Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், கஜேந்திரன் ஆகிய மூவருக்கும் எதிராக புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல்

Featured Replies

ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், கஜேந்திரன் ஆகிய மூவருக்கும் எதிராக புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், மற்றும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஆகிய மூவரும் நாட்டை விட்டு வெளியேறாது தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன் நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு எந்த நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை.

ஜேர்மனியில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிமை தொடர்பில் கடந்த 14ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நாலாம் மாடியில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அத்துடன் எதிர்வரும் 9ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியப் பிரதமரை சந்திக்க புதுடில்லி செல்லவிருந்தமை அனைவரும் அறிந்ததே.

http://www.tamilwin.com/

நான்கு தமிழ் எம்.பிக்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் தடை விதிக்கக் கோரி மனு - கொழும்பு நீதிமன்றில் சி.ஐ.டியினர் நேற்றுத் தாக்கல் ஆனால்அழைப்பாணை அனுப்ப மட்டும் நீதிவான் உத்தரவு

[06 டிசம்பர் 2008, சனிக்கிழமை 2:30 பி.ப இலங்கை]

நாட்டுக்குள் தனி இராச்சியம் அமைக்கும் நோக்கோடு, பிரிவினைக் கோரி வெளிநாடுகளில் பிரசாரம் செய்த குற்றத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் எனத் தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வுப் பொலிஸார், அந்த நால்வரில் ஏற்கனவே நாட்டில் இருப்போரை நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் நேற்று மனுச் செய்தனர்.

அந்த மனுவைப் பரிசீலித்த நீதிவான், தடை உத்தரவு எதையும் விதிக்காமல், மேற்படி நான்கு எம்.பிக்களையும் எதிர்வரும் பத்தாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிப்பதற்கு மட்டும் கட்டளையிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் பாக்கியசெல்வம், யாழ். மாவட்ட எம்.பிக்களான செல்வராஜா கஜேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஆகிய நான்கு எம்.பிக்கள் தொடர்பான விடயங்களை ஒட்டியே நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த ஹப்புஆராய்ச்சி முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தனர். அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களின் சாராம்சம் வருமாறு:-

ஜெயானந்த மூர்த்தி, அரியநேத்திரன், கஜேந்திரன் ஆகிய மூவரும் 2006 ஜூன் 26ஆம் திகதி ஜேர்மனியில் இடம்பெற்ற ‘பொங்கு தமிழ்’ நிகழ்வில் இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்தும், தனி இராச்சியம் ஒன்று நிறுவவேண்டும் என்று கோரியும் உரையாற்றியுள்ளனர். தனி நாட்டுக்காகப் போராடும் புலிகள் இயக்கத் தலைவருக்கு ஒத்துழைப்பும், உதவியும் வழங்குமாறு வெளிநாட்டுத் தமிழர்களிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, கடந்த நவம்பர் 14 ஆம் திகதி ஜெயானந்தமூர்த்தியிடமும், 18 ஆம் திகதி அரியநேத்திரனிடமும், 19 ஆம் திகதி கஜேந்திரனிடமும் நாம் வாக்குமூலம் பெற்றோம்.

மேற்படி ‘பொங்கு தமிழ்’ நிகழ்வு தொடர்பாக எம்மிடம் உள்ள ‘சிடி’யைப் போட்டுக் காட்டினோம். அதில் உள்ளவை தாங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிதான் என அவர்கள் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டு ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.

இதுபோன்று அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ‘பொங்கு தமிழ்’ நிகழ்வில் சிவாஜிலிங்கம் உரையாற்றியுள்ளார். எனினும், அவர் இன்னும் நாட்டுக்குள் மீள வராமையால் அவரிடம் வாக்குமூலம் எதனையும் இன்னும் பதிவு செய்யமுடியவில்லை.

இவர்கள் பிரிவினைக்கு ஆரவாரப் பிரசாரம் செய்யமாட்டோம் என்று தெரிவித்து சத்தியப் பிரமாணம் செய்தே எம்.பிக்களாகப் பதவியேற்றுள்ளனர். ஆனால், அதற்கும் அரசமைப்புக்கும் முரணாகச் செயற்பட்டு பிரிவினைக்கு ஒத்துழைப்பு, அனுசரணை, உற்சாகம் அளிப்பதோடு, உதவியும் வருகிறார்கள்.

எனவே, இவ்விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கவும், மேலும் விசாரணை செய்யவும் தீர்மானித்துள்ளோம்.

ஆகையால், இந்த எம்.பிக்களை நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். - இப்படி அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பரிசீலித்த நீதிவான், சம்பந்தப்பட்ட எம்.பிக்களின் கருத்தை அறியாமல் இத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க முடியாது எனக் குறிப்பிட்டதோடு, இந்த விடயத்தைப் பற்றி ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட எம்.பிக்களை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிக்கும் அழைப்பாணையை அனுப்புவதற்குக் கட்டளையிட்டார்.

இந்த நான்கு எம்.பிக்களில் கஜேந்திரன், ஜெயானந்த மூர்த்தி, சிவாஜிலிங்கம் ஆகிய மூவரும் ஏற்கனவே வெளிநாட்டில் உள்ளனர். அரியநேத்திரன் நேற்று கொழும்பில் தங்கியிருந்தார்.

பிந்திய செய்தி

அழைப்பாணை அனுப்பும்

உத்தரவும் வாபஸ்!

நான்கு தமிழ் எம்.பிக்களுக்கு எதிராக அழைப்பாணை விடுக்கும்படி நேற்றுக்காலை கட்டளையிட்ட கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அந்த உத்தரவையும் நேற்று மாலை வாபஸ் பெற்றுவிட்டதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

குற்றப் புலனாய்வுத் துறையினர் தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தின் பேரில் கஜேந்திரன், சிவாஜிலிங்கம், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் ஆகிய நான்கு தமிழ் எம்.பிக்களையும் எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த ஹப்புஆராய்ச்சி உத்தரவிட்டிருந்தார்.

அந்த அழைப்பாணை விடுக்கும் உத்தரவை நேற்று மாலை அவர் விலக்கிக்கொண்டார் என சட்டவட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்று அதனடிப்படையில் மேல் நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் குற்றப் புலனாய்வுப் பொலிஸாருக்கு நேற்றுமாலை உத்தரவு பிறப்பித்தார் என்றும் தெரியவந்தது.

நீதிமன்றத்தின் இத்தீடீர் தீர்மான மாற்றத்திற்கான காரணம் தெரியவரவில்லை.

நீதிமன்றத்தின் புதிய உத்தரவுப்படி நான்கு எம்.பிக்களுக்கும் அழைப்பாணை அனுப்பப்படாதபோதிலும், குற்றப்புலனாய்வுப் பொலிஸாரின் விண்ணப்பம், முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

-uthayan.com-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.