Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை?: இந்தியா தீவிர கண்காணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை?: இந்தியா தீவிர கண்காணிப்பு

on 03-01-2009 12:01

Published in : செய்திகள், இலங்கை

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் போரை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய உளவுத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

தற்போது விடுதலைப் புலிகளின் தலைநகராக செயல்பட்ட கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

கிளிநொச்சியை நோக்கி ராணுவம் முன்னேறத் தொடங்கியதுமே முன் எச்சரிக்கையாக விடுதலைப் புலிகள் தலைமையகம் முல்லைத்தீவு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. கிளிநொச்சியை கைப்பற்றிய ராணுவம் முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து வருகிறது.

இலங்கை ராணுவத்தின் கடும் சண்டை குண்டு வீச்சு காரணமாக விடு தலைப்புலிகள் தங்கள் இருப்பிடங்களை வேறு ரகசிய இடங்களுக்கு மாற்றி வருகிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் தங்கள் கைவசம் இருந்த இடங்களை தொடர்ந்து ராணுவத்திடம் இழந்து வருவதால் அவர்கள் தமிழகத்துக்கு தப்பி வரும் வாய்ப்பு உள்ளது. இதை உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

விடுதலைல்புலிகள் தலைவர் பிரபாகரன் இருப் பிடத்துக்கு சிங்கள ராணுவம் குறிவைத்துள்ளது. அவரை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று சிங்கள ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒருவேளை ராணுவம் நெருங்கி விட்டால் பிரபா கரன் இலங்கை ராணுவத்திடம் சரண்அடைய மாட்டார். அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப் பதாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

தென் ஆப்பிரிக்காவில் இலங்கை தமிழர்கள் ஏராளமான அளவில் வசிக்கிறார்கள். அவர்கள் பிரபாகரனுக்கு அடைக்கலம் தரலாம் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு ராணுவம் நெருக்குதல் கொடுத்து வருவதால் அவர்கள் இலங்கையின் கிழக்கு பகுதியில் ஊடுருவி படுகொலைகளில் ஈடுபடலாம். அங்கு கருணா ஆதரவாளர்கள் ஆதரவுடன் அரசு செயல்பட்டு வருகிறது. எனவே அங்கு விடுதலைப்புலிகள் பதில் தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவை முடியாவிட்டால் கடைசியாக தமிழகத்துக்குள் விடுதலைப்புலிகள் கடல் மார்க்கமாக ஊடுருவலாம். ஏற்கனவே இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வந்து வண்ணம் உள்ளனர். அகதிகள் போர்வையில் ஊடுருவும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகள் தீவிரவாத செயல்களில் செயல்பட மாட்டார்கள் என்றாலும் மறைமுகமாக பல்வேறு நடவடிக்கை களில் ஈடுபடக்கூடும் என்றும் உளவுத்துறை தெரி வித்துள்ளது.

இதையடுத்து தமிழக கடலோர மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு படையும், இந்திய கடற்படையும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

அதிகாலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே இந்தியா இனியும் சொல்லிக் கொண்டே இருந்தால் கடுப்புத்தாங்காமல் மகிந்தா இப்படியே சொல்ல வேண்டிவரும் "இவளவு காலமும் என்ரையைப் பாத்துக் கொண்டிருந்தது போதும் இனியாவது உன்ரயைப் பார்க்கத் தொடங்கு இல்லை என்றால் எதிர்கால மும்பேதாகுதல்களின் பழிக்கு நானே ஆழாகிவிடுவேன்" என்று, வெக்கம் கெட்ட நாராயணன்கள் திருந்துவார்களா இனியாவது.

நாங்கள் எங்கட பிழைகளை கிருத்திக்கொண்டு முன்னேறுவமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.