Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய உறவுகளுக்கு ஓர் மடல்.

Featured Replies

வணக்கம்,

தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான இந்திய பிரதமருடனான சந்திப்பும், ஈழத்தில் போர் நிறுத்தம் தொடர்பான செய்திகளும் நம்பிக்கை ஊட்டுகின்றது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் என்றென்றும் உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.

அரசியல் தாமதங்கள் சிங்களத்துக்கு அணுகுண்டின் உடன் பிறவா உறவான "கிளச்ச்டார்" குண்டை புயலாலும், பெரும்வெள்ளத்தாலும் அவதிப்படும் தமிழர்களின் அகதி முகாம் மீது பதினாறு தரம் பரிசீலிக்க அவகாசம் தந்துள்ளது. உலகமே இந்த உயிர் கொல்லி ஆயுதத்தை பிரயோகிக்க மறுக்கும் ஒப்பந்தத்தில் ஒப்பமிடும் இந்நாளில், சிங்களம் கைச்சாத்திடா சீனத்துடன் கை கோர்த்துள்ளது. இதுவே, ஈழத்தில் தமிழருக்கெதிரான இன ஒழிப்பை சிங்களம் எந்த அழுத்தத்தாலும் கைவிடாது என்பதற்கு சான்று.

தமிழக தமிழ் தலைவர்கள் இந்திய பிரதமர் தமக்கு அளித்த ஈழத்தில் போர் நிறுத்தம் தொடர்பான உறுதிமொழியை அறிவித்த அதே நேரத்தில், சிங்களத்தின் இன வெறி பிரதமர் எந்த சக்தியாலும் தமிழருக்கெதிரான போரை நிறுத்த முடியாது என்று உறுதிபட உரக்க கூவி உள்ளார். மதிபிட்குரிய திரு. முகர்ஜி அவர்கள் சிங்கள தேசத்திற்கு சென்றாலும், பசில் ராஜபக்ச புது டெல்லியில் இருந்து போன சிரிப்புடன் சிங்களம் இந்திய வெளியுறவு அமைச்சரையும் அனுப்பி வைக்கும். ஆனால், அவரது விமானம் தரை தட்ட முன் ஈழதமிழனின், தமிழக மீனவனின் அவலக்குரல் உங்கள் காதுகளில் கேட்கும்.

ஈழத்தமிழனுக்கும், அதற்கு ஆதரவாக குரல் கொடுப்போரையும் முட்டாளாக்க சிங்களம் வைத்துள்ள மந்திரக்கோல், பதின்மூன்றாவது திருத்த சட்டம். பிச்சைக்காரனுக்கு கெட்ட சோறை போட்டது போல் பெருமையாக சிங்களம் தூக்கி பிடிக்கும் தந்திரம் அன்றும் இன்றும் இந்த திருத்தம் தான். ஆனால், இதில் ஒரு வார்த்தையை கூட சிங்களம் இன்றுவரை ஈழத்தமிழனுக்கு தரவில்லை. கிழித்து எறியப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தமும் இந்த பதின்மூன்றாவது சட்ட திருத்தத்துக்கு அடங்கியதே. இந்த பழைய பாயாசத்தையே சிங்களம் எப்போதும் இந்திய தூதுவர்களுக்கு பரிமாறும்.

இந்திய அரசியல் தலைமைகள், அவதானிக்க வேண்டிய விடயம் இந்த பதின்மூன்றாவது திருத்தத்தை எதிர்த்து பெரும் ஆர்ப்படங்களை நடத்திய மஹிந்தா ராஜபக்ச தான் இப்போது இந்த வெத்துவேட்டான சட்டத்தை காட்டி தமிழரை கொன்று குவிக்கிறார். அறுபது ஆண்டுகளாக சிங்களம் ஈழ தமிழனை கொன்றொழிக்க வழிகள் தேடியதே அன்றி தீர்வை ஒருபோதும் சிந்தித்ததே கிடையாது. சிங்களத்தின் தமிழ் இன அழிப்பு போர் தடையின்றி தொடர, அடுத்த வரவு, செலவு திட்டத்தில் வரலாறில் இல்லாத அளவு தொகையை பாதுகாப்புக்கு ஒதுக்கி உள்ளது. சிங்களத்தின் எதிர்கட்ச்சிகள், ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி உட்பட, அனைத்தும் தமிழ் இன அழிப்புக்கு முழு ஆதரவை அறிவித்துள்ளன.

ஈழத்தமிழனின் வேதனை தமிழக தமிழனுக்கு புரிவது தொப்புள் கொடி உறவால். அதே போல் ஈழத்துக்கான நியாயமான போராட்டத்தையும் தமிழகம் அங்கீகரிக்க வேண்டும். நீதியான உரிமையான ஈழத்தில் தமிழனின் சுயநிர்ணயுரிமையை தமிழக சட்டசபை அங்கீகரிக்க வேண்டும். இதுவே ஈழத்தில் தமிழனின் சுதந்திரமான, அமைதியான எதிர்காலத்துக்கு வழி அமைக்கும்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.