Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பைத் தாக்குதல்களுக்கு பின்புல மையமாக பாக்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்பைத் தாக்குதல்களுக்கு பின்புல மையமாக பாக்.!

[02 டிசம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 9:40 மு.ப இலங்கை]/td>

பயங்கரவாதிகள் குழு ஒன்று மும்பையில் கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடத்திய வெறியாட்டத்தில் 183 பேர் வரை உயிரிழந்திருக்கின்றார்கள். மேலும் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றார்கள். பல்லாயிரம் கோடி ரூபாவுக்கு சேதங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த அராஜகத்தால் நேரடியாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போகின்ற உல்லாசப் பிரயாணத்துறை, வர்த்தகத்துறை போன்றவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்படப்போகும் பேரிழப்பு கணக்கிட முடியாதது.

இந்தக் கொடூரத் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு சீர்கெட்டு, பகைமை முற்றி, இரு தரப்புகளுமே கறுவிக் கொண்டு மோதலுக்குத் தயாராகும் சூழலுக்கு நிலைமை போய்விட்டது. இரு நாடுகளினதும் எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புகளுமே தங்களது துருப்புகளையும் ஆயுதத் தளபாடங்களையும் பெரும் எடுப்பில் எல்லைகளை நோக்கி நகர்த்தத் தயாராகி விட்டன. எச்சமயத்திலும் - எந்நேரத்திலும் - யுத்தம் வெடிக்கலாம் என்ற மோசமான நிலைமைக்கு சூழல் தள்ளப்பட்டு விட்டது.

தீவிரவாதிகளின் தாக்குதலினால் சீற்றமுற்றிருக்கும் இந்தியா, அத்தாக்குதலுக்குப் பழிவாங்காமல் அடங்கப்போவதில்லை, அடங்குவதில் அர்த்தமில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாகத் தெரிகின்றது.

இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் நேரடியாகப் பின்னணியா - பாகிஸ்தானின் ஆசி, வழிகாட்டல், ஒத்துழைப்பு, உதவி ஆகியவற்றுடன்தான் இத்தாக்குதலை இந்தப் பயங்கரவாதிகள் குழு மேற்கொண்டதா - என்பவையெல்லாம் வேறு விடயங்கள்.

ஆனால், தாக்குதலை நடத்தியோர் நேரடியாகப் பாகிஸ்தானில் இருந்து - கராச்சியில் இருந்து புறப்பட்டு - வந்துதான் இந்தக் கொடூரத்தைப் புரிந்திருக்கின்றார்கள் என்பதை இந்தியா தெளிவாகக் கண்டுபிடித்து உறுதிப்படுத்தி விட்டது. இந்த நிலையில் இவ்விவகாரத்தை ஒட்டிப் பாகிஸ்தானின் செயற்பாடு இனி எப்படி அமையப்போகின்றது என்பதே முக்கிய கேள்வியாகும்.

இது தீவிரவாதிகளின் கைவரிசை என்றும், இதற்கும் பாகிஸ்தான் அரசுக்கும் தொடர்பு ஏதுமில்லை என்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிவ் அலி சர்தாரி கூறி, மெல்ல விடயத்தைக் கைகழுவி விடப் பார்க்கின்றார்.

சயேச்சையாகச் செயற்படும் இந்தத் தீவிரவாதிகள் இந்தப் பிராந்தியத்தில் நாடுகள் இடையே பிணக்கையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி யுத்தங்களைத் தோற்றுவிக்கக் கூடிய வல்லமை படைத்தவர்கள் என்றும் அவர் கூறுகின்றார். ஆகவே, தீவிரவாதிகள் செய்த தவறுக்காகப் பாகிஸ்தானைத் தண்டிக்க முயற்சிக்க வேண்டாம் என்று இந்தியாவைப் பார்த்து அவர் கோருகின்றார்.

அவரது கருத்தில் உண்மை இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயற்படும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டுவந்து அயல்நாடான இந்தியாவில் இத்தகைய கொடூரங்களைப் புரியும்போது, இதற்கும் எமக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை என்ற மறுப்பை மட்டும் வெளியிடுவதுடன் இந்த விடயத்திலிருந்து பாகிஸ்தான் தப்பிவிட முடியாது.

தாக்குதலாளிகள் கராச்சியில் இருந்து புறப்பட்டிருக்கின்றார்கள். அச்சமயம் அவர்களது கப்பலில் இக் கொடூரத் தாக்குதலுக்கான ஆயுதங்கள் இருக்கவில்லை. இடைவழியில் அவை தாய்க்கப்பல் ஒன்றின் மூலம் விநியோகிக்கப்பட்டு, அதிலிருந்து றப்பர் படகுகள் மூலம் மும்பைக் கரையை அவர்கள் வந்தடைந்திருக்கின்றார்கள். மும்பையில் அவர்கள் நடத்திய தாக்குதல் கனகச்சிதமாகத் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

மும்பையை தகர்க்க 24 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் ஒரு வருட கடும் பயிற்சி

7 கட்டங்களாக பிரித்து நடத்தப்பட்டது

mumbai1nq8.jpg

மும்பையை தகர்ப்பதற்காக லஷ்கர்-இ-தொய்பா சார்பாக 24 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் கடும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடம் நீடித்த இந்த பயிற்சியை ஏழு கட்டங்களாக பிரித்து நடத்தி உள்ளனர்.மும்பையில் கடந்த புதன்கிழமை அன்று லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 10 தீவிரவாதிகள் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டனர். நட்சத்திர ஓட்டல்களில் புகுந்து அட்டகாசம் செய்த அவர்களில் 9 பேரை தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். முகமது அஜ்மல் என்ற தீவிரவாதி மட்டும் குண்டு காயங்களுடன் உயிருடன் பிடிக்கப்பட்டான்.

மும்பை நாயர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். பின்னர் அவனை பாதுகாப்பு கருதி கடந்த வியாழன் அன்று `டிஸ்சார்ஜ்` செய்தார்கள். அதன் பிறகு, மும்பை குற்றப்பிரிவு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அடைத்து வைக்கப்பட்டான். தற்போதும் அங்கு வைத்து தான் அவனை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், `போலீசார் சித்திரவதை செய்வார்கள்` என்று பயந்து கடந்த இரண்டு நாட்களாகவே உணவு எதையும் அவன் சாப்பிடவில்லை. இரண்டு முறை வலுக்கட்டாயமாக சாப்பாடு ஊட்ட முயன்றபோதும் முடியவில்லை. மேலும், `என்னை கொன்று விடுங்கள்` என்றே திரும்பத் திரும்ப போலீசாரிடம் கூறி வருகிறான்.

இது தவிர, `நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். எனக்கு தலைவர் தீவிரவாதி அபு. அவன் உத்தரவிட்டது படிதான் கொலைகளை செய்தேன்` என்பதையே திரும்ப திரும்ப கூறினான். எனினும் போலீசார் சாமர்த்தியமாக அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

மும்பைக்கு வந்த 10 பேருடன் சேர்த்து 24 பேருக்கு பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மான்செரா மற்றும் முஜாபராபாத் நகரங்களில் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா சார்பாக சிறப்பு பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல் ரகுமான் என்பவர்தான் பயிற்சிகளை நடத்தினார். அவரை தீவிரவாதிகள் செல்லமாக `சாச்சா' என்று அழைப்பது வழக்கம். ஒரு வருடமாக நடந்த அந்த பயிற்சியை 7 கட்டங்களாக பிரிக்கப்பட்டது.

முதல் மூன்று மாதங்களுக்கு கடுமையான உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. எந்த சூழ்நிலைக்கும் உடலை தயார்படுத்தும் வகையில் மிகவும் கடுமையான பணிகள் தரப்பட்டன. 10 முதல் 15 கி.மீ. தொலைவு வரை ஓடும் ஓட்டப் பயிற்சியும் அதில் அடங்கும். இரண்டாவது மூன்று மாதங்களில் கடல் பயிற்சி அளிக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான நடுக் கடலில் நீச்சல் அடிப்பது, டைவ் அடிப்பது, படகு ஓட்டுவது போன்ற கடினமான பயிற்சிகள் சொல்லித் தரப்பட்டன. அதன் பிறகு பல்வேறு ரக துப்பாக்கிகளால் சுடுவது, வெடிகுண்டுகளை வீசுவது, இக்கட்டான நிலைமையை எதிர்கொள்வது உள்ளிட்ட விசேஷ பயிற்சிகள் தனித்தனியாக கற்றுத் தரப்பட்டன.

இந்த பயிற்சிகள் அனைத்தும் முடிந்த பிறகு 24 பேரில் 10 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மும்பையில் எந்த இடங்களில் எப்படி தாக்குதல் நடத்துவது என்பது குறித்து ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டம் வகுக்கப்பட்டு விட்டது. இந்த தகவல்களை தீவிரவாதி முகமது அஜ்மல் போலீசாரிடம் தெரிவித்தான்.

இதற்கிடையே குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை போலீசார், இதற்கு முன் குண்டு வெடிப்புகளில் விசாரணை நடத்திய மத்திய போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக சந்தேகம் எழுந்துள்ள உள்ளூரை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது தவிர குஜராத்தை சேர்ந்த அமர் நாராயண் என்ற மீனவரை எல்லை தாண்டி வந்ததாக கூறி பாகிஸ்தான் கடற்படையினர் மூன்று மாதங்களுக்கு முன் பிடித்துச் சென்றனர். தற்போது அமர் நாராயண் மூலமாகவே படகுகளில் தீவிரவாதிகள் வந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே அமர் நாராயண் குறித்த விவரங்களை குஜராத் மாநில போலீசாரிடம் மும்பை போலீசார் கேட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கராச்சி நகரில் இருந்து போர்பந்தர் வழியாக மும்பைக்கு தீவிரவாதிகள் வந்தனர். கடலில் வழி காண்பிப்பதற்காக `ஜி.பி.எஸ்.' தொழில் நுட்பத்தை பயன்படுத்தினர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செயற்கைக் கோள் செல்போன் மூலமாக இந்த தகவல் கிடைத்தது.எனவே, `ஜி.பி.எஸ்.' சிஸ்டம் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் உயர் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியை போலீசார் நாடி இருக்கின்றனர்.

-Dailythanthi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.