Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தம் இன்னமும் 50 வருடங்களுக்கு நீடிக்கும் அப்போது தமிழர் ஒருவரும் நாட்டிலிருக்க மாட்டார்கள் - சபையில் சம்பந்தன் எம்.பி. ஆதங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் இன்னமும் 50 வருடங்களுக்கு நீடிக்கும் அப்போது தமிழர் ஒருவரும் நாட்டிலிருக்க மாட்டார்கள் - சபையில் சம்பந்தன் எம்.பி. ஆதங்கம்

வீரகேசரி நாளேடு 12/4/2008 9:21:00 PM - விடுதலைப் புலிகளுடன் இறுதிவரையிலும் போராடுவோம் என்று அரசாங்கம் கூறுவதைப் பார்த்தால் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் இன்னும் 50 வருடங்களுக்கு நீடிக்கும்.

அப்படி நீடித்தால் அச்சந்தர்ப்பத்தில் ஒரு தமிழர் கூட நாட்டில் இருக்க மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்துவதற்கு யுத்தத்தை நிறுத்த வேண்டும்.

அல்லது தமிழ் மக்கள் அனைவரும் நாட்டை விட்டு தப்பித்து செல்ல வேண்டும். இந்த இரண்டு வழிகளை தவிர தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்த வேறுவழியில்லை என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அவசரகாலச்சட்டம் மீதான விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

புலிகள் தவறு இழைத்தனர் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் 1956ஆம் ஆண்டே வன்முறை ஆரம்பமானது. காலி முகத்திடலில் சத்தியாக்கிரகம் மேற்கொண்டபோது மேற்கொண்ட தாக்குதலின் போதே வன்முறை ஆரம்பமானது.

56, 58, 61 ஆண்டுகளில் வன்முறைகள் தொடர்ந்தன. யாழ்ப்பாணத்தில் 70, 71, 73 மற்றும் ஆங்காங்கே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் தமிழர்களே பாதிக்கப்பட்டனர். ஏனைய சமூகத்தினர் பாதிக்கப்படவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் நடந்து கொண்டமையினாலேயே தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

சமாதானத்திற்காக உண்ணாவிரதம், சமய பூஜைகளில் ஈடுபட்டோம். ஆயுதங்களை ஏந்தவில்லை எனினும் படுகொலைகள் தொடர்ந்தன. எஸ்.டபிள்யூ. ஆர்.பண்டாரநாயக்க, 1954 ஆம் ஆண்டு பௌத்த துறவியினால் படுகொலை செய்யப்பட்டார்.

இதுவே முதல் அரசியல் படுகொலையாகும். பிரபாகரன் படுகொலையை ஆரம்பிக்கவில்லை. புலிகளின் வன்முறைகளை சில வேளைகளில் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்கள் மீதான அட்டூழியங்களின்போது அரசாங்கம் பாதுகாப்பு வழங்கவில்லை. இத்தகைய செயற்பாடுகள் புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கான காரணியாக அமைந்தன.

தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல்கள் வன்முறைகளை இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை ஆதரவளித்தது. இவையாவும் புலிகளை ஆயுத போராட்டத்திற்குள் தள்ளுவதற்கு காரணியாக அமைந்தன. மதவாத அரசியல் தலைமைகள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வந்தபோதும் அரசாங்கம் அதனை விரும்பவில்லை.

புலிகளுக்கு நாம் வக்காளத்து வாங்கவில்லை. பலநாடுகளில் புலிகளை தடை செய்துள்ளனர். எனினும் மேலே கூறப்பட்ட உண்மையை யாருமே மறுக்கவோ, மறக்கவோ முடியாது. புலிகள் உருவாகவில்லை. உருவாக்கப்பட்டனர். அதுவும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தவறுகள் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாகவே புலிகள் உருவானார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.