Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ்டீன்:- கோதபயா ராஜபக்ஷே மற்றும் சரத்பொன்சேகா மீது வழக்கு தொடரப்படும்

Featured Replies

Welcome to Tamils Against Genocide

http://www.tamilsagainstgenocide.org/

கோதபயா ராஜபக்ஷே மற்றும் சரத்பொன்சேகா மீது வழக்கு தொடரப்படும்-அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ்டீன்

சென்னை:இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்புத்றை செயலாளர் கோதபய ராஜபக்ஷே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் டீன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் உதவி தலைமை வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்ற புரூஸ் டீன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இலங்கையில், தமிழர்களைப் படுகொலை செய்தது குறித்தும், அவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக, கோதபய ராஜபக்ஷே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார். இதற்காக, அவர்கள் மீது ஆயிரம் பக்கங்களில் உருவாக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை, அமெரிக்க அரசிடம் அடுத்தமாதம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை ஆய்வு செய்து, அமெரிக்க அரசே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்தும் என்றும் அவர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளில், 3 ஆயிரம் தமிழர்கள் நேடிரயாக மற்றும் மறைமுகாமாகக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுவரை 13 லட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

US lawyer wants Lankan leaders tried for genocide

http://timesofindia.indiatimes.com/Chennai...how/4023923.cms

Edited by Tamilmagan

  • தொடங்கியவர்

கோத்தபாய ராஜபக்ச மற்றும் சரத்பொன்சேகா மீது வழக்கு தொடரப்படும்: அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன்

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபய ராஜபக்ஷே மற்றும் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் உதவி தலைமை வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்ற புரூஸ் பெய்ன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்போது, அமெரிக்கப் பிரஜையான கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக அமெரிக்க தண்டனை சட்டக்கோவையின் 1091 ம் பிரிவின் கீழ் இனப்படுகொலை குற்றம் தொடர்பான 1000 பக்கங்களைக் கொண்ட மாதிரி குற்றப்பத்திரமொன்றை தயாரித்துள்ளதாகவும், அதை இரு வாரங்களுக்குள் வெளியிடுவதுடன் அமெரிக்க நாடாளுமன்றம் நீதி மற்றும் வெளிவிவகாரத் திணைக்களங்கள் ஆகியவற்றிடம் கையளிக்கவுள்ளதாகவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இதனை ஆய்வு செய்து, அமெரிக்க அரசே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்தும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 3 ஆண்டுகளில், 3 ஆயிரம் தமிழர்கள் நேடிரயாக மற்றும் மறைமுகமாகக் கொல்லப்பட்டுள்ளதாகவும், அது நாளொன்றுக்கு சுமார் 3 கொலைகள் மற்றும் 3 காணாமல் போதல் சம்பவங்கள் விகிதமாகும்.

இதுவரை 13 இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்கள் பட்டினி, மருந்துகளின்மை என்பனவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த நாட்டு மக்களுக்கான உணவை நிராகரிக்கும் அரிதான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். மருந்துகள் காலாவதியானவையாக இருப்பதுடன் மாட்டுவண்டில்கள் அம்புலன்ஸ்களாக பயன்படுத்தப்படுகின்றன. அங்குள்ள நிலைமை கற்காலத்திற்கு ஒப்பானவையாகும்.

தமிழர் பிரதேசங்களில் 189 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு இலங்கை இராணுவத்தின் அனுமதியின்றி ஒரு விரலைக்கூட அசைக்கமுடியாது. ஆயுதப் படைகளின் அக்கிரமங்கள் சர்வதேசத்தின் முன் வெளிச்சமாகும் என்பதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொலைக்காட்சி அலைவரிசைகள் காலூன்ற அனுமதிக்கப்படுவதில்லை.

இலங்கை அரசாங்கம் இன அழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக பயங்கரவாத நடவடிக்கை என முத்திரை குத்தியது. இது இரு இனங்களுக்கிடையிலான யுத்தம் அல்ல. மாறாக அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இன அழிப்பாகும். நாம் உலகின் கவனத்தை யுத்தத்தினால் தினமும் பலியாகும் அப்பாவிகளின் பக்கம் திருப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தாம் இலங்கைத் தமிழர் விவகாரத்தை கையாள்வதற்கு அமெரிக்காவிலுள்ள அரசியல் வாதிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வது கடினம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள புரூஸ் பெய்ன் அமெரிக்க ஊடகங்கள் தனக்கு உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் பிரதி உதவி சட்டமா அதிபரான புரூஸ் பெய்ன் இன அழிப்புக்கு எதிரான தமிழர் குழுவின் ஆலோசகராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

சில இந்திய உறவுகள் அவரிடம் சிறிலங்கா அரசின் மனிதஉரிமைகள் பற்றிய தொகுப்பினைக் கொடுக்க விரும்புகின்றார்கள். யாராவது மகிந்த அரசின் கொடுமைகள் பற்றித் தொகுத்துத் தர இயலுமா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.