Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமாதான பேச்சுகள் தோல்விக்கு யார் காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான பேச்சுகள் தோல்விக்கு யார் காரணம்?

[03 - December - 2008]

* இலங்கையில் 25 வருடகால அழிப்பு யுத்தத்திற்கு முடிவுகட்டி, நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார யுத்தத்திற்கு முகம் கொடுக்கவேண்டிய தேவை தட்டிக்கழிக்க முடியாததாகும்.

வ. திருநாவுக்கரசு

இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்குமான விஜயத்தினை தற்போது மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரோமாபுரி சென்று பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரைச் சந்தித்து இலங்கை நிலைமைகளை விளக்கியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நிகழ்வுகள் மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் மற்றும் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் ஜனநாயக சுதந்திரங்கள் மீட்கப்படுவதற்கான நம்பிக்கை தொடர்பாக பாப்பரசர் மிகுந்த ஆர்வமடைந்ததாகவும் இப்பிராந்தியத்தில் பயங்கரவாதம் பரவியுள்ளது பற்றி அவர் கவலையடைந்துள்ளதோடு பயங்கரவாதம் எங்கு தான் தலைதூக்கினாலும் அதனை ஒழித்துக் கட்டுவதற்கு ஒன்றிணைக்கப்பட்ட சர்வதேச ரீதியிலான நடவடிக்கை அவசியமென அவர் கருத்து வெளிப்படுத்தியதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்து வத்திக்கானின் இராஜாங்கச் செயலாளர் காடினல் ராசிசோ பேண்ரோன் என்பவரோடு கலந்துரையாடல் நடத்திய போது பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் கிழக்கு மாகாணம் விடுக்கப்பட்டமை, குறிப்பாக மடு தேவாலயப் பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டமை யாவற்றையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின் அரசியல் தீர்வொன்றினை எட்டுவதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடைந்து ஜனநாயக நீரோட்டத்தில் பிரவேசிக்க வேண்டுமென தான் அறைகூவல் விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார். சமாதானத்தையும் சுதந்திரத்தையும் மீட்பதற்கு இராஜாங்க செயலாளர் பேண்ரோன் நல்லாசிகளை வழங்கியதாக அறியப்படுகிறது. ஆனால், வத்திக்கான் விஜயம் பற்றி கூட்டறிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

சர்வமத தலைவர்களுடன் சந்திப்பு

மேற்குறித்த வெளிநாட்டு விஜயத்தின் முன்னர் அதாவது 25.11.2003 ஆம் திகதி கோட்டை நாக விகாராதிபதி வண. மாதுருவாவே சோபித தேரர், மன்னார் மறை மாவட்ட ஆண்டகை அதி வண. ராயப்பு ஜோசப் அடங்கலான சர்வமத தலைவர்கள் மற்றும் சில பிரமுகர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.), ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கு உழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்ட போது இது ஒரு பயங்கரவாதப் பிரச்சினை. ஏதாவது பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். கடந்த 25 வருடங்களாக வெவ்வேறு அரசாங்கங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன. விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 3 தடவைகள் நான் ஐரோப்பாவுக்கு தூதுக்குழுக்களை அனுப்பியுள்ளேன் என அவர் (ஜனாதிபதி) கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

""விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த காலப் பகுதிகளை தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கே பயன்படுத்தியுள்ளனர். ஆகையால் அவர்களைத் தோற்கடிக்கும் வரை அல்லது அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரை பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின் நான் அரசியல் தீர்வுத் திட்டத்தினை முன்வைப்பேன்' என்பதாகும்.

பிரபாகரன் மாவீரர் தின உரையில் கூறியது

பேச்சுவார்த்தைகள் விடயத்தைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 2008.11.27 ஆம் திகதி ஆற்றிய மாவீரர் தின உரையில் குறிப்பிட்டிருந்ததைப் பார்ப்போம்.

""அதேநேரம் நாம் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை சமாதான வழிமுறை தழுவி எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க திம்புவில் தொடங்கி, ஜெனிவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுகளில் பங்கு பற்றி வந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு காண நாம் முழு மனதுடனும் நேர்மையுடன் செயற்பட்ட போதும் பேச்சுகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக் கொடுக்காத கடும் போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித்தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பு என்ன நடந்தது?

தமிழர் தரப்பில் ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்திய மூன்று தசாப்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் பண்டாரநாயக்க செல்வநாயகம் மற்றும் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தங்கள் போன்ற சமாதான உடன்படிக்கைகள் யாவும் சிங்கள பேரினவாத சார்பு தலைமைகளால் காற்றில் பறக்க விடப்பட்ட வரலாற்றினை முற்றாக மறந்த நிலையிலேயே தென்னிலங்கை தலைமைகளால் காய்கள் நகர்த்தப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக கடந்த 60 வருடகாலமாக தெளிந்த நிதானமான வரலாற்றுப் பார்வையோ நாட்டின் நீண்ட கால நன்மை கருதிய தொலை நோக்கோ இன்றியே ஆளும் வர்க்கத்தினர் செயற்பட்டு வந்துள்ளனர் எனவும் பு?ரயோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான தீர்வுத் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதற்கான ஒரு விதமான அறிகுறியும் தெரியவில்லை. கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தி ஜனநாயகம் மீட்கப்பட்டுள்ளதாக ஓயாத பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காண்கிறோம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் பூசல்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன என்பது வெள்ளிடை மலை. மட்டக்களப்பில் 3 இரவுகளில் 25 படுகொலைகள் என சென்ற வாரச் செய்தியொன்று கூறியது. கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

முதலமைச்சர் கவலை

மறுபுறத்தில் மிக பரபரப்பாக பதவியில் அமர்த்தப்பட்டவராகிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது கையில் ஒரு அதிகாரமும் இல்லை என 23.11.2008 ""சண்டே ரைம்ஸ்' இதழுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். அது போலவே, முக்கியமான மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் தனது கவலையை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். கிழக்கின் நிலைமை இவ்வாறிருக்கையில் வடக்கில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின் இதே பாணியில் தான் அரசாங்கம் காய்கள் நகர்த்த முற்படும் எனலாம். அரசாங்கமானது தனது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் அதற்காக என்ன விலையையும் கொடுப்பதற்குத் தயாராயுள்ளதையும் காண்பது கடினமான காரியமல்ல. இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்கான விடயங்கள் மீது கவனம் செலுத்தப்படாமலிருப்பதைக்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.