Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர்களின் பரிதாப நிலை

Featured Replies

இலங்கையில் தனியாருக்குச் சொந்தமான மிகப் பெரியதும், மக்கள் செல்வாக்கு மிக்கதுமான - இலத்திரனியல் ஊடக நிறுவனமான - மகாராஜா குழுமத்தின் எம்.ரி.வி., எம்.பி.சி. கட்டமைப்புகளின் பிரதான கலையகம் மீது செவ்வாய் அதிகாலை ஆயுதம் தாங்கிய அராஜகக் கும்பல் ஒன்று நடத்திய அட்டகாசத்தில் அந்தக் கலையகம் எரிந்து நாசமானது. அதனால் எழுந்த கரும் புகை மண்டலம் அடங்குவதற்குள், நேற்று கொழும்பு, இரத்மலானையில் ‘த சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க, பட்டப்பகல் வேளையில் நட்டநடு வீதியில் வைத்து ஆயுததாரிகளால் சுடப்பட்டிருக்கின்றார். குண்டு மழையை எதிர்கொண்ட அவர், வைத்தியசாலையில் நீண்ட பலமணி நேர உயிர்ப் போராட்டத்தின் பின்னர் மரணமாகியிருக்கின்றார்.

யுத்தச் செயற்பாடுகளில் இருந்து அபிவிருத்தி நடவடிக்கைகள் வரை ஒவ்வொன்றிலும் அரசுத் தரப்பின் ஊழல்களை, அட்டூழியங்களை, கையாடல்களை, முறைகேடுகளைத் தமது வார வெளியீட்டில் தைரியத்துடன் தோலுரித்துக்காட்டி அம்பலப்படுத்தி வந்தவர் லஸந்த.

இராணுவ வெற்றி என்ற பெயரில் சிறுபான்மையினரான ஈழத் தமிழர்களின் மனம் புண்படும்படி தென்னிலங்கை எவ்வாறு நடந்து கொண்டது என்பதை மனம் நொந்து - விசனித்தபடி - தமது கடந்த வார ஆசிரியர் தலையங்கத்தில் விவரித்திருந்தார் அவர்.

ஆட்சிப் பீடத்தின் - அரசுத் தரப்பின் - முறைகேடுகளை அவர் புலனாய்வு செய்து துணிச்சலுடன் அக்குவேறு, ஆணிவேறாகப் புட்டுப் புட்டு வைத்து அம்பலப்படுத்தி வந்ததால் அரசியல் மற்றும் படைத் தலைமைகளுக்கு வேண்டாதவராக - சர்ச்சைக்குரியவராக - அவர் கருதப்பட்டார். அதுவே அவருக்கு வினையைத் தேடி - வாங்கி - தந்திருக்கின்றது.

கிளிநொச்சி வெற்றி மிதப்பைத் தொடர்ந்து தென்னிலங்கையில் கட்டவிழும் சம்பவங்கள் மக்களை - குறிப்பாகத் தமிழர்களை - பெரும் பதற்றத்துக்குள்ளும் சஞ்சலத்துக்குள்ளும் ஆழ்த்தியிருக்கின்றன.

எம்.ரி.வி. கலையகம் எரிக்கப்பட்டு அடுத்த நாள் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போதே இத்தடை நடவடிக்கையின் பெறுபேறு - விளைவு - எப்படி இருக்கப்போகின்றது என்ற சந்தேகமும் கிளப்பப்பட்டது.

புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை அதற்கு எதிரான சகல நடவடிக்கைகளையும் இலங்கை அரசு முழு அளவிலே ஆரம்பித்து நீண்ட காலமாகி விட்டது. எனவே உத்தியோகபூர்வமாகத் தடை என்ற ஓர் அறிவிப்பைப் புதிதாக - பலத்த ஆரவாரத்துடன் - இலங்கை அரசு எடுத்தாலும் புலிகளுக்கு அதனால் புதிய நெருக்கடி ஒன்றும் ஏற்பட்டுவிட மாட்டாது என்பது தெளிவு.

ஆக, இந்தத் தடை உத்தரவால், ஊடகவியலாளர்களுக்குத்தான் நெருக்கடி நேரும் என்று கருதப்படுகின்றது. புலிகள் பற்றிய செய்திகள், விவரங்களை வெளியிடுவோர், ஊடகவியலாளர் என்ற முறையில் புலிகளுடன் தொடர்பாடலைப் பேணும் பத்திரிகையாளர்கள் போன்றோரை புலித்தடை என்ற - பொதுசனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான - வர்த்தமானி அறிவித்தல் மூலம் மடக்குவது ஒன்றுதான் இத்தடை மூலம் அரசுத் தரப்புச் செய்யக்கூடிய பயனுள்ள விவகாரமாகும்.

எனவே, எம்.ரி.வி. கலையகம் மீதான கொடூர அராஜகம், புலிகள் மீதான தடை என்ற அரசின் அறிவிப்பு, ‘த சண்டே லீடர்’ ஆசிரியர் நட்டநடு வீதியில் சுடப்பட்டமை போன்றவை இலங்கையில் ஊடக சுதந்திரம் மீளமுடியாத பெரும் இக்கட்டுக்குள் சிக்கத் தொடங்கி விட்டது என்பதைக் கோடி காட்டுகின்றன.

இதையே கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கும் சுட்டிக்காட்டியிருக்கின்றா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.