்கு தடை இல்லையா? சிறிலங்காவிற்கு இராணுவத்துக்கு மத்திய அரசு உதவி செய்யக்கூடாது - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Featured Replies

ராஜீவ் கொலைக்கு தடை - 600 மீனவர்களின் கொலைக்கு தடை இல்லையா? சிறிலங்காவிற்கு இராணுவத்துக்கு மத்திய அரசு உதவி செய்யக்கூடாது - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

திகதி: 18.11.2008 // தமிழீழம் // [சோழன்]

சிறிலங்கா இராணுவத்துக்கு, மத்திய அரசு உதவி செய்வதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், ராணிபேட்டையை சேர்ந்த எஸ்.மோகனசுகுமார் பொதுநலன் கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, சிறிலங்கா இராணுவம் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இதுவரை சுட்டு கொன்றுள்ளன. ஆயிரக்கணக்கான மீனவர்கள் அவர்களது துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர். மத்திய அரசு இந்த விடயத்தில் அமைதி காத்து வருகிறது.

ஆனால், மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து ஆயுதம் வாங்க சிறிலங்கா இராணுவத்துக்கு நிதி உதவி அளிக்கிறது. இதுமட்டுமல்லாமல், சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.நமது நாட்டில் இருந்து நிதி உதவி பெற்று வாங்கிய ஆயுதங்கள் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்களை, சிறிலங்கா இராணுவம் சுட்டு வீழ்த்தி வருகிறது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இதனால் மரணம் அடைந்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், பல இலட்சக்கணக்கான தமிழர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களது சொத்துகளும் நாசப்படுத்தப்பட்டு வருகிறது. இளம் சிறுவர், சிறுமிகளையும் சிறிலங்கா இராணுவம் பிடித்து செல்கிறது. ஆனால் அவர்கள் வீடு திரும்புவதில்லை. சிறிலங்கா இராணுவம் அவர்களை கொன்று புதைத்துவிடுகிறது என்று இதன் மூலம் தெரிகிறது.ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இலங்கையில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொலை செய்த சிறிலங்கா இராணுவத்துக்கு, மத்திய அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. இதுவரை மத்திய அரசு கொள்கை அளவில் சிறிலங்கா இராணுவத்துக்கு தடை விதிக்க முடிவெடுக்கவில்லை.ஆகவே, மத்திய அரசு, சிறிலங்கா இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதற்கும், ஆயுத உதவி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும். சிறிலங்கா இராணுவம் தமிழக மீனவர்களை சுட்டு கொல்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மீண்டும் வரும் 24ம் திகதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

www.sankathi.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.