Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்த அரசாங்கத்தின் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது –ஒரேபார்வையில் UNP:

Featured Replies

மஹிந்த அரசாங்கத்தின் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது –ஒரேபார்வையில் UNP:

http://www.globaltamilnews.net/tamil_news....d=2902&cat=

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்படும் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்கால ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்கள் ஆளும் கூட்டணியின் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஒப்பந்தத்தின் மூலம் பாரியளவு அந்நிய செலாவணி இழக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதாரமே நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்களின் சுமைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வெகுவரைவில் பொதுத் தேர்தல்களை நடத்த வேண்டுமென ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு உயர்வு, பாதுகாப்பு நிலவரம், அந்நிய செலாவணி இழப்பு போன்ற சகல முக்கிய பிரச்சினைகளையும் போர் வெற்றிகளினால் மூடிமறைத்துவிட முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெகுவிரைவில் பொதுத் தேர்தல் ஒன்றிற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹெட்ஜிங் உடன்படிக்கை தொடர்பான ஆவணங்களை அழிக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், சபாநாயகர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் இனவாதத்திற்காக முஸ்லிம் மாணவர்களுக்கு ஏன் தொல்லை கொடுக்கின்றீர்கள் றணில் கேள்வி:

ஜாதிக ஹெல உறுமயவின் இனவாதத்திற்காக முஸ்லிம் மாணவர்களுக்கு ஏன் தொல்லை கொடுக்கின்றீர்கள் என்று சபையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கினால் அதனை வீடியோ ஒளிப்பதிவுடன் நிரூபித்துக்காட்டுவதாகவும்; தெரிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. வாய் மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எழுந்த சர்ச்சையின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இரத்தினபுரி சம்பவத்தையடுத்து அன்றைய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் மூலம் ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன.

தன்னிடமிருந்த ஆயுதத்தையும் கையளித்ததாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, ஹெல உறுமயவின் இனவாதத்திற்காக முஸ்லிம் மாணவர்களுக்கு பர்தா உடை தொடர்பில் ஏன் தொல்லை கொடுக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

வாய் மூல விடைக்கான நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களிடம்; கேள்விகளை கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான தினேஸ் குணவர்த்தன அளித்த பதிலையடுத்து எழுந்த சர்ச்சையின் போதே ரணில் இதனைத் தெரிவித்தார்.

கேள்விகளுக்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் ஊர்காவல் படையினர் பாதுகாக்கின்றனர். படையினருக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது குறுக்கிட்ட ரவி கருணாநாயக்க எம்.பி., படையினரை விடவும், ஊர்காவல் படையினருக்கு அதிகளவான வரப்பிரசாதங்கள் வழங்கினால் பிரச்சினையாகும். பிரச்சினை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்காவல் படையினருக்கு சோதிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. அது முடியாது. எனினும் பிள்ளையானின் செயலாளர் இவ்வாறான சோதனை சாவடிக்கு அருகில் வைத்தே பலியெடுக்கப்பட்டார் என்று சுட்டிக்காட்டினார்.

பதிலளித்துக் கொண்டிருந்த அமைச்சர் தினேஸ் குணவர்தன, தானும், எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியாவிற்கு அன்று சென்றிருந்த வேளை ஆப்கானிஸ்தான் வடக்கிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சென்றதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அரசின் நடவடிக்கைக்கு அனைவரும்; ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். மீண்டும் குறுக்கிட்ட ரவி கருணாநாயக்க நாம் அன்று கைகொடுத்தோம். கைகொடுக்கும் போது வெட்டியெடுத்தால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினார்.

கிழக்கில் பயங்கரவாதம் இல்லை என்று எவ்வாறு கூறுகின்றீர்கள்? றவி கருணாநாயக்கா:

கிழக்கில் வைத்தியர்களை காப்பாற்றுவதற்காக 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கிழக்கில் பயங்கரவாதம் இல்லை என்று எவ்வாறு கூறுகின்றீர்கள்? என்று ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

கிழக்கில் வைத்தியர்களை காப்பாற்றுவதற்கு 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு விசேட அதிரடிப்படையினரும், பாதுகாப்புடன் தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அப்படியாயின் கெஸ்பேவ, பிலியந்தலை குண்டு வெடிப்புகளை அடுத்து ஒவ்வொரு தனி நபருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அப்படியாயின் கிழக்கில் பயங்கரவாதம் இல்லை என்கின்றீர்களா? ஒப்புக் கொள்கின்றீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, தமிழ் மக்களின் இதயத்தை வென்றெடுக்க வேண்டும். தென்பகுதிகளுக்கு கிடைக்கும் சகல சலுகைகளும் அப்பகுதி மக்களுக்கும் கிடைக்க வேண்டும். பயத்தை இல்லாதொழிக்க வேண்டும். அதற்காகவே பாதுகாப்பு உள்ளிட்ட சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கிற்கு வைத்தியர்கள் 4 ஆம் திகதி கடமைக்கு திரும்புவார்கள் என்றார்.

யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தங்களாலும் அகதிகளாக்கப்பட்ட மக்கள் இன்னும் கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர் - ரேணுகா ஹேரத்:

யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தங்களாலும் அகதிகளாக்கப்பட்ட நாட்டு மக்கள் இன்னும் கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், மீள்குடியேற்றம் என்றும் நிவாரணம் என்றும் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி. ரேணுகா ஹேரத் சபையில் தெரிவித்தார்.

அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ரேணுகா ஹேரத் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர் வலப்பனை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்கு கொண்டுவரப்பட்ட பொருட்கள் கூட கடைகளுக்குச் சென்றுள்ளன. இதைத் தான் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

யுத்தமாக இருந்தாலும் இயற்கை அனர்த்தமாக இருந்தாலும் பொது மக்களே பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் பிரச்சினைகளை வைத்துவிட்டுச் சென்றுவிடக் கூடாது.

மண்சரிவு ஏற்படுவதற்கும் வெள்ளம் ஏற்படுவதற்கும் அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கையே காரணமாகும். முறையற்ற நிர்மாணப் பணிகள், காணி நிரப்புதல், மண் அகழ்வுகள் ஆகியவற்றை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

மறுபுறத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கும் இதேநிலை தான். 640 குடும்பங்கள் வலப்பனையில் அகதிகளாக இருக்கும்போது அவற்றுள் 187 குடும்பங்களுக்கு மாத்திரமே காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வீடமைப்பதற்காக 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதனை வைத்துக் கொண்டு எவ்வாறு வீட்டைக் கட்டுவது; இன்றைய பொருளாதார நிலை என்ன. விவசாயக் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மீளக்குடியமர்த்துவதாகவும், நட்டஈடு வழங்குவதாகவும் தம்பட்டமடிக்கும் அரசாங்கம், வலப்பனைப் பிரதேசத்தில் மண்சரிவில் மரணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் தலா 15 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் நிவாரணம் வழங்கியது. அரசாங்கம் ஒரு உயிரின் பெறுமதியை 15 ஆயிரம் ரூபாவுக்கு வரையறுத்துக் கொண்டிருக்கின்றது.

2007ஆம் ஆண்டு இடம்பெற்ற மண்சரிவு தொடர்பில் நிர்மாணப் பணிகளுக்கு 13.2 மில்லியன் செலவிட்டிருப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

இது போலியான தகவல்கள், இந்த உதவிகளை யார் கொள்ளையடித்தது என்பது தெரியாது. அரச தரப்பில் இருப்பவர்கள் கொள்ளையர்கள். மக்களுக்குச் செல்ல வேண்டியவற்றைக் கொள்ளையடிக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.