Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பிபிஸியின் நவம்பர் 27ஆம் திகதிய சிங்கள மற்றும் தமிழ் ஒலிபரப்புக்கள் தணிக்கை – 5 ஊடக அமைப்புக்கள் கண்டனம்:

Featured Replies

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிஸியின் நவம்பர் 27ஆம் திகதிய சிங்கள மற்றும் தமிழ் ஒலிபரப்புக்களை தணிக்கை செய்துள்ளது.

அன்றைய நிகழ்ச்சியின் ஒரு அங்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் தின உரையையும் டிபென்ஸ் வாச் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு குறித்த செய்திகளையும் நேயர்கள் கேட்க முடியாதவாறு தணிக்கை செய்துள்ளது. முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள் சமரவீரவின் தலைமையிலான டிபென்ஸ் வாச் எதிர்த்தரப்பினருடைய கருத்துக்களையும், மற்றைய செய்திகளையும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகின்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிகாரிகளது இந்நடவடிக்கையானது, மக்களுடைய தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை மீறுவதோடு, மக்கள் தொடர்பான விடயங்களில் மாற்று அபிப்பிராயத்தை பரிமாறிக் கொள்ளும் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் இடையூறாக அமைந்துள்ளது.

இலங்கையில் வாழும் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகப் போர் திகழ்கிறது. போர் தொடர்பான வௌ;வேறுபட்ட பார்வையுடைய செய்திகளையும் தகவல்களையும் அறிந்து கொள்வதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது. ஐந்து ஊடகங்களின் கூட்டமைப்பு இந்தத் தணிக்கை நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது.

பிபிஸி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்குமிடையிலான உடன்படிக்கையின் அடிப்படையில் பிபிஸியின் பிராந்திய மொழிகளிலான ஒலிபரப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக ஒலிபரப்பப்படுகின்றது. இதற்காக பி.பி.ஸி வருடாந்தம் ஏறத்தாழ 40 மில்லியன் இலங்கை ரூபாய்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு வழங்கி வருகின்றது.

எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன அதிகாரிகளால் இத் தணிக்கையானது திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்செயலாக நடந்த ஒரு சம்பவமல்ல. இதற்கு முன்னரும் இத்தகைய பல்வேறு சந்தர்ப்பங்களில் இதே மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பிபிஸியின் சிங்கள மற்றும் தமிழ் நிகழ்ச்சிகளின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனமானது பொதுமக்கள் சேவை ஒலிபரப்பு நிறுவனமாகவே உருவாக்கப்பட்டது. இப்போதும் கூட பொது மக்களின் பணத்திலிருந்தே அதற்கு நிதியுதவி அளிக்கப்படுகின்றது. துரதிர்ஸ்டவசமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் ஆளும் கட்சியின் ஊதுகுழலாக மாற்றப்பட்டுள்ளது. அங்கே ஆசிரியர்பீட சுதந்திரமோ ஊடக ஒழுக்க விதிகளோ மதிக்கப்படுவதில்லை.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தையும், இலங்கை ரூபவாகினிக் கூட்டுத் தாபனத்தையும் உண்மையாகவே மக்களுக்குச் சேவை செய்யும் ஊடகமாக மாற்றுவதென்பது இலங்கையின் ஊடகச் சூழ்நிலையை ஜனநாயகப்படுத்துவதற்கான ஒரு முக்கிய சவாலாகும்.

போர் குறித்த சுதந்திரமான அறிக்கையிடல் என்பது இன்று இலங்கையில் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய உரையை இலங்கையிலுள்ள எந்தவொரு இலத்திரனியல் ஊடகமும் அறிக்கையிடவில்லை. போரில் ஏற்படும் இழப்புக்கள் இரு தரப்பினராலுமே ரகசியமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இலங்கையர் பலர் பிபிஸி போன்ற வெளிநாட்டில் இருக்கும் ஊடகமொன்றின் பிராந்திய ஒலிபரப்பூடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய உரையைக் கேட்க முனைவது இயல்பானது. ஆயினும், பிபிஸியின் பிராந்திய மொழிகளிலான ஒலிபரப்புகள் – டிபென்ஸ் வாச் இன் அறிக்கைகள். மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய உரை ஆகியன - பிபிஸியின் இணையத்தில் உள்ளன. ஆகவே இந்தத் தணிக்கையானது இணைய இணைப்பில்லாத பெருமளவிலான மக்களையே பாதித்திருக்கிறது.

இது தவிர இன்னும் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அதிகாரிகள் தமிழ் நாட்டிலுள்ள சண்நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழ்நாட்டில் இடம் பெறும் போருக்கெதிரான தமிழர்களுக்கு ஆதவான அறிக்கைகளையும் தணிக்கை செய்துள்ளனர்.

சஞ்சிகை விநியோகஸ்தர்களின் தகவல்களின்படி இலங்கையில் தற்போதைய நிலைமைகள் தொடர்பான விமர்சனபூர்வமான சில விடயங்கள் இருந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஆனந்த விகடன் இதழின் இறுதி இதழை இலங்கையில் விநியோகிக்க இலங்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இவ்வாறான தணிக்கை நடவடிக்கைகள் இலங்கை வாழ் மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையைப் பாதிப்பதோடு. தங்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கும் விடயங்கள் குறித்து அறிந்து கொண்டு அவை குறித்து மதிப்பிடுவதற்கும் தடையேற்படுத்துகிறது.

ஐந்து ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு தணிக்கை குறித்த இவ்வாறான நடைமுறைகளைக் கண்டிப்பதோடு, மக்களுடைய தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை மதிக்கும் வகையில் போர் தொடர்பான அறிக்கைகளைத் தணிக்கை செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.