Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடபகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை - களமுனைகளிலுள்ள படையினரின் இராணுவ முன்னெடுப்புக்கள் பாதிப்பு:

Featured Replies

வடபகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை - களமுனைகளிலுள்ள படையினரின் இராணுவ முன்னெடுப்புக்கள் பாதிப்பு:

http://www.globaltamilnews.net/tamil_news....=2832&cat=1

வடபகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் போர்க் களமுனைகளிலுள்ள படையினரின் இராணுவ முன்னெடுப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் படையினருக்கான ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு களமுனைகளிலும் இராணுவ முகாம்கள் மற்றும் பதுங்குகுழிகளிலும் தங்கியுள்ள இராணுவத்தினரை மாற்று இடங்களுக்கு அழைத்துச் செல்ல படைத்தரப்பினர் கடந்த சில நாட்களாகவே பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டு வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆயினும் வடக்கில் நிலவும் அடைமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இராணுவத்தினர் மற்றும் அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோக நடவடிக்கைகளுக்கே தடை ஏற்பட்டுள்ளது. படையினரின் இராணுவ முன்னெடுப்புக்களுக்கு எவ்விதத் தடைகளும் ஏற்படவில்லை. இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் கருத்து வெளியிடுகையில் யாழ்.குடா நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இராணுவத்தினரின் பதுங்கு குழிகள் மற்றும் முகாம்கள் போன்றவற்றில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்விடங்களில் தங்கியிருந்த படையினர் ஏனைய இடங்களுக்கு பாதுகாப்பாக இடம்பெயர்ந்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக வடக்கிற்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதனால் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்காக விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்திலும் இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் படையினரின் கடும் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதோடு அவற்றை நிறுத்துவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இதேவேளை வடபகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட கடுமையான காலநிலை சீர்கேட்டால் குடாநாட்டிலுள்ள படையினருக்கு கடும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று வன்னியிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் காங்கேசன்துறை கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த ஆறு டோரா படகுகள் சுற்றுக்காவல் பணிகளை நிறுத்தியுள்ளன.

மண்டைதீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசைப்படகுகளும் சிறப்புத் தாக்குதல் படகு அணியைச் சேர்ந்த படகொன்றும் கடற் கொந்தளிப்பினால் கடலில் மூழ்கியுள்ளன.

எனினும் இப்படகுகளுடன் கடலில் மூழ்கிய கடற்படையினர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் தனங்கிளப்பு பகுதியில் நிலைகொண்டிருந்த 200 இராணுவத்தினரும் இரு போர்த் தாங்கிகளும் கடும் வெள்ளத்தில் சிக்கியிருந்தன. கிளாலி ஊடாக விடுதலைப் புலிகளின் முன்னகர்வைத் தடுக்கும் முகமாக அப்பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரே இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தனர். பதுங்கு குழிகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக படையினர் உயர்வான நிலப்பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர்.

படையினரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக விமானப் படையினரின் ஹெலிகொப்டர்கள் மேற்கொண்ட முயற்சிகள் சீரற்ற காலநிலை காரணமாக பயனளிக்காத அதேசமயம் பாதுகாப்பு அங்கிகளை வழங்கும் முயற்சியும் பயனளிக்கவில்லை என்று யாழ்.மாவட்டத்தின் பதில் கட்டளைத்தளபதி ஜெனரல் ராஜித சில்வா, இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தெரிவித்துள்ளார் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கடற்படையினரின் ஆறு படகுகள் பாதிக்கப்பட்ட படையினரை மீட்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேற்படி பதில் கட்டளைத்தளபதி தெரிவித்துள்ளதாக அத்தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.