Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிற்கவேண்டிய நிலை அரசுக்கு வரும்;எம்.பி. என். ஸ்ரீகாந்தா

Featured Replies

விடுதலைப் புலிகள் மீதான யுத்தம் என்ற பெயரில் வடக்கில் அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தையே அவமதித்து விட்டது.

இதற்காக இன்றையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் ஏறி நிற்க வேண்டிய நிலை வரும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. என். ஸ்ரீகாந்தா சபையில் தெரிவித்தார்.

கொடி என்பது எமக்கு பிரச்சினையில்லை.

ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ தமிழ் பேசும் மக்கள் தயாராகவே இருக்கின்றனர். அதற்கான தீர்வுத்திட்டம் அரசாங்கத்திடம் இருக்கின்றதா? யுத்த வெறி தலைவிரித்தாடுகின்ற சிங்களக் கட்சிகளிடம் தமிழன் சுயாட்சிக்கான தீர்வுத்திட்டம் எதுவுமேயில்லை. தமிழ் மக்கள் சிங்களவர்களின் அடிமைகளாக இருக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணைமீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஸ்ரீகாந்தா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் பேசுகையில், தொடர்ந்து கொண்டிருக்கின்ற யுத்தத்தை மேலும் முன்னெடுத்து புலிகளிடம் எஞ்சியிருக்கின்ற ஏனைய பிரதேசங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்பது தெட்டத்தெளிவானது. இதனூடாக புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திட்டமாகவும் இருக்கின்றது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த யுத்தத்திற்கு முடிவு இராது. இது இவ்வருடத்தில் மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து கொண்டிருப்பதுடன் மக்களை இரத்த வெள்ளத்தில் தள்ளுகின்ற யுத்தமாகவே அமையும் என்பதை ஜனாதிபதிக்கு தெ?வித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நிலங்களை பறிகொடுத்தாலும் கூட புலிகள் அடிபணிந்து விடுவார்கள் என்று நினைக்கக்கூடாது. புலிகளை வடக்கின் காடுகளுக்குள் விரட்டிவிட இந்திய அமைதிப்படை முயற்சித்தது அப்படியிருந்தும் உலகின் நான்காவது நிலையிலிருக்கின்ற இந்திய இராணுவப் பிரிவின் அமைதிப்படையை எதிர்த்து போராடி விரட்டிய சந்தர்ப்பங்களையும் மறந்துவிடக்கூடாது. இப்போது படைகள் புலிகளை ஒரு பிரதேச்திற்குள் வரையறுத்திருந்தாலும் அது தொடரும் கதையல்ல.

புலிகளை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற பிடிவாதத்தில்தான் அரசு யுத்தம் செய்து கொண்டிருக்கின்றது. அதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நினைத்தால் அரசாங்கம் யுத்தத்தை தாராளமாக நடத்தட்டும். அது பற்றி எமக்கு பிரச்சினையில்லை. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரே தீர்வு என்று அரசு கூறிக் கொண்டிருக்கின்றது. அப்படியானால் அந்த தீர்வு எவ்வாறானதாக இருக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.

வடக்கு கிழக்கு என்பது எமது தாயகபூமி. முல்லைத்தீவு மீட்கப்பட்டதன் பின்னர் வடக்கிற்கு ஜனநாயகம் என்று கூறினால் அது இன்றைய கிழக்கினை போன்றதாகவே அமையும். ஏனெனில் கிழக்கின் நிலைமை இன்று அவ்வாறு இருக்கின்றது.

ஐக்கிய இலங்கைக்குள் நாம் ஒன்றாக வாழ்வதற்கு தயாராக இருக்கின்றோம். சிங்களவர்களுடன் எமக்கு எவ்வித குரோத?ம் இல்லை.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் எம்மை நாமே ஆட்சி செய்யும் சுயாட்சியை அமைத்துக்கொள்ள அரசாங்கம் இடமளிக்க தயாராக இருக்கின்றதா? தமிழ் பேசும் மக்கள் அரசாங்கத்திடம் கேட்பது இதனைத்தான். ஆனால், சிங்கள இனவாத கட்சிகள் இதற்கு இடமளிப்பதில்லை. ஐக்கிய தேசியக்கட்சி ஜே.வி.பி. உட்பட அனைத்து சிங்களக் கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வினை பெற்றுத்தரப்போவதில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு முன்னர் தமிழ் மக்கள் தமிழராலேயே ஆளப்பட்டனர். ஆனால், அந்த நிலையை பி?த்தானிய ஏகாதிபத்தியம் சிதைத்து விட்டது.

அதிகாரப்பகிர்வு தேவையில்லை என்றும் சர்வகட்சிக்குழுவை கலைத்துவிடுமாறும் ஜே.வி.பி. கூறுகின்றது. மறுபுறத்தில் கருணாவை பிரித்து புலிகளை பலவீனப்படுத்தியது நாமே என்று ஐக்கிய தேசியக்கட்சி கூறுகின்றது. இதுவே தென்னிலங்கையின் நிலைப்பாடு. தென்னிலங்கையின் நிலைப்பாடு இதுவென்றால் இந்த சூழ்நிலையில் சிங்களவர்கள் தமிழர்களின் ஸ்தானத்தில் இருந்திருப்பார்களேயானால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று கேட்கவிரும்புகிறேன்.

பொதுமக்கள் பாதிக்கப்படாதவகையில் யுத்தம் நடத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்து பத்தி?கைக்கு பேட்டி வழங்கியுள்ளார். அது உண்மையாகவிருந்தால் கடந்த 31ஆம் திகதி முரசுமோட்டையில் விமானக் குண்டு வீச்சு ?லம் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் இல்லையா? அதன் பின்னர் ஜனவரி முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் விமானத்தாக்குதல்களால் கொல்லப்பட்ட தமிழர்கள் மனிதர்களில்லையா? வட்டக்கச்சியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் புலிகள் அல்ல அவர்கள் சாதõரண பொதுமக்கள்.

யுத்த முனையில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதன் மூலம் ஜெனீவா ஒப்பந்தம் இலங்கை அரசாங்கத்தால் மீறப்பட்டிருக்கின்றது. பொதுமக்களின் உயிர்களோடு விளையாடுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. ஆனால், புலிகள் மீது யுத்தம் என்ற பே?ல் பொதுமக்களே கொல்லப்படுகின்றனர் இதற்கு அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும் என்றோ ஒருநாள் இன்றைய மஹிந்த அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டே தீரும். புலிகளின் தலைவர் பிரபாகரன் குற்றமிழைத்திருந்தால் அவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தாராளமாக கொண்டு போகலாம். ஆனாலும், அங்கு அரசாங்கம் கூண்டில் ஏறி நிற்கவேண்டிய நிலைவரும்.

வன்னி மக்கள் குறித்து அரசாங்கம் இன்று தலைக்கண்ணீர் வடிக்கின்றது. புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான யுத்தத்தில் இலட்சக் கணக்கான மக்கள் சிக்குண்டுள்ளதை இந்த அரசாங்கம் உணரவில்லையா? வன்னி மக்களை மீட்கப்போவதாக கூறுகின்ற அரசாங்கம் அவர்களை சொர்க்கத்திற்காக அனுப்பப்போகின்றது.

http://www.tamilseythi.com/tamileelam/srik...2009-01-07.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.