Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதம் குறித்த இலங்கை நிகழ்ச்சி நிரலுக்கும் இந்திய நிகழ்ச்சி நிரலுக்கும் வேறுபாடு கிடையாது – றோஹித:

Featured Replies

பயங்கரவாதம் குறித்த இலங்கை நிகழ்ச்சி நிரலுக்கும் இந்திய நிகழ்ச்சி நிரலுக்கும் வேறுபாடு கிடையாது – றோஹித:

http://www.globaltamilnews.net/tamil_news....=2381&cat=1

இந்தியாவின் மத்திய ஆட்சியினை யார் கைப்பற்றினாலும் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகச் செயற்படமாட்டார்கள் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா, இலங்கையின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. பிரபாகரன் பிடிபட்டால் அவருக்கெதிராகவுள்ள சட்டப் பிரச்சினைக்கே அரசாங்கம் முதலிடம் வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்கும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கும் எந்தவொரு வேறுபாடும் கிடையாது. இலங்கையின் நிலைப்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியாவினால் வன்னி மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் அரசாங்கத்திடமே கையளிக்கப்படும். அதன் பின்னரே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அவை விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, வடக்கில் இடம்பெறும் யுத்தம் குறித்தும் அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் விளக்கிக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைத் கூறினார்.

இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் பதவியேற்று மூன்று வருடகாலம் நிறைவடைந்ததை முன்னிட்டு நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக இங்குள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாகட்டும் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியாகட்டும் அவர்கள் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க மாட்டார்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் மிக மிக நம்பிக்கை கொண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் பிரபாகரனுக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் பிரபாகரனுக்கு எதிராக மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால், பிரபாகரன் பிடிபடும் பட்சத்தில் அவருக்கெதிரான சட்டங்களின் தீர்ப்புகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். ஏனென்றால், ஜனநாயகத்தை மதிப்பதே முதலாவது கடப்பாடாகும்.

ஆயுதங்களை கீழே வைத்து பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி தயாராகவே உள்ளார். அதன் பின்னர் வடபகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின்தெரிவு பிரபாகரனாக இருந்தால் அவர் தெரிவாகலாம். இல்லாவிட்டால் வேறு எவராவது மக்களின் பிரதிநிதியாக தெரிவாகலாம்.

13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக மேலதிக பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டு மூலம் பெறப்பட்டு வருகிறது. இதன்பின்பு அரசியல் தீர்வு தீர்மானிக்கப்படும். ஜனாதிபதி அரசியல் தீர்வு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்தியாவும் இது தொடர்பில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. இந்தியாவினால் வன்னி மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடமே கையளிக்கப்படுகின்றன. அதன் பின்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஊடாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். வன்னி மக்களுக்கு போதுமான அத்தியாவசிய பொருட்களை இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 24 மாதங்களாக 90 ஆயிரம் தொன் நிவாரணப் பொருட்களை இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கோ, மருந்து பொருட்களுக்கோ எந்தவித தட்டுப்பாடுகளும் கிடையாது. அதேவேளை, இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ உதவி வழங்க முன்வந்தால் அதனையும் வரவேற்கின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிவிலியன்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பாடாது எமது படையினர் பூநகரியை மீட்டுள்ளனர். இதன் மூலம் ஏ 32 பாதை திறக்கப்பட்டு வடபகுதியிலிருந்து தென் பகுதிக்கு மக்கள் போக்குவரத்துக்காக வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

இந்திய விஜயத்தின் போது தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியுள்ளதோடு, அம்மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவது தனது கடப்பாடு என்றும் உறுதியளித்துள்ளார். இதனை நிறைவேற்றுவதற்காகவே வடபகுதியில் மனிதாபிமான படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கிழக்கு மாகாணத்தை எமது படையினர் மீட்டெடுத்ததோடு அங்கு ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டு, மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு விடுதலைப் புலிகளின் சிறுவர் படையில் இருந்த ஒருவர் மக்களால் முதலமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.