Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு மற்றும் வவுனியா வைத்தியசாலைகள் இஸ்தம்பிக்கும் நிலை – தனது வைத்தியசாலை நிலை குறித்து வைத்திய கலாநிதி முருகானந்தம் பேசுகிறார்: ஒலிச் செய்திகள்

Featured Replies

மட்டக்களப்பு மற்றும் வவுனியா வைத்தியசாலைகள் இஸ்தம்பிக்கும் நிலை – தனது வைத்தியசாலை நிலை குறித்து வைத்திய கலாநிதி முருகானந்தம் பேசுகிறார்:

ஒலிச் செய்திகள் http://www.globaltamilnews.net/tamil_news....=2357&cat=1

வவுனியா பொது மருத்துவ மனையில் கடமையாற்றி வந்த தென்பகுதியைச் சேர்ந்த வைத்தியர்கள் பாதுகாப்புக் காரணம் காட்டி வவுனியா பொது மருத்துவ மனையை விட்டு நேற்று மாலையுடன் வெளியேறியுள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியில் வைத்து சிங்கள மொழி பேசும் வைத்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமையால் தங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தே வவுனியாவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்

வவுனியா பொது மருத்துவ மனையில் 17 சிங்கள மொழி பேசும் வைத்தியர்கள் கடமையாற்றி வந்தார்கள.;

இவர்கள் வெளியேறியுள்ளமையால் வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன் வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்களும் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விலக்கப்பட்டு மூன்றாவது நாளில் வைத்தியர் சுடப்பட்டார் - மனைவி:

மட்டக்களப்பு வவுணதீவு நாவற்காடு அரச மத்திய மருந்தகத்தில் பணியாற்றிய மருத்துவருக்கு வழங்கப்பட்டிருந்த அதிரடிப்படையினரின் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு மூன்றாவது நாளில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

முதலில் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் எந்த காரணத்திற்காக அது திரும்பபெறப்பட்டது என்பதை தான் அறியவில்லை எனவும் நாவற்காட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட சிங்கள மருத்துவரான பாலித பத்மகுமாரவின் மனைவியான சந்திரிக்கா பிரிதர்ஷனி வீரசூரிய தெரிவித்துள்ளார். பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு மூன்றாவது நாளில் தனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவற்காடு மத்திய மருந்தகத்தின் மருத்துவர் இல்லத்தில் தானும் தனது கணவரும் உறங்கி கொண்டிருந்த போது, இரவு 10.30 அளவில் அங்கு சென்ற சிலர் ஆபத்தான நிலையில் ஒரு நோயாளி இருப்பதாக கூறி மருத்துவரை அழைத்ததாகவும் வீட்டில் இருந்து வெளியில் சென்ற மருத்துவரை அவர்கள் வீட்டுக்குப் பின்னால் அழைத்து சென்று சுட்டுக்கொன்றதாகவும் பிரிதர்ஷினி கூறியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த தனது கணவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் எவரும் உதவ முன்வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் தமிழர் என்பதால் அவரை வேறு விதமாக அணுகும் எந்த உரிமையும் சுகாதார அமைச்சருக்கு இல்லை – மருத்துவர் சங்கம்:

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் கடமையாற்ற தமிழ் மருத்துவர்களை ஈடுபடுத்த சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம், நாட்டை பிளவுப்படுத்த உந்துசக்தியை வழங்கும் நடவடிக்கை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பொறுமிக்க அமைச்சர் ஒருவர் பிரிவினைவாதிகளுக்கு தேவையான இன அடிப்படையில் புதிய மருத்துவர் நியமனங்களை பரிந்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்புப் பிரதேசத்தில் சிறிய வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் பயங்கரவாதி ஒருவரினால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அருவருக்கதக்க வகையில் கண்டிப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் ரி.பி குணசேகரவின் கையெழுத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மருத்துவர்களை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அனுப்ப அமைச்சர் தீர்மானித்ததாகவும் அந்த தீர்மானத்தை தூரநோக்கற்ற வகையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் தடுத்ததாகவும் தடையேற்படுத்தப்படா விட்டால், இந்த கொலை இடம்பெற்றிருக்க மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடம் ஒன்றுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு 300 முதல் 400 வரையான மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். நியமிக்கப்படும் புதிய மருத்துவர்கள் அனைவரையும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தாலும் வருடாந்தம் 70 முதல் 90 வரையான தமிழ் மருத்துவர்களையே அங்கு அனுப்பி வைக்க முடியும்.

அமைச்சரின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தினாலும் அங்கு அனுப்பி வைக்கப்படும் மருத்துவர்களில் பெருபான்மையானவர்கள் சிங்கள மருத்துவர்களாகவே இருப்பர் எனவும் இதனை தவிர்க்க முடியாது எனவும் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இது தனது தகுதியின் அடிப்படையில் இலங்கையின் எப்பாகத்திலும் பணியாற்ற தமிழ் மருத்துவர்களுக்கு உள்ள உரிமையை தடுக்கும் செயல் எனவும் ஒருவர் தமிழர் என்பதால் அவரை வேறு விதமாக அணுகும் எந்த உரிமையும் சுகாதார அமைச்சருக்கு இல்லை என்பதை கூறி வைக்க விரும்புவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.