Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குனர் சீமான் காருக்கு தீவைப்பு

Featured Replies

இலங்கை விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை டைரக்டர் சீமான் விமர்சித்துப் பேசியதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று அவரது கார் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

தமிழர் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை ஆதரித்தும் ராஜீவ்காந்தி படுகொலை பற்றி விமர்சனம் செய்தும் பேசினார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் இளங்கோவன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலரும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

ஏற்கனவே ராமேஸ்வரத்தில் தமிழ்திரை உலகம் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் சீமான் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.

இந் நிலையில் சென்னையில் சீமான் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காருக்கு நேற்று தீ வைக்கப்பட்டது.

வளசரவாக்கம் கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகில் சீமானின் வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது காருக்கு யாரோ தீவைத்து விட்டு தப்பிவிட்டனர். இதில் அந்தக் கார் முழுவதும் எரிந்து போனது.

இது குறித்து சீமானின் உதவியாளர் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்துள்ளார்.

காங்கிரசார்தான் அவரது காருக்கு தீ வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்த சம்பவத்தையடுத்து சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனிச்சாமி ஈரோடு டவுன் போலீசில் சீமான் மீது புகார் கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் பிரதமர் மன்மோகன் சிங், இந்திரா, சோனியா ஆகியோரை விமர்ச்சித்தும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தை ஆதரித்தும் சீமான் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

அவருடன் இந்த கூட்டத்தில் பேசிய தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியின் மாவட்ட பொது செயலாளர் மணியரசன், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல ராகுல் ரத்ததான கழக தலைவர் வக்கீல் பிரம்மா டி.ஜி.பி.யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், பயங்கர வாதத்தை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது சட்டப்படி வழககு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இன்று 2008-12-19 காலை தமிழ்நாட்டில் ஒரு தமிழருக்கு எதிரான வன்முறை நடந்தேறியது.

திரைப்பட இயக்குனர் தமிழின உணர்வாளர் அண்ணன் சீமானின் மகிழுந்து தீ இட்டுக்கொளுதப்பட்டது இந்த அநாகரிகமான செயலை செய்தது யார் ?

வேறு யார் காங்கரஸ் காரர்கள்தான் என்ன காரணம்?

ராஜீவ் காந்தி கொலைபற்றிய பல உண்மைகளை அப்பட்டமாக மக்களுக்கு சொன்னதாலும் ,இந்திய அரசு சிங்களனுக்கு செய்யும் உதவிகளை பட்டியல் இட்டதாலும் ,தொடர்ந்து தமிழருக்கு இழைக்கப்படும் அணிதிகளை பேசியதாலும் இந்த வன்முறையை காங்கரஸ் செய்துள்ளது ,தமிழ்நாட்டில் தமிழனுக்கு அதரவாக பேசகூட முடியாதநிலை இந்த இந்திய பணனாயகத்தின் லட்சணம் இதுதான் தமிழர்களே செய்தி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை இந்த செய்தி தொலைபேசி மூலம் வந்தது ,முழுமையான தகவல் கிடைத்தபின் பதிவு செய்யப்படும்.

http://www.tamilseythi.com/tamilnaadu/seeman-2008-12-19.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓங்கி ஒலிக்கின்ற குரலை ஒடுக்கினால் 'உண்மை அடங்கிவிடுமா"? ஒருபோதும் இல்லை.

சீமான் அண்ணா,

நீங்கள் அக்கினிக்குஞ்சு..உங்களால் பல பொய்கள் எரிக்கப்படும்"...

சீமானின் மீண்டும் கைது கவலை அளிக்கிறது, இவர் போன்றோர் ஈழத்தமிழினத்திற்கு தற்போதைய காலகட்டத்தில் மிக தேவை.. இவரின் கைதும் இவரின் காரின் எரிப்பும் தமிழாட்டில் தமிழர் உணர்வை விழுங்கும் பெரும் சக்தி ஒன்று இயங்குவதைக்காட்டுகிறது..

கார் எரிப்புக்கு தமிழர் ஆதரவாளர்களின் எதிர்ப்பு உணர்வு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து பார்ப்போம்.. அரசியல் சுய நலமிகளுக்கு தமிழ் தமிழன் என்றால் கிடுக்கலக்கம்...

காங்கிரஸ்காரர் சீமானின் பேச்சுக்களால் ராஜிவின் சாமாதானப்படையின் குட்டுக்கள் எங்கு உடைந்துற்தமிழகமக்கள் விழிப்புணர்வு பெற்று காங்கிரஸிற்கு ஆதரவு இல்லாமல் போய்விடுமோ என்ற பயம்தான் காரணம்..

ஆனால் அதுதான் நடக்கும்.. தமிழக ம்க்கள் விழித்து விட்டார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

எரியும் நெருப்பை எண்ணை ஊற்றி அணைக்க முடியுமா?

ஈழத்திலை தமிழர்களின் வீடுகளின் மீது வைத்த தீயை இப்ப சீமானின் காருக்கு வைத்து இருக்கிறார்கள். காங்கிரஸ் திருந்தாது.

யாரத்தான் விட்டது விதி.

சீமான் அண்ணாவின் பேச்சு வலிமையே அவரது அஸ்திரம். வாழ்க உங்கள் தொண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்வர் எதும் அறிக்கை விடுவார்?????

  • தொடங்கியவர்

சீமான் அண்ணாவின் வண்டியில் சேகுவேராவின் படம் பொறிக்கப்பட்ட இலட்சணை பொறிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எதும் அறிக்கை விடுவார்?????

கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறார் விரைவில் வெளியிடுவார்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.