Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிரைப் பாதுகாப்பதற்காக இடத்துக்கிடம் மாறும் மக்கள்-- தனோஜன்

Featured Replies

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து வன்னிப்பிரதேச மக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான பணியாகவே அங்கு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அரசாங்கம் அடிக்கடி கூறுகின்றது.

ஆனால் உண்மையிலேயே மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. நோர்வே அரசு இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தபோதிலும், சமாதான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை.

பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் சமாதான ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறி போர்நிறுத்தத்தை முறித்துக் கொண்டது. அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்து படிப்படியாக தீவிரப்படுத்தி, அதனை இப்போது முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றது.

பல்குழல் பீரங்கிகள், ஆட்டிலறி பீரங்கிகள், எம்.ஐ 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள், சக்திவாய்ந்த மிக் 27 ரக போர் விமானங்கள் என்பவற்றைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அந்நிய நாட்டுப் படையொன்றுடன் நடத்தப்படுகின்ற ஒரு யுத்தத்தைப் போலவே இன்று வன்னிப்பிரதேசத்திலும், யாழ்.குடாநாட்டின் தென்பகுதியிலும் பெரும் தாக்குதல்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

வன்னிப் பிரதேசத்தில் உள்ள பொதுமக்களை விடுவிப்பதற்காகவே இந்த யுத்தம் செய்யப்படுகின்றது என்று அரசாங்கம் கூறினாலும் அங்குள்ள மக்கள் நாளாந்தம் இடம்பெறுகின்ற எறிகணை வீச்சுக்கள், விமானக்குண்டுத் தாக்குதல்கள் என்பவற்றுடன், ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியின் தாக்குதல்கள் என்பவற்றிற்கு அஞ்சி தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக இடத்திற்கு இடம் மாறி, மாறி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த இடப்பெயர்வுக்கும், பாதுகாப்பு தேடி ஓடுகின்ற ஓட்டத்திற்கும் முடிவு ஏற்படுமா என்பது தெரியாமல் அவர்கள் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கை ஒரு தனி நாடு. அங்கு பிரிவினைக்கு இடமில்லை. நாட்டைத் துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தெரிவித்து வருகின்றார்கள்.

ஆனால், தனிநாடு கோரி போராடுவதற்காக நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ் மக்களின் (தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகின்ற) அரசியல் அபிலாஷைகளை மீளாய்வு செய்து பார்ப்பதற்கோ, அல்லது அவை குறித்த தீவிரமாக நியாயமான அரசியல் கண்ணோட்டத்துடனோ சிந்திப்பதற்கு அவர்கள் இன்னும் தயாராகவில்லை. ஆயினும், மறுக்கப்பட்டுள்ள தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தமிழ் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தை ஒடுக்கி, நசுக்கி இல்லாமல் செய்துவிடுவதற்கான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் பல்வேறு வழிகளிலும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த ஒடுக்குமுறையானது வடபகுதியில், குறிப்பாக வன்னிப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக அமையவில்லை என்பது கவலைக்குரியாக இருக்கின்றது. எந்த மக்களைப் பாதுகாப்பதற்காக யுத்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோ, அந்த மக்கள் போர்ப்பிரதேசங்களில் இருந்து வெளியேறி வருவதற்குரிய வாய்ப்பையும் வழியையும் ஏற்படுத்துவதில் அரசாங்கம் இன்னுமே ஆர்வம் காட்டாத நிலைமையே காணப்படுகின்றது.

போர்ப்பிரதேத்தில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாகத் தங்கியிருப்பதற்கான பிரதேசங்களாக விசுவமடு மற்றும் ஒட்டுசுட்டான ஆகிய இரண்டு இடங்களை அரசாங்கம் அடையாளமிட்டு, அந்தப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாகத் தங்கியிருக்கலாம் என அறிவித்திருந்தது. விசுவமடுவில் 10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடமும், ஒட்டுசுட்டானில் 10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பகுதியுமே இவ்வாறு பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் இலக்கு வைத்து வன்னிப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் இருந்தும் கிழக்குப் பகுதியான வெலிஓயா பகுதியில் இருந்தும் (இப்போது) தெற்கே மாங்குளம் பிரதேசத்தில் இருந்தும் பல முனைகளில் இராணுவம் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னேறிக்கொண்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.