Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிராமப்புற மக்களின் பிள்ளைகள் வடக்கில் போராடும்போது ஆட்சிபுரிவோரின் பிள்ளைகள் இங்கிலாந்திலிருந்து யுத்தம் செய்கின்றனர்

Featured Replies

ஜனாதிபதி ராஜபக்ஷ குடும்பத்தினர் இந்நாட்டின் வளங்களை பாரிய அளவில் கொள்ளையிட்டு வருகின்றனர். அவற்றை மூடி மறைப்பதற்காக அவர்கள் மக்கள் முன் வைத்திருக்கும் மக்களுக்கு காட்டும் சித்திரம் யுத்தமாகும் .

நாட்டின் கிராமப்புறத்தில் வாழும் மக்களின் பிள்ளைகள் வடக்கில் யுத்தகளத்தில் போராடிக்கொண்டிருக்கும் போது ஆட்சி நடத்துவோரின் பிள்ளைகள் இங்கிலாந்திலிருந்த வண்ணம் யுத்தம் செய்கின்றனர் என எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் ஐ.தே.கட்சி முதலமைச்சர் வேட்பாளரான எஸ்.பி. திஸாநாயக்க கலேவெல பேலியகந்த என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரை நிகழ்த்துகையில் கூறியதாவது; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொன்னான காலம் 2006 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் காலமாகும். மக்கள் விடுதலை முன்னணியினரின் தோளில் ஏறி அவர் அதிகாரத்திற்கு வந்தார். ஹெல உறுமய கட்சியின் ஆசீர்வாதமும் அவருக்கு அப்போதிருந்தது. ஆனால், இன்று மக்கள் விடுதலை முன்னணியினர் மஹிந்த ராஜபக்ஷவை பட்டை கழற்றிக் கொண்டிருக்கின்றனர். இப்போது மஹிந்தவின் அதிகாரம் வெறும் கனவாகும் தருணம் உதயமாகியுள்ளது .

காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி தொண்டமான் அன்று தமிழ் மக்களை தமது சொந்தக்கால்களில் நிற்கக்கூடிய மக்களாகவும் இனமாகவும் மாற்றியிருந்தார். மலையக தமிழ் மக்கள் அன்னார் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தனர். மக்களிடையே பெரும் வரவேற்பும் அன்னாருக்கு இருந்தது. ஆனால், இன்று மலை நாட்டுத் தமிழ் மக்கள் தொண்டமானை நோக்கிக் கல்லெறிகின்றனர். தொண்டமான் மீது குரோதம் கொண்டுள்ளனர். தமிழ் மக்கள் சந்திரசேகரனையும் நிராகரித்து விட்டனர்.

எமது விவசாயக் கைத்தொழில்கள் யாவும் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளன. ஒரு கிலோ கிராம் தேயிலை கொழுந்தின் விலை பதினைந்து ரூபாவினால் வீழ்ச்சி அடைந்துள்ளது. இறப்பர் பால் வெட்டப்படுவது தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. பதிலாக இறப்பர் மரங்களை விறகிற்காக வெட்டத் தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு இறப்பரின் விலை வீழ்ச்சியடைந்துவிட்டது.

எமது தேசிய வருமானத்தில் பெரும் பங்குவகித்து வரும் புடைவைக் கைத்தொழில் துறையும் பின்னடைவை கண்டு வருகிறது.கடந்த மூன்று மாத காலத்தில் இத்துறையில் பாரிய வீழ்ச்சி எற்பட்டுள்ளது. சுற்றுலாக் கைத்தொழில் துறையிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாக் கைத்தொழில் மோசமடைந்ததால் உல்லாசப் பயணஹோட்டல்கள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் சிறிது சிறிதாக குறைந்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்த நாட்டின் தேசிய வருமானத்தில் 25 வீதத்தை எமக்கு ஈட்டித் தருவது மத்திய மாகாணமாகும். மத்திய மலைநாட்டிலிருந்துதான் 77 வீதமான மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. எனினும் இம்மாகாணத்தின் அபிவிருத்தியின் பொருட்டு அரசாங்கம் ஒரு சதவீதமான நிதியை மாத்திரமே ஒதுக்கித்தருகிறது.

13 ஆவது அரசாங்க சீர்திருத்த யாப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய அதிகாரங்கள் இதுகாறும் பயன்படுத்தப்படவில்லை. உதவி பொலிஸ்மா அதிபரின் கீழுள்ள அனைத்துப் பொலிஸாரினதும் நிர்வாகம் மாகாண சபைகளுக்குரியது.

இவை தவிர மாவட்ட செயலாளர்களின் கீழ் சகல அரச உத்தியோகத்தர்களின் நிருவாகம் மற்றும் தேசிய வைத்தியாசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வைத்தியசாலைகளின் நிருவாகம் என்பனவும் மாகாண சபைக்குரியனவாகும்.

இவ்வரசாங்கம் கல்வியை சீர்குலைத்து வருகின்றது. குறைந்தபட்சம் பரீட்சையொன்றையாயினும் சீராக நடத்திக் கொள்ள முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

மத்திய மாகாணசபை தேர்தலை முன்னிட்டு தற்போது விண்ணப்பப்படிவங்கள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணிகள் பகிர்ந்தளிக்கப்படவிருப்பதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.