Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசாங்கம் வலியுறுத்தும்- தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களிடமும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி

Featured Replies

இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசாங்கம் வலியுறுத்தும்- தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களிடமும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி

virakesari.lk

இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசாங்கம் வலியுறுத்தும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளைப் போக்கும் வகையில் உடனடி போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கைவிடுத்தனர்.

இதனையடுத்தே இலங்கையில் போரை நிறுத்தவும் தமிழ் மக்கள் அமைதியாக வாழவும் ஏற்ற சூழலை ஏற்படுத்துமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பிரமதர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு பிரதமரை சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் பிரதமரை சந்திப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று புதுடில்லி சென்ற தமிழக எம்.பி.க்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது.

அப்போது இலங்கையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி.க்கள் பிரதமரை வலியுறுத்தினர். தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இக்கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங் போரை நிறுத்த இலங்கையிடம் வலியுறுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். இச்சந்திப்பில் அ.தி.மு.க., ம.தி. மு.க. எம்.பி.க்கள் இதில் இடம்பெறவில்லை.

இதேவேளை, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் போது இலங்கையில் போரை நிறுத்தி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என கோருவேன் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

என்னால் முடிந்த வரையில் என்னுடைய நிலைக்கு ஏற்பவும், என்னுடைய நிலையை ஓரளவு தளர்த்திக் கொண்டும் தமிழ்ச் சமுதாயத்தின் மானப் பிரச்சினை. உயர் பிரச்சினை என்ற முறையில் எல்லாக் கட்சியினரிடமும் இறுதி வரையில் இலங்கை பிரச்சினைக்காக வேண்டுகோள் விடுத்துள்ளேன். பிரதமரைச் சந்திக்கும் நிகழ்ச்சி நிரலில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க. தலைமையிடமான அறிவாலயத்தில், நிருபர்களை முதலமைச்சர் கருணாநிதி மாலை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதலமைச்சர் அளித்த பதில்களின் விவரமும் வருமாறு:

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் 4ஆம் திகதி அன்று பிரதமரைச் சந்திக்கச் செல்வதற்கு திருமாவளவன் வரக்கூடாது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொல்லியிருக்கிறாரே? பதில்: அவர் என்ன காரணம் சொல்லியிருக்கிறார். ஏன் திருமாவளவன் வரக்கூடாது என்கிறார்? நிருபர்: விடுதலைப்புலிகளுக்கு திருமாவளவன் ஆதரவாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். பதில்: திருமாவளவன் மறுப்பு அறிக்கை விடுத்துள்ளாரே! பிரபாகரனின் பிறந்தநாள் விழாவுக்குச் செல்லவில்லை. சென்றதாக பத்திரிகையிலே வந்த செய்தி தவறு என்று விளக்கம் அளித்து அறிக்கை கொடுத்துள்ளாரே! கேள்வி: எல்லா கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்துகொள்கிறார்களா?

பதில்: எல்லா கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற நிலையை விடுத்து தேர்தல் லாபம், கூட்டணி லாபம் என்பதை மையமாக வைத்து நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்று சில கட்சிகள் செயல்படுகின்றனவே? பதில்: என்னால் முடிந்த வரையில் என்னுடைய நிலைக்கு ஏற்பவும், என்னுடைய நிலையை ஓரளவு தாழ்த்திக்கொண்டும் தனி மனிதனுடைய மானப் பிரச்சினை அல்ல இது. தமிழ் சமுதாயத்தினுடைய மானப்பிரச்சினை, உயிர்ப்பிரச்சினை என்ற முறையில் எல்லா கட்சியினரிடமும் இறுதி வரையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக வேண்டுகோள் விடுத்தவாறு இருக்கிறேன்.

கேள்வி: பிரதமரிடம் 4ஆம் திகதி எப்படிப்பட்ட கோரிக்கையை முன்வைப்பீர்கள்? பதில்: முதல் கோரிக்கை, இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் அங்கே அமைதியான முறையில் வாழ வழிசெய்ய வேண்டும். தமிழகத்தில் பாதுகாப்பு கேள்வி: மும்பைத் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு தமிழகத்திலேயும் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பீர்களா? பதில்: பொதுவாக இப்போது அடிக்கடி மாதம் ஒருமுறை காவல்துறை அதிகாரிகளோடும், அந்தத் துறையின் செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோருடனும் நான் கலந்துபேசி தமிழகத்தில் அமைதி காண்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தான் இன்றைக்கு நானும், சட்டத்துறை அமைச்சரும் பொலிஸ் துறையின் பெரிய அதிகாரிகள், உள்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோரோடு கலந்து பேசியிருக்கிறோம்.

கேள்வி: சென்னையிலும் அப்படிப்பட்ட தாக்குதல் வரலாம் என்று மத்திய புலனாய்வுத் துறையிடம் இருந்து தகவல் வந்திருக்கிறதா? பதில்: அப்படிப்பட்ட நிலைமை ஏற்படலாம் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது கண்டு நாங்களும் எச்சரிக்கை நடவடிக்கைகளிலே ஈடுபட்டிருக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.