Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளியே தெரியாமல் மறைக்கப்படும் கிழக்கு மாகாண ஆட்கடத்தல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே தெரியாமல் மறைக்கப்படும் கிழக்கு மாகாண ஆட்கடத்தல்கள்!

ஞாயிறு, 28 டிசம்பர் 2008, 23:27 மணி தமிழீழம் [செய்தியாளர் சிவநடேசன் ]

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ கெடுபிடிகள் எப்போது அகற்றப்படும், மக்கள் எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் தினமும் சுற்றிவளைப்பு தேடுதல், கைது என மக்களின் அன்றாட வாழக்கை மிகவும் இறுக்கமடைந்து கொண்டுவருகின்றன. விடுதலை புலிகளின் ஊடுருவல் என தெரிவித்துக் கொண்டு அப்பாவி மக்களையே படையினரும் ஆயுததாரிகளுனம் கசக்கிப் பிழிகின்றனர்.

இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற படுவான்கரை பகுதிகளில் தினமும் ஒருவர் ஆயுததாரிகளினாலும், படைத்தரப்புகளினாலும் கடத்தப்படுகின்றார்கள ஆனால் இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியில் வருவதில்லை அவ்வாறு வெளியில் சொல்வதற்கும் குறித்த குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன. கடத்தல் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அந்த குடும்பத்தை சந்தித்து பேசினால் மறுநாள் யார் வந்தவர்கள் என ஆயுததாரிகள் விசாரணை செய்து மிரட்டிவருகின்றனர்.

படைகளினதும் ஆயுததாரிகளினதும் அடாவடிகள் அனைத்தும் கல்வி அறிவு குறைந்த பின்தங்கிய இடங்களிலேயே இடம்பெறுகின்றது. இப்பகுதியில் இடம்பெறும் ஒரு சில சம்பவங்கள் வெளியில் தெரியவந்தாலும் மீண்டும் அப்பகுதி மக்களையே தாக்குகின்றனர். இவ்வாறான பகுதிகளில் படையினரும், ஆயுதக்குழுக்களும் தமது விருப்பத்திற்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த வாரம் கூட அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான 40ம் கொலனி கிராமத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது அந்த பகுதி மக்களை ஒரு பொது இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நாடத்தியதுடன் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரிகள் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.

மனித உரிமைச் சட்டத்தின் விதந்துரைப்பின் படி குற்றம் செய்தவர் என்றாலும் எக்காரணத்திற்காகவும் ஒருவரை தாக்க முடியாது என சட்டம் சொல்கின்றது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும். ஆனால் கிழக்கு மாத்திரமல்ல இலங்கையின் நாலா பகுதிகளிலும் குறிப்பாக தமிழர்கள் பல்வேறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை உலக நாடுகளின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியும் இராணுவ மற்றும் துணைக்குழுக்களின் தொடர்ந்து இவ்வாறான வதைகள் மேற்கொண்டே வருகின்றனா.

40ம் கொலனியில் பொதுமக்களை தாக்கிய விசேட அதிரடிப்படையினர் கடுமையான தொனியில் எங்களுக்கு எதாவது நடந்தால் களுதாவளை, மற்றும் எரிவில் பகுதியில் குடும்பங்களை சுட்டுத் தள்ளியது போன்று உங்களையும் சுட்டுத் தள்ளுவோம் என பகிரங்கமாக மிரட்டியுள்ளனர். தற்போதாவது வெளியுலகுக்கு தெரிகின்றதா கிழக்கில் மாத்திரமல்ல இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் கொலைகள், கடத்தலுக்கு யார் பொறுப்பாளிகள் என்பது தெரிகின்றதா? கடந்த வாரம் எழுதிய கட்டுரையில் கொலையாளிகளை கைக்குள் கைத்துக் கொண்டு அரசாங்கம் எவ்வாறான நாடகம் ஆடுகின்றது என குறிப்பிட்டிருந்தேன். அதன் உண்மைத்தன்மை தற்போது புலப்படுகின்றதா?

கிழக்கு மாகாணத்தில் 33 ஆயிரம் பெண்கள் கணவரை இழந்துள்ளதாகவும் இவர்களில் அதிகமானவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் சராசரியாக மூன்று பிள்ளைகளின் தாய்மார் என கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கின்றது. உண்மையில் இந்த பெண்களின் நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பு இவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு என்னவகையான உதவித் திட்டங்களை செய்துள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் சில உதவித் திட்டங்களை செய்தாலும் அவை நிறைவான திட்டங்கள் இல்லை என்றே கூறப்படுகினற்து.

இதேபோன்று கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையினால் பாரிய அழிவை கிழக்கில் ஏற்படுத்தியது நான்கு ஆண்டுகள் கடந்தும் பொருளாத இழப்பிலிருந்து இன்னும் மீளவில்லை என்றே கூறவேண்டும். இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கதிரவெளியில் 81 குடும்பங்களுக்கு இதுவரையில் நிரந்தர வீடு அமைத்துக் கொடுக்கப்படவில்லை என பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்பொதும் தற்காலிமான கொட்டகையில்தான் வாழ்ந்துவருகின்றார்கள். அன்றாட உணவுக்கே பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் இந்த மக்கள் எவ்வாறு ஒரு நிரந்தர வீடை அமைக்க முடியும். பல நிறுவனங்கள் இப்பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டாலும் இந்த 81 குடும்பங்களை ஏன் கைவிட்டாhர்கள்? இதற்கு 2006,2007 காலப்பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையே காரணம். திருமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையினால் மூதூர் கிழக்கு அழிக்கப்பட்டதன் பின்னர் அடுத்ததாக வாகரை பகுதி அதிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அமைத்துக் கொடுத்த கட்டங்களையே முதல் தாக்கியழித்தனர். இதிலிருந்து இன்னும் மீளவில்லை.

அதுமாத்திரமல்ல கட்டம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கண்துடைப்புக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதே தவிர அவை நிரந்தரமாக பாவிக்க முடியாதளவுக்கு தரமானவையல்ல, இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் இதுவரையில் பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எவ்வாறாயினும் சுனாமிக்கான நிவாரணப் பணிகள் இந்த வருடத்துடன் பூர்த்தியடையவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு மூதூர் கிழக்கு தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பு படைகள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக கூனித்தீவு, கடற்கரைச் சேனை, சூழக்குடா, சம்பூர் பிரகடனப்படுத்தியதையடுத்து சில குடும்பங்கள் இன்னும் சொந்த இடத்திற்கு செல்ல முடியாத நிலையுள்ளது. உண்மையில் இப்பகுதியில் சுனாமியால் ஏற்பட்ட இழப்புக்களை விட இராணுவ நடவடிக்கையினால் ஏற்பட்ட இழப்பே அதிகமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கள் தெரிவிக்கின்றார்.

திருகோணமலை மாவட்டத்தின் கடற்கரையை அண்மித்த மக்கள் சுனாமியினால் ஏற்பட்ட தாக்கத்தினால் அந்த மாவட்டத்திற்குள்ளே இடம்பெயர்ந்தார்கள். ஆனால் இராணுவ நடவடிக்கையினால் தமது சொந்த இடத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டர்கள் இந்த மக்களை ஒரு திட்டமிடப்படாத முறையில் மழைக்காலத்தில் அரசாங்கம் தனது அரசியலுக்காக மனிதாபிமானமற்ற முறையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.