Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வெரு மனிதனின் வாழ்க்கையிலும் பயம் சில நேரங்களில் துரத்துகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வெரு மனிதனின் வாழ்க்கையிலும் பயம் சில நேரங்களில் துரத்துகிறது

எதனால் பயம் ஏற்படுகிறது ,ஏன் பயம் என்னை துரத்துகிறது ,பயம் என்பது சில நேரங்களில் என்னால் எதையும் சாதிக்க முடியாமல் ஆக்கிவிடுகிறதே ,என்று சில சூழ்நிலைகளில் நாம் சிந்திப்போம் ,இனி இந்த பயம் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும் பயத்தின் விளிம்பிலிருந்து எப்படி நழுவுவது என்பதை பற்றிய ஆய்வு கட்டுரை ..........................

எந்த சூழ்நிலையில் பயம் ஏற்படுகிறது

இதனுடைய சூழ்நிலையும் மனதில் ஏற்படும் மாற்றங்களே .பொதுவாக நாம் எந்த காரியத்தில் பயப்படுகிறோமோ அதை பற்றி நம் எண்ணும் சில தவறுகள் ,நாம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போது அந்த தீங்கு அவனை எட்டும் முன்னால் ஏற்படும் ஒரு பயம் ,நாம் நம்முடைய வேலையிலாக இருந்தாலும் ,நம்முடைய கடமையிலாக இருந்தாலும் நாம் எப்போது தவறுகிறோமோ அப்போது ஏற்படுகிற பயம் ,நாம் பழைய நிலையிலிருந்து மாறும் போது ,போக கூடாத இடங்களுக்கு போகிறபோது ,பார்க்க கூடாததை பார்க்கும் போதும் , நாம் இருக்கிற சூழ்நிலைகள் ,நாம் செல்லவேண்டிய இடங்களுக்கு போகிற நேரங்கள் இப்படி பல சூழ்நிலைகளில் பயம் நம்மை துரத்துகிறது .

பயத்தினால் ஏற்படும் மாற்றங்கள்

பயம் என்பது நாம் பயணிக்கின்ற பாதையை மாற்றி விடுகிறது ,நம்முடைய குறிக்கோளை மாற்றி விடுகிறது ,நம்மில் இருக்கும் துணிச்சலை மாற்றி விடுகிறது ,நம்முடைய திறமையை இந்த உலகம் காணாமல் ஆக்கி விடுகிறது ,நம்முடைய சுறுசுறுப்பை நிறுத்தி விடுகிறது ,நமக்கு உடல் ரீதியாக சில மாற்றங்களை உருவாக்கி விடுகிறது இதில் ஒன்று தான் நரம்பு தளர்ச்சி ,அதிகமான வியர்வை ,நாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் நம் அறிவு மழுங்கிவிடுகிறது ,அந்த நேரத்தில் நாம் செயல் படுகிற விதமே மற்றவர்களுக்கு நகைப்புக்குரியதாகிவிடுகிறத

பயம்?

கிலோ என்ன விலை?

எமது வளர்ப்பு முறையைப் பொறுத்தளவில் பயம் என்ற உணர்வு பிறப்பிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. குழந்தை அடம்பிடிக்கும்போதே, 'குழப்படி செய்தா உம்மாண்டீட்டை பிடிச்சுக் குடுத்தூடுவன்' என்று அம்மா பயத்திற்கான முதல் படியைக் காட்டுகிறார். பிறகு மரியாதை என்ற பதத்தின் அர்த்தம் பயத்தினூடாக ஊன்றப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு பருவத்தின்போதும் ஒவ்வொன்றைப் பற்றிய பய உணர்வு வளர்ப்புமுறையில் புகுத்தப்படுகிறது.

இது தாயகத்தில் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் உதாரணமாக என்னைப்போல், உடலுழைப்பால் மட்டுமே முன்னேற முடியும் என்ற நாடுகளிற்குள் புகுந்தவர்களுக்கு இவையே முன்னேற்றத்தின் முக்கிய தடைக்கற்களாக உள்ளன.

ஆரம்பத்தில் தொழில் தேடல் விசாரிப்புகளின்போது தயக்கம்.. வீண் மனக் குழப்பம்.. முடியுமா என்ற சஞ்சலம் அல்லது நம்பிக்கையீனம்.. அதுமட்டுமல்ல.. எமது தேவையில்லாத மரியாதையையும் பணிவையும் பார்க்கும் வேலை வாங்குபவர்கள்.. மேலும் மேலும் வேலைகளைச் சுமத்தவும் அதுவே வழிவகுப்பதாகவும் அமைந்துவிடுவதுமுண்டு.

இளகின இரும்பைக் கண்டால் தூக்கித் தூக்கி அடிப்பதுபோல, பணிவான தொழிலாளிகளைக் கண்டால் மேலும் மேலும் வேலை சுமத்துவது முதலாளிகளது தர்மம். ஆகவே, பயங்களை விட்டொழிதல் முன்னேற்றத்திற்கு வழிகோலும். எனவே, பெற்றோர் வளர்ப்புமுறையில் பயத்தை இயலுமட்டும் தவிர்ப்பது கடன். :wub:

Edited by sOliyAn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.