Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர் பிரச்சினையும் எனது பார்வையும்..........

Featured Replies

ஈழத்தில் நடைபெற்று வரும் போர், இப்பொழுது பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. பெரிய வல்லரசு நாடுகளுடன் மோதியும், பல சதிச் செயல்களிலும் இருந்து வெற்றி பெற்று வரும் இந்த வேளையில், புலத்தில் வாழும் மக்கள் கதைப்பது என்ன?

சிறீலங்கா இராணுவத்தினர், தமிழ் மக்களின் பல இடங்களைக் கைப்பற்றி விட்டார்கள், கிளிநொச்சியினையும் இன்னும் சில நாட்களில் கைப்பற்றி விடுவோம் என்று பல மாதங்களும் கடந்து பிடிக்கவில்லை. இப்படி இலங்கை இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தினர், தாங்கள் வெற்றி பெறுவதாக பெரிதாக சந்தோசம் அடைந்து வருகின்றனர்.

சிறீலங்கா இராணுவத்தினர் வெற்றி பெற வேண்டும் என பல வல்லரசு நாடுகள், இராணுவ உதவிகள், போர் தந்திரங்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றது. இப்படி பல வசதிகள் உள்ள சிறீலங்கா இராணுவம், ஏன் இவ்வளவு காலமாக விடுதலைப் புலிகளை அழிக்கவில்லை? அவர்களை அழிப்பதற்கு இலங்கை இராணுவத்தினரால் முடியவில்லை. இலங்கை இராணுவத்தில் பணி புரிந்து வரும் பல இராணுவத்தினர் பணத்திற்காகவே,விடுதலைப் புலிகளுடன் போராடி வருகின்றனர்.

அப்படி உள்ள ஒரு இராணுவம், தமது நாட்டிற்காக போராடும் ஒரு விடுதலை இயக்கத்துடன் வெற்றி பெற முடியுமா?

இலங்கை அரசு சொல்வது போல், இலங்கை இனப்பிரச்சினைக்கு போரினால் வெற்றி பெறவே முடியாது. விடுதலைப் புலிகளை வெற்றி பெற்றாலும், இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினை முடிவிற்கு வராது. இலங்கை இனவெறி அரசினால், தமிழ் மக்கள் நாள்தோறும் அழிக்கப்பட்டே வருவார்கள்.

இலங்கை அரசு தன் பலத்தினை வைத்து போராடி வெல்ல முடியாதவர்கள், உலக நாடுகளிடம் பிச்சை பெற்று, விடுதலைப் புலிகளிடம் போராடி வருகின்றனர்.

தீவிரவாதம் என்று உலக நாடுகளும் அதற்கு ஆதரவு வேறு.

இலங்கையில் நடைபெறுவது, தீவிரவாதிகளுக்கு எதிரான போரா? அல்லது இன அழிப்புப் போரா?

இலங்கையை ஆண்டு வந்த இனவெறி அரசுகள் அனைத்துமே, தமிழர்களின் நியாயத்தன்மையை புரிந்து கொள்ளவே இல்லை. அப்படி இருக்கும் ஒரு அரசு சொல்லும் வார்த்தையினை உலக நாடுகள் கேட்டுக் கொண்டு இருப்பது ஏன்?

இலங்கையினை ஆண்ட அனைத்து அதிபர்களும், விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என உலகிற்கு காட்டினார்கள். அதனையே சர்வதேச நாடுகளும் நம்பி, அப்பாவி தமிழர்களை படுகொலைகள் செய்வதற்கு உதவிகள் செய்து வருகின்றது. தற்பொழுது இலங்கையினை ஆண்டு வரும் மகிந்த ராஜாபக்ஷவும், முன்னைய அரசுகள் செய்தது போன்றே செய்து வருகின்றார்.

தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்படும் என்று சர்வதேச நாடுகளுக்கு நாடகம் அரங்கேற்றி வரும் மகிந்த அரசு, தாம் நடத்தி வரும் நாடகத்தில் சர்வதேச நாடுகளை நடிக்க வைத்து வருகின்றார்.

சர்வதேச நாடுகளும் அதில் மிக நன்றாகவே நடித்து வருகின்றது.அதிலும் இலங்கையின் தாய் நாடான இந்தியா மிகவும் நன்றாகவே நடித்து வருகின்றது. தமிழ்நாட்டில் தற்பொழுது எழுந்திருக்கும் ஈழ ஆதரவு போராட்டங்கள், ஈழத்தமிழர்களுக்கு பெரும் ஆதராவாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், மற்றும் பல அமைப்புக்கள் இந்திய அரசினை கண்டித்த வண்ணமே உள்ளது.

இருப்பினும் இந்திய அரசு, தாங்கள் ஒரு இராணு உதவியும் செய்யப்போவதில்லை, ஆயுதங்களும் வழங்க மாட்டோம் என்றே தெரிவித்து வருகின்றது. இந்தியாவின் அருகில் இருக்கும் நாடான பாகிஸ்தான், இலங்கை இராணுவத்திற்கு அழித்து வரும் இராணுவ உதவி,ஆயுதங்களை விட இந்தியா கூடிய உதவிகளை வழங்கவே நினைக்கின்றது.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் உள்ள போட்டியினை, ஈழத்தில் உள்ள அப்பாவி தமிழர்களை கொல்லப்படுவதற்கு காரணமாக உள்ளது. தமிழர் பிரதேசங்களில் படுகொலை செய்யப்படும் மக்கள் அனைவருமே விடுதலைப் புலிகள் என்றே சர்வதேச நாடுகளுக்கு எண்ணிக்கையினை இலங்கை அரசு காட்டி வருகின்றது.

தீவிரவாதம் என்ற சொல்லை, உண்மையாக மாற்றிய நாடு அமெரிக்கா. அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை வைத்து, தன் பார்வையில் தெரியும் அனைத்து விடுதலை இயக்கங்களையும் தீவிரவாதிகள் என்றே அமெரிக்கா பார்க்கின்றது. இப்பொழுது அமெரிக்காவில் நடந்து முடிந்த தேர்தலில், வெற்றி பெற்று பதவியேற்க இருக்கும், வருங்கால அமெரிக்க அதிபர், ஓபாமா தீவிரவாதிகள் என்ற சொல்லை அவரும் பாவிப்பாரா?

ஒபாமாவும் அப்படியே பார்த்தால், உலகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் தீவிரவாதிகள் என்று பட்டியல் போடப்பட்டு வருங்காலத்தில் வரலாம். உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான இந்தியா, தனது தமிழர் விரோதப் போக்கை விட்டு, தமிழர்களுக்கு ஒரு நாடு வழங்க முன்வர வேண்டும்.

இந்தியா வைக்கும் கருத்தினை, அனைத்து நாடுகளுமே எற்கும் என்பது நிச்சயம்.

http://www.tamilseythi.com/kaddurai/eelata...2008-12-06.html

- புலத்தில் வாழும் அகதி

களம் பற்றிய பார்வையில் தெளிவில்லாமல் சிலவிடயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. மாவீரர் தின உரையின் பின்பும் இவ்வாறான கருத்தக்கள் மக்களிடம் இருப்பதென்பது தெளிவின் குறைபாடுதான். களம் தனது செயற்பாட்டில் உறுதியுடனும் நிதானத்துடனும் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

உலகத்திற்கு என்ன சொல்லப்பட வேண்டும், இந்தியாவிற்கு என்ன சொல்லப்பட வேண்டும், உலகில் எங்கணும் வாழும் தமிழர்களுக்கு என்ன செல்லப்பட வேண்டும் என்பதெல்லாம் மாவீரர் உரையில் தெளிவாகவேயுள்ளது. அதனை முதலில் யாவரும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

புலத்தில் வாழ் தமிழர்களை நோக்கி உரிமையோடு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் எந்தத் தமிழனாலும் புறக்கணிக்கப்படாமல் அதற்கான செயற்பாட்டில் ஈடுபடுதலே இனிச் சிறந்த செயற்பாடாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.