Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 90 வீதமானோர் அப்பாவிகள் ஜே.வீ.பீ:

Featured Replies

பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 90 வீதமானோர் அப்பாவிகள் ஜே.வீ.பீ:

http://www.globaltamilnews.net/tamil_news....d=2907&cat=

பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 90 வீதமானோர் அப்பாவிகள். இவர்களில் மலையக இளைஞர்களும் உள்ளனர். ஆனாலும், இந்த அப்பாவிக் கைதிகள் தொடர்பிலான மனித உரிமைகள் அமைச்சின் நடவடிக்கைகள் கேள்விக் குறியாகியுள்ளன என்று ஜே.வி.பி. எம்.பி.யும் குழுக்களின் பிரதித் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுதந்திரமாக வாழவேண்டும் என்று எண்ணிய தமிழ் மக்கள் பயங்கரவாதம், பிரிவினைவாதம், இராணுவ நடவடிக்கை ஆகியவற்றால் நசுக்கப்பட்டவர்களாகவும் உரிமை குறித்து பேச முடியாதவாறு குரல்வளை இறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

மனித உரிமைகள் அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இராமலிங்கம் சந்திரசேகர் இன்று கிழக்கு மாகாணத்தில் அப்பாவி மக்கள் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர். மீட்கப்பட்ட பூமி என்ற பின்னரும் அங்கு பிரச்சினைகள் அதிகரித்துச் செல்கின்றன.

கிழக்கில் கணவனை இழந்த பெண்கள் குறித்து சிந்திக்கும் போது, அவர்கள் புலிகளால் பாதிக்கப்பட்டவர்களா அல்லது இராணுவத்தினரால் இந்த நிலை உருவாக்கப்பட்டதா என்று தெரியாதுள்ளது.

எது எப்படி இருப்பினும், தமிழ்ப் பெண்கள் கணவனை இழந்துள்ளனர். குழந்தைகள் பெற்றோரை இழந்தவர்களாக இருக்கின்றனர். இந்த நிலைக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் ஆயுதக் குழுக்களே.

வன்னியில் இருக்கின்ற தமிழ் மக்கள் நம் நாட்டுப் பிரஜைகள். அவர்கள் மரங்களின் கீழ் வாழ்கின்றனர். பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர். விமானத் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். புலிகளிடம் சிக்கித் தவிக்கின்ற மக்களும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மாகாண சபையே தீர்வு என்கின்றனர்.

இது குறித்து பேசுகின்ற, போராட்டம் நடத்துகின்ற தமிழகம், தமிழ் சினிமாக்காரர்கள் இந்திய வம்சாவளிகளாகிய தோட்டத் தொழிலாளர்கள் குறித்து சிந்திக்கத் தவறியுள்ளனர்.

15 இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து அவர்களுக்கு சிந்தனை இல்லை.

அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வ தாக இந்தியா கூறியது. இதுவரையில் ஒன்றும் செய்யவில்லை.

இந்திய இராணுவத்தினர் இலங்கையின்; பெண்களை மட்டுமல்ல மூதாட்டிகளையும் விட்டு வைக்கவில்லை. அவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவலப்படுத்தினர்.

சம்பூரில் அனல் மின்நிலையம் அமைப்பதற்காக அங்குள்ள மக்களை இடம்பெயர வைத்திருப்பது இந்தியாதான். இந்த மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு என்ன செய்துள்ளது.

மலையக மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. காவற்துறை நிலையங்களில் மலையக இளைஞர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களில் தோட்டப்புற இளைஞர்களும் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி தலவாக்கலை பிரதேசத்தில் இருக்கின்ற மின் உற்பத்தி நிலையத்தில் கடமையில் இருந்தவர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கரைப்பத்தனை பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவர்களை புலிகளாக சித்திரிக்க முயற்சிக்கின்றனர் என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.