Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் சர்ச்சை - நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகள் தமிழ் எழுத்துக்கள் தெரியாதவாறு களஞ்சியசாலையில் அடுக்கப்பட்டிருந்தன:

Featured Replies

இந்திய நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் சர்ச்சை - நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகள் தமிழ் எழுத்துக்கள் தெரியாதவாறு களஞ்சியசாலையில் அடுக்கப்பட்டிருந்தன:

http://www.globaltamilnews.net/tamil_news....=2413&cat=1

பாதிக்கப்பட்டுள்ள வன்னிச் சிவிலியன்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பில் அரசாங்கத்திற்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத், களனியில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் களஞ்சிய சாலையில் வைத்து குறித்த நிவாரணப் பொருட்களை கையளித்தார்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட பொருட்களை யார் விநியோகம் செய்வது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இடையில் முரண்பட்ட கருத்துகள் நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பிரதேச அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திவாரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வன்னிச் சிவிலியன்களுக்கான நிவாரணப் பொருட்களை தமது அமைப்பு விநியோகம் செய்ய உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க இலங்கைக் கிளைத்தலைவர் போல் கஸ்ட்டெல்லோ தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக இந்திய அரசாங்கம் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறித்த இந்திய அரசாங்கத்தின் நம்பிக்கை மகிழ்ச்சியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மோதல்களினால் இடம்பெயர்ந்து வாழும் சிவிலியன்களுக்கு தமது அமைப்பு நேரடியாக நிவாரணப்பொருட்களை வழங்க உள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களது தேவைகள் குறித்து சுயாதீனமாக மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நிவாரணப் பொருள் விநியோகம் இடம்பெறும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்தியத் தலைவர் பிரான்கொயிஸ் ஸ்டெம்மன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், நிவாரணப் பொருட்கள் விநியோகம் குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடம் வினவிய போது, இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே இந்திய நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நிவாரணப் பொருள் விநியோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட பிராந்திய அரசாங்க அதிபர்களுக்கும் குறித்த பிரதேசத்தில் கடமையாற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது பொருட்கள் விநியோகம் தொடர்பான பாதைகள் மற்றும் விநியோக முறை குறித்து தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகள் தமிழ் எழுத்துக்கள் தெரியாதவாறு களஞ்சியசாலையில் அடுக்கப்பட்டிருந்தன:

வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிப்பதற்காக இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகள் தமிழ் எழுத்துக்கள் தெரியாதவாறு களஞ்சியசாலையில் அடுக்கப்பட்டிருந்தன.

பொதிகளில் தமிழக மக்களிடமிருந்து, இந்திய மக்களிடமிருந்து எனும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த வாசகங்கள் தெரியாத வகையிலேயே பொருட்கள் அடுக்கப்பட்டிருந்தன. நிவாரணப் பொருட்களில் அரிசி, பருப்பு பொதியிடப்பட்ட என்பன பொதியிடப்பட்ட பைகளில் தமிழக மக்களிடமிருந்து எனும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் களஞ்சியசாலையில் இந்த பொதிகள் தமிழ் எழுத்துக்கள் தெரியாதவாறு அடுக்கப்பட்டிருந்ததுடன், அவை மறைக்கப்பட்டும் இருந்தன.

இதுகுறித்து விளக்கமளிப்பதற்கு அங்கிருந்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனைவிட நிவாரணப் பொருட்கள் கையளிக்கும் வைபவம் நடைபெற்ற மேடைக்கருகில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிவாரணப்பொருட்களில் தமிழக மக்களிடமிருந்து எனும் வாசகம் அடங்கிய பொதியொன்று காணப்பட்டது. அதனையும் அங்கிருந்த அதிகாரிகள் அகற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொப்புள் கொடி உறவுகளே நீங்கள் அனுப்பிய உணவுக்கே சிங்களத்தால் எவ்வளவு கெடு பிடி. உணர்வுகளுக்கு?

தமிழீழத்தை அங்கீகரிப்பதே தமிழகத்துக்கு உள்ள ஒரே தீர்வு. வேறெதையும் சிங்களமோ, மத்திய கொள்கை வகுப்போ விட்டுவைக்கவில்லை.

இந்திய மத்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களினால் சேகரிக்கபட்ட வன்னி மக்களுக்கான நிவாரணப் பொருள்கள் நேற்று செஞ்சிலுவைச்சங்க அனைத்துலகக் குழுவிடம் கையளிக்கப்பட்டன.

இதன்போது இந்தியாவில்இருந்து மற்றும் தமிழ் நாட்டில் இருந்து என பொறிக்கப்பட்டிருந்த தமிழ் வாசகங்கள் மறைத்து பொதிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க

முடிந்ததாக நிகழ்வில் கலந்து கொண்ட கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேடையில் இருந்த பொதி ஒன்றில் தமிழ் எழுத்துக்கள் வெளிப்படையாக தெரிந்தபோது, அது உடனடியாக அதிகாரிகளால் அவ்விடத்தினை விட்டு அகற்றப்பட்டது.

குறிப்பாக பொதிகளில் தமிழ் எழுத்துக்கள் தெரியாதவாறு மறைக்கப்பட்டிருந்ததுடன், களஞ்சியசாலையிலும் தமிழ் எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியாதவாறு அடுக்கப்பட்டடிருந்தன.

இது பற்றி சிங்கள அதிகாரிகளிடம் வினாவியபோது அவர்கள் கருத்து தொவிக்க மறுத்து விட்டதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 1,680 தொன் நிறையுடைய இந்த நிவாரணப் பொருள்களை சிறீலங்காவிற்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், செஞ்சிலுவை அனைத்துகச் சங்கத்தின் தலைமை அதிகாரி போல் கஸ்ரெல்லாவிடம் (Paul Castella) கையளித்தார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

தமிழக நிவாரணப் பொருட்கள் வன்னியை அடைந்தன

un-vanni250_22112008.jpg

வன்னி: தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கொழும்பிலிருந்து வன்னிக்குச் சென்றுள்ளன. ஐ.நா. மனித உரிமை கழகம் இந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளது.

தமிழர் பகுதிகளில் இலங்கை படைகள் நடத்தி வரும் கடும் போரால் தத்தளித்து வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகிறது.

இதுவரை சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களான உணவு, உடை, மருந்து உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு உரிய சோதனைக்குப் பின்னர் இந்தியத் தூதரிடம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து இந்த நிவாரணப் பொருட்கள் 56 லாரிகள் மூலம் வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வன்னிப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான ஓமந்தையில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் அனைத்து பொருட்களும் முறையாக சோதிக்கப்பட்டன. பின்னர் உள்ளே செல்ல லாரிகள் அனுமதிக்கப்பட்டன.

இந்த லாரிகள் நேற்று வன்னியைச் சென்றடைந்தன. நிவாரணப் பொருட்களுடன் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் உடன் வந்துள்ளனர்.

இருப்பினும் நிவாரணக் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழ் அதிகாரிகளை, ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. தடுத்து நிறுத்தி விட்டனர்.

வன்னிப் பகுதியில், செஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலமாக தமிழக நிவாரணப் பொருட்களின் விநியோகம் தற்போது தொடங்கியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/11...each-vanni.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.